search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new liquor law"

    மிசோரம் மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
    அய்ஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அம்மாநிலத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிசோரமில் 1997-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை மதுவிலக்கு அமலில் இருந்தது. 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி அளித்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற மிசோ தேசிய முன்னணி பூரண மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அம்மாநில கலால் மற்றும் போதைபொருள் தடுப்பு ஆணையர் கூறியதாவது:-

    மிசோரம் பூரண மது விலக்கு சட்டம் 2019-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து ஏப்ரல் 1-ந்தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடியும் அவரை மதுவிலக்கு தொடர்பாக அறிக்கை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் பூரண மதுவிலக்கு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளோம் என்றார்.
    ×