search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Mata Ki Jai"

    • கோழிக்கோட்டில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி பங்கேற்றார்.
    • அப்போது, பாரத் மாதா கீ ஜே என கூறாதவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரு யுவகேந்திரா மற்றும் கேலோ பாரத் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவர். இதற்கு காரணம் ராஜீவ் காந்தி மந்திரிசபையில் அவர் ராஜினாமா செய்தது, ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதே ஆகும். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தற்போது முத்தலாக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    நாட்டின் மக்கள்தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். பிரதமர் மோடியின் வாக்குறுதி மக்களுக்கான வாக்குறுதியாகும். அதனால்தான் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாக ஊழல் இன்றி செயல்படுத்த முடிந்தது என தெரிவித்தார்.

    பேச்சின் முடிவில் அவர் 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கமிட்டார். அதற்கு பார்வையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், இந்தியா உங்கள் தாய் அல்லவா? என்று கேட்டார். சொல்லுங்கள், சந்தேகம் உள்ளதா என மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.

    அதன்பின், அவர் திரும்ப திரும்ப முழக்கத்தைச் சொன்னார். அப்போது முழக்கமிடாமல் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டினார். அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த மத்திய மந்திரி, பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என காட்டமாக கூறினார்.

    தொடர்ந்து அவர், பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டார். அப்போது அங்கிருந்த அனைவரும் பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக்கானோர் முன்பு 10 தடவை சொல்வேன் என்று ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். #BharatMataKiJai #Modi #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல், 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சிகார் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    காங்கிரசுக்கு ஒரு வாரிசு தலைவர் இருக்கிறார். அவர் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளார். எந்த கூட்டத்திலும், ‘பாரத் மாதா கி ஜே’ என்று மோடி தனது பேச்சை தொடங்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.



    இங்குள்ள மக்கள் முன்பு அந்த கட்டளையை நான் உடைக்கிறேன். ‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக் கானோர் முன்பு 10 தடவை சொல்வேன்.

    எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லி மரணத்தை தழுவி உள்ளனர். அத்தகைய கோஷத்தை சொல்லக்கூடாது என்று கூறியதற்காக, ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். பாரத மாதாவை அவர் இழிவுபடுத்தி விட்டார்.

    நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக் கும் காங்கிரசே காரணம். அக்கட்சியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ராஜஸ் தானில் நுழைய விடக்கூடாது. கற்பழிப்பு வழக்கில் சிறை சென்றவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ‘சீட்’ கொடுத்துள்ளார்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலாகேடா நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்கிறார். ஆனால், உண்மையில் அவர் அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்காகத்தான் வேலை செய்கிறார்.

    எனவே, அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் ‘அனில் அம்பானி கி ஜே’, ‘நிரவ் மோடி கி ஜே’, ‘மெகுல் சோக்சி கி ஜே’ என்று சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×