என் மலர்

    நீங்கள் தேடியது "Telugu Desam MLA"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.ராவல கிஷோர்பாபு திடீரென பதவி விலகினார். #TeluguDesamMLA

    நகரி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ராவல கிஷோர்பாபு. இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார்.

    மேலும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து அதற்கான கடிதத்தை முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி இருக்கிறார்.

    கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும், கடந்த சில மாதங்களாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறி அவர் தனது எம்.எல்.ஏ. பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

     


    2014-ம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ராவல கிஷோர்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சந்திரபாபு நாயுடுவின் மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

    அதன்பின் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது கிஷோர்பாபு நீக்கப்பட்டார். அதிலிருந்து அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இதற்கிடையே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.

    கிஷோர்பாபு தனது ஆதரவாளர்களுடன் நாளை நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேருவார் என்று தெரிகிறது.

    திருப்பதி சென்றுள்ள ஆந்திர சபாநாயகர் சிவபிரசாத் ராவ் கூறும்போது, “கிஷோர்பாபு எம்.எல்.ஏ. எனது அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி இருக்கிறார். நான் திருப்பதியில் இருந்து சென்றதும் அந்த கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #TeluguDesamMLA

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தெலுங்கானா மாநில எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    நகரி:

    கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கானா மாநில எம்.எல்.சி. (மேலவை) தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுப் போட நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன் சன்னிடம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரூ. 5 கோடி பேரம் பேசி ரூ.50 லட்சம் முன் பணம் கொடுத்த வீடியோ வெளியானது.

    மேலும் ஸ்டீபன் சென்னிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேனில் பேசியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ரேவந்த்ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவந்த்ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.

    இந்த நிலையில் ரேவந்த் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் அவரது தொகுதியில் உள்ள வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

    ×