என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னையில் 40 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன
சென்னை:
சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மளிகை கடைகள் போன்ற சிறு கடைகளும் மழை பாதிப்பால் திறக்கப்படாமல் உள்ளது.
டாஸ்மாக் மது கடைகளும் 40 இடங்களில் செயல்படவில்லை. கிண்டி, அடையாறு, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு கடைகளுக்குள்ளும் புகுந்தது.
இதனால் மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.
மேலும் மது விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. மழையால் வருமானம் குறைந்ததால் மது பிரியர்கள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மது விற்பனை 50 சதவீதத்துக்கும் குறைவாக நடந்துள்ளது. கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மது விற்பனை மிகவும் மோசமான அளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்