search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில்  29-ந் தேதி வரை ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாநகரில் 29-ந் தேதி வரை ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை

    • காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்ற பிறகு நிகழ்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பொது இடங்–களில் பொது–மக்–களை பாதிக்–கும் வகை–யில் கூடுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் அரசியல் கட்சியினர் மற்றும் மத அமைப்பினர் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வருகிற 29-ந் தேதி வரை தடை விதித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார்.

    பொது இடங்களில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் கூடுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது. திருமணம், துக்க நிகழ்வு, வழிபாட்டு முறைகளுக்கு எந்தவித தடையும் இல்லை. காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்ற பிறகு நிகழ்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×