என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ ராஜினாமா"

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ பல்தேவ் சிங், கட்சியில் இருந்து விலகியதுடன், கெஜ்ரிவால் மீது சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். #PunjabAAP #AAPMLAResigns
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் ஜெய்டோ சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மாஸ்டர் பல்தேவ் சிங். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் எம்எல்ஏ பல்தேவ் சிங், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில், கட்சி தலைமை தனது அடிப்படை சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை முற்றிலும் விட்டுக்கொடுத்துவிட்டதால் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் நதி நீர் பிரச்சனையில் கெஜ்ரிவால் இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும், அவர் தலித் மக்களுக்கு விரோதமானவர் என்றும் குற்றம்சாட்டினார்.



    மேலும், கெஜ்ரிவாலின் சர்வாதிகார நடவடிக்கைகளால் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் பல்தேவ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சுக்பால் சிங் கைரா, சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. #PunjabAAP #AAPMLAResigns
    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.ராவல கிஷோர்பாபு திடீரென பதவி விலகினார். #TeluguDesamMLA

    நகரி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ராவல கிஷோர்பாபு. இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார்.

    மேலும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து அதற்கான கடிதத்தை முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி இருக்கிறார்.

    கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும், கடந்த சில மாதங்களாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறி அவர் தனது எம்.எல்.ஏ. பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

     


    2014-ம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ராவல கிஷோர்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சந்திரபாபு நாயுடுவின் மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

    அதன்பின் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது கிஷோர்பாபு நீக்கப்பட்டார். அதிலிருந்து அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இதற்கிடையே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.

    கிஷோர்பாபு தனது ஆதரவாளர்களுடன் நாளை நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேருவார் என்று தெரிகிறது.

    திருப்பதி சென்றுள்ள ஆந்திர சபாநாயகர் சிவபிரசாத் ராவ் கூறும்போது, “கிஷோர்பாபு எம்.எல்.ஏ. எனது அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி இருக்கிறார். நான் திருப்பதியில் இருந்து சென்றதும் அந்த கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #TeluguDesamMLA

    ×