search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்றம்"

    • அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது.
    • கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஜவுளித்தொழில் வளர்ச்சியில் ஜவுளி உற்பத்தி மட்டுமல்ல, அதனை சார்ந்த பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அதன்படி, அட்டை பெட்டி தயாரிப்பும் முக்கிய தொழிலாக இருக்கிறது. ஜவுளி மட்டுமல்ல அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது. குறிப்பாக பனியன் ஆடைகள், பின்னலாடைகள் பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.கோவை மண்டல அளவில் 400க்கும் அதிகமான அட்டை பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    முக்கிய மூலப்பொருளாக காகித ஆலைகளிடம் இருந்து கிராப்ட் காகிதம் கொள்முதல் செய்யப்படுகிறது. காகிதத்தை பக்குவப்படுத்தி, அட்டையாக மாற்றுவதற்கு, ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. மூலப்பொருளுக்கு அடுத்தபடியாக எந்திரங்களுக்கான மின்கட்டண செலவும் மிகவும் அதிகமாகியுள்ளது. தற்போதைய மின் கட்டண உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு யூனிட் மின்சார கட்டணம் 7.20 ரூபாயாக இருந்தது தற்போது 11 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர் ஊதியம், போக்குவரத்து என பல்வேறு செலவுகள் உயர்ந்து உற்பத்தி செலவு கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே ஆர்டர் இல்லாத நிலையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நஷ்டத்தை சமாளிக்க வேண்டிய அட்டைப்பெட்டி விலையை உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க துணை தலைவர்கள் தண்டபாணி, சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்து ள்ளோம்.

    கடும் நஷ்டம் ஏற்படும் என்பதால் அட்டைப்பெட்டி விலையை 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பி ரகாரத்தில் வைக்க ப்பட்டிருந்தது.

    விழுப்புரம்: 

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டா டப்பட்டது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெ ருமானுக்கும் பால்,தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சா மிர்தம்,தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பி ரகாரத்தில் வைக்க ப்பட்டிருந்தது.

    மாலை 5 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு கோவிலின் தென்மேற்கு மூலையில் அமர்த்தினர்.பின்பு திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட போது அந்த தீபத்தை அம்மன் தரிசனம் செய்தவுடன் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டு கோவிலின் உட்புறம் கொண்டு சென்றனர்.

    அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • செல்போன்களில் மூழ்கி கிடக்காதீர்கள்
    • மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

    நாகர்கோவில்:

    கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர் கல்வி வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நேற்று நடந் தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் கலெக்டர் அரவிந்த், பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, பேசியதாவது:-

    குமரி மாவட்டம் கல்வி மற்றும் எழுத்தறிவில் சிறந்த மாவட்டமாக திகழ்ந்து வரு கிறது. அதற்கேற்ப, பள்ளி மாணவ, மாணவிகள் தங்க ளது தனி திறமைக்கேற்ப கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். பொது அறிவினை வளர்த் துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு நாளும் பத் திரிகைகள் மற்றும் அறி வுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன்க ளில் மூழ்கி கிடக்ககூடாது. ஒரு பாடத்தை படிக்கும் பொழுது கேள்வி, பதில் களை மட்டும் படிக்காமல் முழு பாடத்தையும் படிக்க வேண்டும்.

    கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக வேண்டும். எளிதாக புரிந்து கொண்டு அதிக மதிப்பெண் பெறக்கூடிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தி வெற்றிபெறலாம். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கு ஏதா வது ஒரு பட்டப்படிப்பு போதும். ஐஏஎஸ் படிப்பில் 27 வகையான மத்திய அரசு பணிகள் உள்ளன. அதற்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். பெண்கள் சட்ட கல்வி பயில நிறைய வாய்ப்புகள் உள்ளது. மத் திய பல்கலைக்கழகங்களில் படிக்க நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். ஆங்கில அறிவு நன்றாக இருக்க வேண்டும். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளில் சேர வேண்டுமானால் 12-ம் வகுப் பில் 85 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மருத்துவ படிப்பு மட்டுமல்லாமல் அதற்கு நிகரான துறையை யும் தேர்ந்தெடுத்து படிக்க லாம். டிபார்ம், பல் மருத்து வம்போன்ற படிப்புகளையும் படிக்கலாம். கால்நடை மருத் துவம், விவசாயம், பொறியி யல் படிப்பு (தமிழ் வழியில்) படித்து வேலை வாய்ப்பை பெற முடியும்.

    பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உங் களை உயர்வான நிலைக்கு கொண்டு வர கஷ்டப்படுகி றார்கள். அவர்களின் கஷ் டங்களை, எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பழக்க வழக் கங்களை தவிர்த்து, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் உயரிய இலக்கை எட்டும் நோக்கில் 12-ம் வகுப்பு தேர்வில் கவன சிதைவின்றி தன்னம்பிக்கை யுடனும், விடா முயற்சியுட னும், கடின உழைப்புடனும் தேர்வினை எதிர்கொண்டு வாழ்வில் ஏற்றம்பெறவேண்டும் என்றார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். கொட்டாரம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதீபா மற்றும் ஆசிரியர் கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கினர்.

    பல்லடம் :

    75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 15-ந்தேதி வரை வீடுகள், நிறுவனங்கள் , கடைகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டன.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்பட மாவட்டம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டன. மேலும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் வீடுகள் தோறும் தேசிய ெகாடிகள் விநியோகிக்கப்பட்டன. அதனை பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பு ஏற்றினர்.

    பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கினர். அந்த கொடிகள் இன்று வீடுகள் மற்றும் கடைகளில் ஏற்றப்பட்டது.  

    ×