search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்தாலம்"

    ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழைய கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பழையகூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மகள் வள்ளி (வயது17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் வள்ளி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே வயிற்று வலியால் வள்ளி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    நேற்று மாலை 5 மணியளவில் வள்ளியின் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. இந்தநிலையில் வள்ளியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியை கண்டித்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டுத்தான் மாணவி வள்ளி இறந்ததாக புகார் தெரிவித்தனர்.

    மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.

    மேலும் வயிற்று வலியால் தான் மாணவி இறந்ததாக மாணவியின் தந்தையை மிரட்டி பள்ளி நிர்வாகம் எழுதி வாங்கி கொண்டதாக புகார் தெரிவித்தனர்.

    இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி மாலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.வெங்கடேசன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதை ஏற்று மாணவியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Tamilnews
    குத்தாலம் அருகே டியூசன் முடிந்து வந்த 10-ம் வகுப்பு மாணவனை கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே உள்ள பெரிய செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி புவனேஷ்வரி (36). இவர்களுடைய மகன் அபினேஷ்வரன் (14). பேரளந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்நிலையில் நேற்று அபினேஷ்வரன் பள்ளிக்கு டியூசன் சென்றுள்ளான். பின்னர் டியூசன் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேரளந்தூர் பகுதியில் உள்ள கோமல் ரோட்டில் பஸ்சிற்காக காத்திருந்துள்ளான். இதை நோட்டம் விட்டு கொண்டிருந்த 2 நபர்கள் புவனேஷ்வசனிடம் பேச்சு கொடுத்து நாங்கள் உன்னை வீட்டில் விட்டு விடுகிறோம் என்று கூறி அபினேஷ்வரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி உள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி அபினேஷ்வரனும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளான்.

    உடனே 2 நபர்களும் அவன் வாயை மூடி மயிலாடுதுறை அருகே கொண்டு சென்றுள்ளனர். இதையறிந்த அபினேஷ்வரன் வாயை மூடிய நபர் கையை கடித்து அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளான். அவர்கள் இருவரும் அபினேஷ்வரனை துரத்தியுள்ளனர். பின்னர் மயிலாடுதுறை ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளான். அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபினேஷ்வரன் பதட்டமாக வருவதை பார்த்து அவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதைதொடர்ந்து போலீசார் அபினேஷ்வரனை மீட்டு அவனது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அலுவலர் சிவராமன் முன்னிலையில் அபினேஷ்வரனை அவனது தாய் புவனேஷ்வரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    ×