search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahul"

    பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #akhilesh #rahulgandhi #Priyanka

    லக்னோ:

    காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த 23-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது அரசியல் பிரவேசத்தை கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பிரியங்காவால் உத்தரபிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதனால் அகிலேஷ் யாதவ் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார். நேற்று முதல் முறையாக பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், “பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன்” என்றார்.


    அதே சமயம் ராகுல்காந்தி சமீபத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவை மதிக்கிறேன் என்று கூறியிருப்பதால் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்று அகிலேஷ் யாதவிடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    தொடர்ந்து அகிலேஷ் யாதவ் பதில் அளிக்கையில் பா.ஜனதாவை மட்டுமே விமர்சித்தார். காங்கிரஸ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தார். #akhilesh #rahulgandhi #Priyanka

    உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். #rahulgandhi #UPElectionCoalition

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்தன.

    காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டன. சோனியா, ராகுலுக்கான ரேபரேலி, அமேதி தொகுதியை ஒதுக்கி அதில் தாங்கள் போட்டியிட மாட்டோம் என்று தெரிவித்தன.

    அகிலேஷ் யாதவ்- மாயாவதியின் இந்த முடிவால் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

    இந்த நிலையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட்டது தவறு என்று கூறியுள்ளார். துபாய் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஊடகங்களில் சில அறிக்கைகள் கேள்விப்பட்டேன். ஆனாலும் நாங்கள் ஒருங்கிணைந்து பிரதமர் மோடியை தோற்கடிப்போம் என்பது உறுதியாகும்.


    உத்தரபிரதேசத்தில் காங்கிரசை குறைத்து மதிப்பிட்டது மிகப்பெரிய தவறாகும் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

    சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜனதாவை தோற்கடிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த கால அனுபவத்தை வைத்து இதை நாங்கள் சொல்கிறோம்.

    மாறாக காங்கிரசின் தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பா.ஜனதா வாக்குகளை பங்கிட்டு விடுகிறது. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடலாம்.

    பிரதமர் மோடியை வீழ்த்துவதே எங்களது முதல் இலக்காகும். சில மாநிலங்களில் நாங்கள் பலம் பெற்று முதன்மை கட்சியாக இருக்கிறோம். பா.ஜனதாவை நேரடியாக எதிர்க்கிறோம்.

    மராட்டியம், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். பல்வேறு மாநிலங்களில் கூட்டணிகளை ஒருங்கிணைப்போம் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. #rahulgandhi #UPElectionCoalition

    நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். #SmritiIrani #Rahul #RobertVadra
    புதுடெல்லி:

    பணமோசடி வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் உதவியாளரை ஜாமீனில் வெளி வரமுடியாத விதத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது.

    இதுகுறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நிருபர்களிடம் கூறும்போது, “ராபர்ட் வதேராவின் தனி உதவியாளர் மனோஜ் அரோராவுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை. எனவே நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேரா தனது உதவியாளர் மனோஜ் அரோராவை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறவேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதை உறுதி செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.



    மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்ற மக்களவையில், ரபேல் விவாதத்தின்போது ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது ராகுல்காந்தி கண் சிமிட்டியது ஒரு பெண் மந்திரியின் உணர்வுகளை காயப்படுத்துவது ஆகும். மேலும் இது சபையின் கண்ணியத்தை அவமதிப்பது போலவும் உள்ளது” என்றார்.
    நாடாளுமன்றத்தில் கேள்விகளை சந்திக்க மோடிக்கு துணிச்சல் இல்லை, அவரை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #AIADMK #Modi
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று 193-வது விதியின் கீழ், ரபேல் விமான ஒப்பந்த பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி, அரங்கேற்றப்பட்ட பேட்டியில் 90 நிமிடங்கள் பேசியுள்ளார். அதிலும் ரபேல் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ரபேல் பிரச்சினையில், தன் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு கிடையாது என்று அவர் கூறியது உண்மை அல்ல.

    ஒட்டு மொத்த நாடும் இந்த ஒப்பந்தம் குறித்து அவரிடம் நேரடியாக கேள்வி கேட்கிறது.

    பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்லிடம் இருந்து இந்த ஒப்பந்தம் பறிக்கப்பட்டது. ‘இரண்டு ஏ’ பெயர் கொண்டவரது பையில் ரூ.30 ஆயிரம் கோடியை மோடி போட்டார். அந்த நபர், மோடியின் அன்பு நண்பர்.

    காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கிறோம். அதற்கு பா.ஜனதா பயப்பட தேவையில்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அதனால், அ.தி.மு.க. எம்.பி.க்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடியை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கிறார்கள். இங்கே அமர்ந்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க. உறுப்பினர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். பிரதமர் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். அவருக்கு நாடாளுமன்றத்துக்கு வந்து கேள்விகளை சந்திக்கும் துணிச்சல் இல்லை.

    இப்போது என்னிடம் ஒரு ஆடியோ டேப் இருக்கிறது. கோவா மாநில மந்திரி விஷ்வஜித் ரானே, ரபேல் விவகாரம் தொடர்பான ஒரு கோப்பை முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தனது படுக்கை அறையில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த ஆடியோ டேப்பை போட்டுக்காட்ட சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    அப்போது, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு, “அந்த டேப் போலியானது, தில்லுமுல்லு செய்து உருவாக்கப்பட்டது. அது உண்மை என்று ராகுல் காந்தியால் அங்கீகரிக்க முடியுமா? அது பொய் என்று நிரூபணமானால், அவர் உரிமை பிரச்சினையை சந்தித்து, வெளியேற்றப்பட வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

    அதற்கு ராகுல் காந்தி, தன்னால் அதை அங்கீகரிக்க முடியாது, சபாநாயகர் அனுமதி இல்லாமல் போட்டுக்காட்ட மாட்டேன் என்று கூறினார்.

    இதனால் ஆவேசம் அடைந்த அருண் ஜெட்லி, “அது போலி என்று விஷ்வஜித் ரானே மறுத்துள்ளார். அது ராகுல் காந்திக்கே தெரியும். அதனால் பயப்படுகிறார். இந்த மனிதர் திரும்பத்திரும்ப பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவரது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது“ என்று கூறினார்.

    அப்போது ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.   #RahulGandhi #AIADMK #Modi 
    பாடகி சின்மயின் கணவரும், நடிகருமான ராகுலை, நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு செய்திருக்கிறார். #Samantha #Chinmayi
    பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ இயக்கத்தை குறை கூறி இருந்தார். அதில் “நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் மீ டூவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது குப்பை” எனப் பேசியிருந்தார்.

    இது குறித்து சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தர், தனது சமூகவலைதள பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை பதிவிட்டார். அதில் தனது மனைவியின் துணிச்சலைப் பாராட்டியதோடு பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் எனக் கூறி இருந்தார்.



    இந்நிலையில் இது குறித்து நடிகை சமந்தா ராகுலின் டுவிட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில், “நிறைய பெண்களைவிட உங்களுக்குச் சிறப்பான புரிதல் இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
    எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். #SunilGavaskar #KLRahul #IndiavsAustralia
    மும்பை:

    பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. பெர்த் டெஸ்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக இந்த டெஸ்டில் சொதப்பிய ராகுலை (2 ரன் மற்றும் 0) கடுமையாக விமர்சித்துள்ளார். கவாஸ்கர் கூறியதாவது:-



    தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து நமது அணியில் வீரர்கள் தேர்வில் தொடர்ந்து மிகப்பெரிய தவறு நடந்து வருகிறது. இதனால் பாதிப்பு அணிக்கு தான். வீரர்கள் தேர்வு சரியாக இருந்திருந்தால் பல போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க முடியும். குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை களைந்து, சரியான கலவையில் அணியை தேர்வு செய்தால் நிச்சயம் எஞ்சிய இரு டெஸ்டில் வெற்றி பெற முடியும். ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியாமல் போனால், அதன் பிறகு இந்திய கேப்டன், பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்து தேர்வு குழு சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

    எந்த வீரரும் காயம் அடையாத பட்சத்தில் கடைசி இரு டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கக்கூடாது. அவர் தாயகம் திரும்பி, கர்நாடக அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று கருதுகிறேன். பெர்த் டெஸ்டின் முதலாவது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் மார்கஸ் ஹாரிசும், ஆரோன் பிஞ்சும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை நன்றாக சமாளித்து நிலைத்து நின்று ஆடியதே போட்டியில் திருப்பு முனையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.  #SunilGavaskar #KLRahul #IndiavsAustralia
    ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #tamilisaisoundararajan #BJP
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் மீது தவறு இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. திரும்ப திரும்ப தவறான ஒரு கருத்தை மக்களிடம் பதிய வைத்து, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இந்த தேசத்து மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.



    இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ததற்கு மத்திய அரசு பொறுப்பாகாது என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கும் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பையே காங்கிரஸ் கேள்வி குறியாக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #BJP #tamilisai 
    ரபேல் விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தவறான பிரச்சாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அம்பலமாகியிருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா வலியுறுத்தினார். #RafaleCase #AmitShah #Rahulgandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பினை பாஜக வரவேற்றுள்ளது. அத்துடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் இன்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர்.

    இந்த  தீர்ப்பு குறித்து பாஜக தலைவர் அமித் ஷா கூறுகையில், “ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் மத்திய அரசுக்கு எதிராக பரப்பப்பட்ட தவறான பிரச்சாரத்தை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது.



    ரபேல் ஒப்பந்த நடைமுறைகளில் தவறு நடந்ததாகவோ, வணிக ஆதாயம் இருந்ததாகவோ நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். ரபேல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அவருக்கு அளித்தது யார் எனவும் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். #RafaleCase #AmitShah #Rahulgandhi
    மேகதாது அணை பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை கூறிய தமிழிசைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #MekedatuDam
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

    ஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

    இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.

    கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா? கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.

    இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam
    ‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக்கானோர் முன்பு 10 தடவை சொல்வேன் என்று ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். #BharatMataKiJai #Modi #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல், 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சிகார் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    காங்கிரசுக்கு ஒரு வாரிசு தலைவர் இருக்கிறார். அவர் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளார். எந்த கூட்டத்திலும், ‘பாரத் மாதா கி ஜே’ என்று மோடி தனது பேச்சை தொடங்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.



    இங்குள்ள மக்கள் முன்பு அந்த கட்டளையை நான் உடைக்கிறேன். ‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக் கானோர் முன்பு 10 தடவை சொல்வேன்.

    எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லி மரணத்தை தழுவி உள்ளனர். அத்தகைய கோஷத்தை சொல்லக்கூடாது என்று கூறியதற்காக, ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். பாரத மாதாவை அவர் இழிவுபடுத்தி விட்டார்.

    நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக் கும் காங்கிரசே காரணம். அக்கட்சியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ராஜஸ் தானில் நுழைய விடக்கூடாது. கற்பழிப்பு வழக்கில் சிறை சென்றவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ‘சீட்’ கொடுத்துள்ளார்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலாகேடா நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்கிறார். ஆனால், உண்மையில் அவர் அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்காகத்தான் வேலை செய்கிறார்.

    எனவே, அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் ‘அனில் அம்பானி கி ஜே’, ‘நிரவ் மோடி கி ஜே’, ‘மெகுல் சோக்சி கி ஜே’ என்று சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பாக சோனியா, ராகுல் காந்தியின் வருமான கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
    புதுடெல்லி:

    அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் துவக்கப்பட்டது.

    மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.

    பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உண்டு.

    இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி  ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.

    2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும்.

    யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் கட்சி வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது.

    அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி மதிப்புள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.

    தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல்  AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது.

    இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது.

    2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் 50 லட்சம் ரூபாய் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது.

    இதற்கிடையில், கடந்த  2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    இதற்கு தடை விதிக்ககோரி டெல்லி ஐகோர்ட்டில் இவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோரை கொண்ட அமர்வு 9-10-2018 அன்று உத்தரவிட்டது.



    இதைதொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவின்மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும், கடந்த 2011-12 ஆண்டுக்கான சோனியா, ராகுல் காந்தியின் வரவு-செலவு கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்தனர். எனினும், தற்போது இங்கு விசாரணையில் உள்ள இந்த வழக்கு முடியும்வரை இந்த உத்தரவை அமல்படுத்த கூடாது என்று நிபந்தனையும் விதித்துள்ளனர். #NationalHerald #SoniaITcase #RahulITcase

    ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். #PMModi #Rahul

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளும் அம்மாநிலத்தில் கடும் சவாலுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.

    ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் செய்யவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே பா.ஜ.க. அங்கு மீண்டும் வெற்றி பெற இயலாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கருத்துக் கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து உள்ளன.

    இதனால் கணிசமான அளவு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு கொடுக்க வில்லை. அவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இது ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தானில் பா.ஜ.க. தத்தளித்தப்படி திணறிக் கொண்டிருப்பதை அறிந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், அதற்கு ஏற்ப அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் அவர் 5 தடவை ராஜஸ்தானுக்கு சென்று ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அஜ்மரில் உள்ள ‌ஷரிப் மற்றும் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு ராகுல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

    அஜ்மர், ஜெய்சல்மார், பொக்ரான், ஜலூர், ஜோத்பூர் ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட கூட்டங்களில் ராகுல் பேச உள்ளார்.

    இதற்கிடையே பிரதமர் மோடியும் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய ராஜஸ்தான் சென்றுள்ளார். இதனால் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    பிரதமர் மோடி பில் வாரா, துங்கர்பூர், கொடா ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். ராஜஸ்தானில் வரும் 5-ந் தேதி தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது.

    பிரசாரத்துக்கு இன்னும் 9 நாட்களே அவகாசம் உள்ளதால் அங்கு உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. #PMModi #Rahul

    ×