search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prohibition"

    • வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சீர்காழி:

    சீர்காழி மின்சார வாரிய செயற்பொ றியாளர் லதா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, கற்பகம் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை 29-ம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது.
    • விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சிக்கரசம்பாளையம், ஜீவா காலனி, ராமபட்டிணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் வாழும் பகுதிக்குஅருகில் இயங்கும் கல் குவாரிகள் செயல் பாடுகளால் அதீத வாழ்வியல்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இக்குவாரிகளின் செயல் பாடுகள் விதிகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக வெடிகளை பயன்படுத்துவதால் அதிக ரசாயன மாசு ஏற்படுகிறது.

    மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் முறையாக புகை மாசுகளை கட்டுப்படுத்தக் கூடிய எந்த ஒரு நடவடிக்கையும்மேற்கொள்ளாத காரணத்தால் அதிக மாசு மற்றும் குழந்தைகள் வெடிச்சத்தம் கேட்டு அழுது கொண்டும் விரக்தியிலும்உள்ளார்கள். விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.கிணற்றின் சுற்றுச்சுவர்கள் சேதமடைகிறது. ஆகவே உடனடியாக நடவடிக்கைஎடுத்து மேற்கண்ட குவாரிகளில் இயக்கத்தை நிறுத்தி உரிமத்தை ரத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • தோண்டிய குழிகள், முறையாக மூடப்படாமல் வெறும் மண் போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
    • இப்பணி நடைபெறும் பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டிய குழிகள், முறையாக மூடப்படாமல் வெறும் மண் போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    தற்போது இந்த குழிகளில் ஜல்லி கலவை போட்டு நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் தற்போது குறுக்கு வீதிகளிலிருந்து குழாய் பதித்து, கழிவுநீர் பிரதான குழாய்க்கு செல்லும் வகையில், பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக இப்பணி நடைபெறும் பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளின் பொறுப்பு.
    • பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், மீறுபவர்களுக்கு அபதாரம்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளில் பொறுப்பு குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் தலைமை வகித்தார்.

    முகாமில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ரமணன், ஒன்றிய பொறியாளர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செயல்பாடுகள் சமூக தணிக்கை மேற்கொள்வதில் ஊராட்சிகளின் பொறுப்பு கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட பயிற்சி வழங்கினர்.

    மேலும் ஊராட்சிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலு மாக தடை செய்து, மீறுபவர்களுக்கு அபதாரம் விதிப்பது குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    முகாமில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் தொடர்ந்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    • போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா போன்ற போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொது மக்களின் நலனை பாதிக்கும் இந்த போதை பொருள்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் நபர்கள் பிடிபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் போலீஸ் எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் இதற்கு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நீங்கள் எவ்வளவு தான் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினாலும் நாங்கள் செய்வதை செய்து கொண்டே இருப்போம் என்று ஒரு சிலர் தொடர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி விழுப்புரம் டி.எஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் நகரில் சாலை ஓரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சிறு கடை மற்றும் பெட்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த சோதனை வலுது ரொட்டி சாளமேடு உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் தொடர்ந்தது. இதில் வலுதுரொட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்த பூபாலன் மகன் தேவ் என்பவர் அவரது வீட்டின் முன் வைத்திருந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து தேவை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கோவில் தெப்பக்குளம் பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இதுபற்றி இணை இயக்குநர் செல்லத்துரையிடம் பக்தர்கள் முறையிட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோவில் தெப்பக்குளம் பகுதியில் ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் ஏராளமான பக்தர்கள் சொக்கநாதர் சுவாமி கோவில் தெப்பக்குளம் பகுதியில் திரண்டனர். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் அங்கு தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.

    இதனால் பக்தர்கள் கொடுக்க முடியாமல் தவித்தனர். இதுபற்றி இணை இயக்குநர் செல்லத்துரையிடம் பக்தர்கள் முறையிட்டனர். அப்போது அவர் தர்ப்பணம் செய்பவர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து அனுமதி வழங்கினார். அதன் பின்னர் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.

    • காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்ற பிறகு நிகழ்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பொது இடங்–களில் பொது–மக்–களை பாதிக்–கும் வகை–யில் கூடுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் அரசியல் கட்சியினர் மற்றும் மத அமைப்பினர் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வருகிற 29-ந் தேதி வரை தடை விதித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார்.

    பொது இடங்களில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் கூடுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது. திருமணம், துக்க நிகழ்வு, வழிபாட்டு முறைகளுக்கு எந்தவித தடையும் இல்லை. காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்ற பிறகு நிகழ்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    • ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைகால கூட்டத் தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு செயலாளர் பி.சி.மோடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தை ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், ஸ்டிரைக் அல்லது எந்த மத விழாவையும் நடத்தும் நோக்கத்திற்காக பயன்படுத்தகூடாது. இதற்கு ஒத்துழைக்க உறுப்பினர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடக்கும்போது பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப அமளியில் ஈடுபட்டதால் சபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

    அதேபோல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதையடுத்து, போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில்ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையா ட்டுக்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.
    • 15 உயிர்கள் பலியான சூழலிலும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்? என்பது புரியவில்லை. பலர் அறிவுறை கூறியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் ஆன்லைன் ரம்மியை பலர் விளையாடி வருவது வேதனை அளிக்கிறது.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில்ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையா ட்டுக்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.

    15 உயிர்கள் பலியான சூழலிலும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்? என்பது புரியவில்லை. பலர் அறிவுறை கூறியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் ஆன்லைன் ரம்மியை பலர் விளையாடி வருவது வேதனை அளிக்கிறது. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மளிகை கடைகள் போன்ற சிறு கடைகளும் மழை பாதிப்பால் திறக்கப்படாமல் உள்ளது.

    டாஸ்மாக் மது கடைகளும் 40 இடங்களில் செயல்படவில்லை. கிண்டி, அடையாறு, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு கடைகளுக்குள்ளும் புகுந்தது.

    இதனால் மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.

     

    மழை நீர்

    மேலும் மது விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. மழையால் வருமானம் குறைந்ததால் மது பிரியர்கள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மது விற்பனை 50 சதவீதத்துக்கும் குறைவாக நடந்துள்ளது. கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மது விற்பனை மிகவும் மோசமான அளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மிசோரம் மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
    அய்ஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அம்மாநிலத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிசோரமில் 1997-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை மதுவிலக்கு அமலில் இருந்தது. 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி அளித்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற மிசோ தேசிய முன்னணி பூரண மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அம்மாநில கலால் மற்றும் போதைபொருள் தடுப்பு ஆணையர் கூறியதாவது:-

    மிசோரம் பூரண மது விலக்கு சட்டம் 2019-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து ஏப்ரல் 1-ந்தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடியும் அவரை மதுவிலக்கு தொடர்பாக அறிக்கை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் பூரண மதுவிலக்கு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளோம் என்றார்.
    காவிரி டெல்டாவில் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    ம.திமு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள பழையபாளையத்தில் விளைநிலங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஆழ்குழாய் கிணறுகளை இந்திய எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனம் அமைத்துள்ளது.

    இங்கு எடுக்கப்படும் எரிவாயு, செம்பனார் கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள கிடங்குக்குக் கொண்டு சென்று சேமிக்கப்படுகிறது. இதற்காக பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.

    நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.

    கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடியதால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார். உச்சநீதிமன்றம் வரையில் சென்று கெயில் நிறுவனம் அனுமதி பெற்றிருந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இச்சூழலில் காவிரி டெல்டாவிலும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.


    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×