என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்- தமிழிசை
Byமாலை மலர்12 May 2018 4:08 AM GMT (Updated: 12 May 2018 4:08 AM GMT)
வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
மயிலாடுதுறை:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி உறுதி. தமிழகத்தில் பா.ஜனதா கட்சி கிளை அளவில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அமைத்து வலுப்படுத்தி வருகிறோம்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்கும். நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்காரர் ஜெகதீசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மதுக்கடையை மூடவலியுறுத்தி மாணவர் தினேஷ் என்பவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். மதுக்கடை விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? சாராய ஆலைகள் மூடப்பட வேண்டும். நேர்மையான அரசை தான் மக்கள் விரும்புகிறார்கள். கேரளாவில், ‘நீட்’ தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு, அந்த மாநில போலீசார் பதில் சொல்ல வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
‘நீட்’ தேர்வு மூலம் கடைக்கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சீட், மருத்துவ கல்வி கிடைக்கும். 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத மத்திய அரசு ஏற்பாடு செய்தது வரவேற்கக் கூடியது. இதன் மூலம் மாணவர்கள் சுலபமாக தேர்வு எழுத முடிந்தது என்று கூறி உள்ளனர்.
சமூக வலைதளங்கள் பொதுமக்களின் களமாகவும், தளமாகவும் உள்ளது. எனவே, சமூக வலைதளங்களின் பதிவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் வயதானவர்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி உறுதி. தமிழகத்தில் பா.ஜனதா கட்சி கிளை அளவில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அமைத்து வலுப்படுத்தி வருகிறோம்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்கும். நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்காரர் ஜெகதீசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மதுக்கடையை மூடவலியுறுத்தி மாணவர் தினேஷ் என்பவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். மதுக்கடை விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? சாராய ஆலைகள் மூடப்பட வேண்டும். நேர்மையான அரசை தான் மக்கள் விரும்புகிறார்கள். கேரளாவில், ‘நீட்’ தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு, அந்த மாநில போலீசார் பதில் சொல்ல வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
‘நீட்’ தேர்வு மூலம் கடைக்கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சீட், மருத்துவ கல்வி கிடைக்கும். 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத மத்திய அரசு ஏற்பாடு செய்தது வரவேற்கக் கூடியது. இதன் மூலம் மாணவர்கள் சுலபமாக தேர்வு எழுத முடிந்தது என்று கூறி உள்ளனர்.
சமூக வலைதளங்கள் பொதுமக்களின் களமாகவும், தளமாகவும் உள்ளது. எனவே, சமூக வலைதளங்களின் பதிவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் வயதானவர்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X