search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagapattinam"

    நாகப்பட்டினம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி, முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். #EdappadiPalaniswami #GajaCyclone
    நாகை:

    கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

    இதற்கிடையே விடுபட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.



    பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழங்கினர். தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் தென்னங்கன்றுகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஓஎஸ் மணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதன்பின்னர் நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். #EdappadiPalaniswami #GajaCyclone

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக இன்று காலை நாகை சென்றடைந்தார். #EdappadiPalanisamy #GajaCyclone
    நாகை :

    ‘கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட புயல் சேத பகுதிகளை பார்வையிடும் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் மீண்டும் வகுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.



    அதன்படி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, திருவாரூரிலும் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூரில் இருந்து புதன்கிழமை இரவு ரயில் மூலமாக சென்னை திரும்புகிறார். #EdappadiPalanisamy #GajaCyclone 
    கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆய்வு செய்தார். #TNDeputyCM #OPanneerselvam #GajaCyclone #GajaCycloneNagapattinam
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டின் சில மாவட்டங்களை சின்னாபின்னப்படுத்திய கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கிராமபுறங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதனால், விவசாயிகளுடைய வாழ்வாதாரமே சீர்குலைந்து விட்டது. அவர்கள் பயிரிட்ட பயிர்கள் வாழை, தென்னை பயிர்கள் எல்லால் புயல் காற்றால் முறிந்து சேதமாகி விட்டது.

    அதை எல்லாம் கணக்கிடுகின்ற பணி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த புயலால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதுபோல் கால்நடைகள் ஆடு, மாடுகள் என 735 கால் நடைகளும் உயிரிழந்திருக்கின்றன.

    புயல் பாதித்த பகுதிகளை வரும் முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் செவ்வாய்கிழமை சென்று பார்வையிட உள்ளார்.

    இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆய்வு செய்தார். இங்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்திய அவர், கடுமையான சேதத்துக்குள்ளான பகுதிகளை சென்று பார்வையிட்டு வருகிறார். #TNDeputyCM #OPanneerselvam #GajaCyclone #GajaCycloneNagapattinam
    நாகை அருகே டாக்டர் தம்பதி வீட்டில் 10 பவுன் நகை திருடிய 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்கள் இருவரும் டாக்டர்கள்.

    ராமசாமி வீடு பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை பூட்டிவிட்டு சுப்பையா முதலியார் தெருவில் வாடகை வீட்டில் கடந்த 4 மாதங்களாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராமநாயக்கன் குளத்தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தமிழ்ச்செல்வி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் நகைகளை

    திருடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து திருட்டு நடந்த வீட்டில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தமிழ்ச்செல்வின் வீட்டின் கதவை உடைத்து 7 பேர் உள்ளே புகுந்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து நகைகளை திருடியது தொடர்பாக வெளிப்பாளையம் காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த லூர்துசாமி மகன் எடிசன் (வயது22) மற்றும் 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீட்டில் நகைகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

    மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் நாகை மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார். #FloodAlert #Nagapattinam
    நாகை:

    கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயத்துக்கான நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் இன்று இரவு 8 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதேசமயம், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலத்தில் வழியாக சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

    இதனால், நாகை மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதேபோல், பவானிசாகர் அணையின் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்களில் நீர் திறக்கப்பட உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    முன்னதாக, கரூர், திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #FloodAlert #Nagapattinam
    ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழைய கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பழையகூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மகள் வள்ளி (வயது17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் வள்ளி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே வயிற்று வலியால் வள்ளி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    நேற்று மாலை 5 மணியளவில் வள்ளியின் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. இந்தநிலையில் வள்ளியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியை கண்டித்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டுத்தான் மாணவி வள்ளி இறந்ததாக புகார் தெரிவித்தனர்.

    மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.

    மேலும் வயிற்று வலியால் தான் மாணவி இறந்ததாக மாணவியின் தந்தையை மிரட்டி பள்ளி நிர்வாகம் எழுதி வாங்கி கொண்டதாக புகார் தெரிவித்தனர்.

    இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி மாலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.வெங்கடேசன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதை ஏற்று மாணவியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Tamilnews
    வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    கீழ்வேளூர்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று வீசிய வண்ணம் இருந்தது.

    வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு தொலை தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்பதை குறிப்பதாகும். இருந்தபோதிலும் நாகை மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏதும் ஏற்படவில்லை வெயில் சுட்டெரிக்கிறது. கடல் பரப்பில் காற்று அதிகமாக வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர கதியில் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் கடல்களில் சுமார் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழும்பி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் இன்றும் 3-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேதனையில் இருந்து வருகின்றனர்.



    தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். #BJP #HRaja
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கடைத்தெரு பகுதியில் பா.ஜனதா சார்பில் ‘‘உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’’ மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி, மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணம் தி.மு.க.வும், அதற்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியும்தான். 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் அதற்கு போடப்பட்ட நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்து துரோகம் செய்தது தி.மு.க.தான். மக்களை ஏமாற்றும் கட்சியாகவும், துரோகியாகவும் உள்ள தி.மு.க. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் கம்யூ. கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் மூலம் தான் அரசியலில் இருப்பதற்கு தகுதியில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது தமிழகம் உலகிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக உள்ளது. 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு திராவிட கட்சிகளால் முன்னேறவில்லை. தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை.

    இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

    முன்னதாக கோவில் பத்து ஊராட்சியிலிருந்து மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் தொடங்கிய சைக்கிள் பேரணியை மாநில செயலாளர் வேதரத்தினம் தொடங்கி வைத்தார். #BJP #HRaja
    நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் குமார், ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார்.

    வருவாய்த்துறையை அதன் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு சிறப்புத்துறையாக அறிவித்து தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணி நிமித்தமாக சென்னை செல்லும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தங்க வசதியாக விடுதி வளாகம் ஏற்படுத்தி தரவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை செல்போனுக்கு இன்டர்நெட் வசதியுடன் மாதாந்திரக் கட்டண தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

    கள ஆய்வுப்பணிக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவிற்கு என பிரத்யேகமாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிப்பது. பதிவறை எழுத்தர்களுக்கு ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட தர ஊதியத்தை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் வடக்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணா சீனிவாசன் (வயது 45). இவர் சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அண்ணா சீனிவாசன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை அண்ணா சீனிவாசன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சென்னையில் இருந்த ஆசிரியர் அண்ணா சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுபற்றி திருவெண்காடு போலீசுக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அண்ணா சீனிவாசன் வீட்டில் பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    மேலும் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போய் உள்ளதா? என தெரியவில்லை. சென்னையில் இருந்து அண்ணா சீனிவாசன் வந்த பிறகு கொள்ளை போன நகை- பணம் குறித்த விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்ச சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். #CauveryIssue #TNFarmers #Protest
    கீழ்வேளூர்:

    நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. கடந்த 2016-2017-ம் ஆண்டு வறட்சியால் கடைமடை பகுதியில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மன உளைச்சலில் உயிரிழந்தனர்.

    2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.160 கோடிக்கு மேல் பாக்கிஉள்ளது. காவிரி நீர் கடைமடை வரை வந்து சேராததால் கதிர் வரும் பருவத்தில் பயிர்கள் கருகியது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டது. 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.


    டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இது அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது.

    எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) நாகையில் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும். அதன்படி நாளை நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கிறோம். பின்னர் அங்கிருந்து நாகை கடலுக்கு சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #TNFarmers #Protest
    வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
    மயிலாடுதுறை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி உறுதி. தமிழகத்தில் பா.ஜனதா கட்சி கிளை அளவில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அமைத்து வலுப்படுத்தி வருகிறோம்.

    கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்கும். நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்காரர் ஜெகதீசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மதுக்கடையை மூடவலியுறுத்தி மாணவர் தினேஷ் என்பவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். மதுக்கடை விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? சாராய ஆலைகள் மூடப்பட வேண்டும். நேர்மையான அரசை தான் மக்கள் விரும்புகிறார்கள். கேரளாவில், ‘நீட்’ தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு, அந்த மாநில போலீசார் பதில் சொல்ல வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    ‘நீட்’ தேர்வு மூலம் கடைக்கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சீட், மருத்துவ கல்வி கிடைக்கும். 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத மத்திய அரசு ஏற்பாடு செய்தது வரவேற்கக் கூடியது. இதன் மூலம் மாணவர்கள் சுலபமாக தேர்வு எழுத முடிந்தது என்று கூறி உள்ளனர்.

    சமூக வலைதளங்கள் பொதுமக்களின் களமாகவும், தளமாகவும் உள்ளது. எனவே, சமூக வலைதளங்களின் பதிவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் வயதானவர்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
    ×