search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seerkazhi"

    • இதனால் கவுதமரின் பசுக்கொலை பாவம் விலகியது.
    • கவுதமர் அன்று முதல் கவுதமேசர் என்று பெயர் பெற்றார்.

    கவுதமர் என்ற பிரபலமான முனிவருக்கு சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி உண்டு.

    இவர் தன் மனைவியுடன் தலயாத்திரை செய்து கொண்டே சிதம்பரம் வந்தார்.

    பிறகு சீர்காழிக்கு வந்தார்.

    அப்போது சீர்காழியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.

    இந்த பஞ்சத்தை தன்னால் இயன்றவரை தீர்த்துக் கொண்டிருக்கும் பொழுது கவுதமரின் புகழ் பெருமை அன்னதானப் புண்ணியம் இவற்றைக் கண்டு பொறாமைப்பட்ட அவருடைய சீடர்கள் சிலர்,

    வேண்டுமென்றே ஒரு பசுவை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

    ஏற்கனவே கடுமையான பஞ்சத்தால் இளைத்திருந்த அந்த பசு, கவுதம முனிவரின் கை பட்டவுடன் இறந்து விட்டது.

    தான் ஒரு பசுவைக் கொலை செய்து விட்டோமே என்ன செய்வது என்று திகைத்த கவுதமர் உடனே தன் மனைவியோடு சீர்காழியை விட்டுக் கிளம்பி மயிலாடுதுறைக்கு வந்தார்.

    மயிலாடுதுறையில் தங்கியிருந்த துர்வாச முனிவரிடம் சீர்காழியில் தான் செய்த பசுவதையைச் சொன்ன போது,

    அதற்கு துர்வாச முனிவர் பசுவதையை நீ செய்யவில்லை.

    உன் பெருமையைக் கெடுக்க பாதகர் செய்த சூழ்ச்சி.

    இனியும் இப்படிப்பட்ட பசுக்கொலை ஏற்படாமலிருக்க கும்பகோணம் சென்று காவிரியில் நீராடி

    மகாமகக் குளத்திற்கு தென்மேற்கு முனையில் எழுந்தருளியிருக்கும் உபளிதேச்சுப் பெருமானை தரிசித்தால்

    உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் பாவம் நீங்கும் என்று வழிகாட்டினார்.

    துர்வாச முனிவரின் யோசனையை ஏற்று, கவுதமர் காவிரியில் நீராடி கும்பகோணம் மகாமகக் குளத்தின் அருகே

    குடிகொண்டிருக்கும் சிவ பெருமானை வழிபட வந்தார்.

    அங்கு தனக்கென்று ஒரு தீர்த்தம் அமைத்தார்.

    அதில் தினமும் நீராடி உபளி தேச்சுப் பெருமானை வழிபட்டு வரும் பொழுது சிவபெருமான் கவுதமருக்குக் காட்சியளித்தார்.

    இதனால் கவுதமரின் பசுக்கொலை பாவம் விலகியது.

    கவுதமர் அன்று முதல் கவுதமேசர் என்று பெயர் பெற்றார்.

    அவர் அமைத்த தீர்த்தம் கவுதம தீர்த்தமாக மாறிற்று. கவுதமருக்கு அருள் பாலித்ததால் உபளிதேச்சுப் பெருமான் பின்னர் கவுதமமேசர் என்று பெயர் மாற்றினார்.

    அம்பாள் பெயர் சவுந்தரநாயகி. இன்னொரு காரணப் பெயரும் உண்டு.

    அமுதக் குடத்திலிருந்து கயிறு (பூணூல்) விழுந்த இடம் இந்த ஸ்தலம்.

    இங்கு தோன்றிய சிவலிங்கத்திற்கு கோவில் கட்டப்பட்டு முதலில் யக்நோபஷதேஸ்வரர் என்று பெயர் வைத்தார்கள்.

    பின்னர் உபளிதேச்சுப் பெருமானாக மாறி இன்றைக்கு கவுதமேஸ்வரர் கோவிலாக விளங்கி வருகிறது.

    • திருஞானசம்பந்தருக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.
    • வருகிற மே மாதம் 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோவில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

    இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு இக்கோவில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

    சட்ட நாதர் கோவிலின் திருப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகளை விரைந்து முடித்து மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கிழக்கு கோபுரத்திற்கு முன்பு தோரண வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில், வக்கீல் பாலாஜி, அரசு மருத்துவமனை மருந்தா–ளுநர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் வடக்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணா சீனிவாசன் (வயது 45). இவர் சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அண்ணா சீனிவாசன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை அண்ணா சீனிவாசன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சென்னையில் இருந்த ஆசிரியர் அண்ணா சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுபற்றி திருவெண்காடு போலீசுக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அண்ணா சீனிவாசன் வீட்டில் பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    மேலும் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போய் உள்ளதா? என தெரியவில்லை. சென்னையில் இருந்து அண்ணா சீனிவாசன் வந்த பிறகு கொள்ளை போன நகை- பணம் குறித்த விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்ச சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×