search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok sabha elections 2019"

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து மே 23ல் முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று கூட்டணி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்து அளிக்கிறார். இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கூட்டணி தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

    இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்தியில் பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    கருத்து கணிப்பை கருத்து திணிப்பு என கூறுவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருத்து திணிப்பு என கூறுவது அவரவர் மனநிலையை பொருத்தது என தெரிவித்தார்.



    மேலும், தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறித்து கேட்டபோது, இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என ஓபிஎஸ் கூறினார். 
    புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களே கிடைத்திருந்தன.

    இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 150 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த தடவை காங்கிரஸ் கட்சி ஆச்சரியப்படும் அளவுக்கு வெற்றிகளை குவிக்கும் என்று நம்பிக்கையோடு பேசி வருகிறார். மோடி நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவர் உறுதிபட பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார்.

    இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில் ராகுல்காந்தி மனம் திறந்து கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் முடிவை தெரிந்த பிறகே எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

    இந்த தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவது நிச்சயம். இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களால் மோடியை தோற்கடிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

    தற்போது இந்தியாவில் வேலை இல்லா பிரச்சனை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது. புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு இந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து இந்தியாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது.

    உலகம் முழுக்க உள்ள அரசியல் வாதிகளை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் தங்கள் எதிராளிகளின் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தது தெரியும். அதுதான் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

    வெறுப்பு அரசியலால் எதையும் சாதிக்க இயலாது. பாராளுமன்றத்தில் நான், மோடியை கட்டி பிடித்து வாழ்த்தியது அந்த அடிப்படையில்தான். ஆனால் அதை பெரும்பாலானவர்கள் சரியான முறையில் உணரவில்லை.

    23-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ஆட்சி பற்றிய தெளிவான நிலை தெரிந்து விடும். புதிய ஆட்சி உடனடியாக அமைந்து விடும் என்றே நினைக்கிறேன். புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது.



    எனது இலக்கு எல்லாம் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக நான் நீண்ட விவாதம் செய்ய வேண்டியதில்லை. மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டர்கள். எங்களது எண்ணங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். 23-ந் தேதி அதற்கான விடை கிடைத்து விடும்.

    ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. எனக்கு இந்த கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. மக்களின் எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்.

    பிரதமர் மோடி 5.55 லட்சம் கோடி ரூபாயை 15 பணக்காரர்களுக்கு கொடுத்து விட்டார். இதன் மூலம் காவலாளியே திருடனாக மாறியது எல்லோருக்கும் தெரியும். அந்த பணத்தை வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் கொடுக்கும் திட்டமானது வெளிப்படையானது. அதில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை. இந்த திட்டத்தின் கீழ் வேலை இல்லாதவர்களுக்கு பணம் நேரிடையாக கையில் கிடைக்கும். இடைத்தரகர்கள் பயன்பெற முடியாது.

    ரபேல் போர் விமானம் ஒப்பந்த திட்டத்தால் பல இடைத்தரகர்கள் பயன் அடைந்தனர். அந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதைச்சொன்னால் மோடி கோபப்படுகிறார். கோபம் மோடியின் கண்களை மறைத்துள்ளது.

    2014-ம் ஆண்டு மோடி வெற்றிபெற்றதும் மன்மோகன்சிங்கை சென்று பார்த்திருக்க வேண்டும். நீங்கள் அனுபவசாலி. உங்கள் உதவி எனக்கு தேவை என்று சொல்லி இருக்க வேண்டும். அதுபோல மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார் ஆகியோரிடமும் பேசி இருக்க வேண்டும்.

    அப்படி அவர் செய்திருந்தால் அவரை தோற்கடிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர் நிறைய தவறுகள் செய்துள்ளார். மிகவும் ஆணவமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டுள்ளார். யாருடைய கருத்தையும் கேட்பதில்லை. எனவே மோடியை தோற்கடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை.

    தென் இந்தியாவில் மாறுபட்ட நிலையில் மக்கள் மனநிலை உள்ளது. இந்தியாவை நாக்பூரில் இருந்து சிலர் வழிநடத்துகிறார்கள் என்று தென் இந்திய மக்கள் நினைக்கிறார்கள். நான் தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது மக்களின் இந்த மன உணர்வை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    இது சரியல்ல என்பதை அன்றே உணர்ந்தேன். ஆந்திர மக்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் தவிக்கிறார்கள். தென் இந்தியா புறக்கணிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நான் வயநாடு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டுள்ளேன்.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி என்னையும், எனது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆனால் நான் பதிலுக்கு அதே போன்று விமர்சனம் செய்து பேசவில்லை. அவரது குடும்பத்தினரை குறை கூறி எதுவுமே சொன்னது இல்லை.

    பிரதமர் என்ற முறையில் மோடியை நான் மதிக்கிறேன். அன்புதான் வெற்றி பெறும். வெறுப்பு அரசியலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. தேர்தல் முடிந்த பிறகும் கூட அன்பு மட்டுமே தொடர்ந்து நீடிக்கும்.

    இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலுக்கான 7-வது கட்ட தேர்தலில் 9 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 50 தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு 4-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 8 மாநிலங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

    7-வது கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இதையொட்டி 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


    இந்த 59 தொகுதிகளில் மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் இன்றிரவு 10 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 50 தொகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

    7-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 சதவீதம் பேர் மீது அதாவது 170 பேர்மீது கிரிமினல் வழக்கு உள்ளன. 12 பேர் மீது கொலை வழக்கும், 34 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

    20 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் இருக்கின்றன. இந்த 20 பேரில் 2 வேட்பாளர்கள் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 29 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 7-வது கட்ட தேர்தலில் அதிக பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் குவிந்துள்ளன.

    இதைத் தடுக்க நாளை பிரசாரம் முடிந்ததும் கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 19-ந் தேதி தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
    வேறு ஒருவரின் ஓட்டை நான் போடவில்லை, எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். எனவே இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு என்று நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
    நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளிக்கு வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் திரும்பிச் சென்றார். சில மணிநேரம் கழித்து மீண்டும் ஓட்டுபோட வந்த சிவகார்த்திகேயனை வாக்களிக்க ஓட்டுச்சாவடி ஊழியர்கள் அனுமதித்தனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயன் ஓட்டு போட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர் பதிவு செய்தது கள்ள ஓட்டு என்றும் விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு பதில் அளித்து சென்னையில் நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வருமாறு:-

    நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களித்ததை சர்ச்சையாக்கி உள்ளனர். எனது ஓட்டைத்தான் நான் பதிவு செய்தேன். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் இந்த நாட்டின் குடிமகன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. தேர்தல் கமிஷனே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.



    ஒரு மாதத்திற்கு முன்பு எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இப்போது பட்டியலில் இல்லை என்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் வேறு ஒருவர் பெயரில் ஓட்டு போடவில்லை. எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு.

    எல்லோரும் ஓட்டு போட்ட மாதிரி தான் எனது வாக்கை பதிவு செய்தேன். பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறு அல்ல. வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் சொல்லவில்லை.

    இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

    வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் இந்த மாதம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் தனித்தனியாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.

    இதை ஆய்வு செய்த தேர்தல் கமி‌ஷன் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அறிவிக்காமல் உள்ளது.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிடிபட்ட பணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.



    இந்த பணம் எந்த வங்கியில் இருந்து யாருடைய கணக்கில் இருந்து பெறப்பட்டது? எதற்காக 200 ரூபாயாக கட்டு கட்டாக வாங்கினார்கள் போன்ற விபரங்களுக்காக பலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விசாரணை முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிப்பார்கள். அதை ஆய்வு செய்த பிறகு தான் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் மேற்கொள்ளும்.

    எனவே இந்த மாதத்தில் வேலூரில் தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் நடத்த குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    பாராளுமன்ற தேர்தலில் 6ம் கட்டமாக நாளை 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    6-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), அரியானா (10), மேற்கு வங்காளம் (8), பீகார் (8), மத்திய பிரதேசம் (8), டெல்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 59 தொகுதிகளிலும் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்தது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) 59 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

    59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் திக்விஜய் சிங், மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், ரீடா பகுகுணா, கீர்த்தி ஆசாத், கவுதம் காம்பீர், பூபிந்தர் கூடா, ராதா மோகன் சிங், ரகுவன்ஸ் பிரசாத் சிங், மீனாட்சி லெகி, அஜய்மக்கன், விஜேந்தர்சிங், ஷீலா தீட்சித் ஆகியோர் முக்கியமானவர்கள்.

    59 தொகுதிகளிலும் 10 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 5 கோடியே 42 லட்சம் பேர். பெண் வாக்காளர்கள் 4 கோடியே 75 பேர்.

    இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 7 மாநிலங்களிலும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதிக்கு பாதி பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால் நாளை ஓட்டுப்பதிவு நடக்கும் 7 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த 59 தொகுதிகளில் 44 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. லோக் ஜனசக்தி கட்சி 16 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

    காங்கிரஸ் கட்சிக்கு இந்த 59 தொகுதிகளில் 2 இடங்களே கிடைத்திருந்தன. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும், அகாலி தளம் 1 இடத்திலும், சமாஜ்வாடி கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

    ஆனால் இந்த தடவை பா.ஜனதாவுக்கு 2014-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்தது போல 44 இடங்களில் வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரப்படி இந்த 44 இடங்களில் பாதி இடங்களை பா.ஜனதா இழக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் 6-வது கட்ட தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

    இதுவரை நடந்துள்ள 5 கட்ட தேர்தல்கள் மூலம் 424 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. நாளை நடக்கும் 59 தொகுதிகளையும் சேர்த்தால் 483 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று விடும்.

    19-ந்தேதி 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் அத்துடன் 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து விடும். 23-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும்.
    புதுவை வெங்கட்டாநகர் மின்கட்டண வசூல் மையத்தில் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது.

    அன்று புதுவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காமராஜர் நகர் வெங்கட்டாநகர் மின்கட்டண வசூல் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த 10-ம் எண் வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவை விவிபாட் எந்திரத்தில் இருந்து அகற்றாமல் வாக்குப் பதிவு நடந்தது.

    இந்த குளறுபடி தொடர்பாக வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் தேர்தல் துறைக்கு புகார் அளித்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அங்கிருந்த விவிபாட் எந்திரத்தை அகற்றிவிட்டு மற்றொரு விவிபாட் எந்திரத்தை வைத்து வாக்குப்பதிவு நடத்தினர். இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையம் வரை இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் இந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதற்காக வெங்கட்டா நகர் மின்கட்டண வசூல் மையத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    மையத்தின் முன்புறம் பந்தல், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சரிவுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்கு அருகில் நடமாடும் கழிவறையும் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிக்கு தேவையான எந்திரங்கள், உபகரணங்கள் இன்று மதியம் தேர்தல் துறை மூலம் போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாளர்கள் இதை பெற்றுக்கொள்கின்றனர்.

    வாக்குப்பதிவையொட்டி இந்த மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுவை காவல்துறையின் கிழக்கு சரகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பெரியகடை, ஓதியஞ்சாலை, உருளையன் பேட்டை, முத்தியால்பேட்டை ஆகிய 4 போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு வாக்குப்பதிவையொட்டி புதுவை முழுவதும் மதுபான கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது.

    ஆனால், நேற்று மாலை வெங்கட்டா நகரில் உள்ள 2 மதுபான குடோன்களை மட்டும் அடைக்க மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புதுவையில் அனைத்து மதுபான கடைகளும் வழக்கம்போல இயங்கின.
    திரிபுரா மேற்கு தொகுதியில் 168 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்றும், 12-ந் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திரிபுரா மேற்கு, திரிபுரா கிழக்கு என்ற 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 11-ந் தேதி திரிபுரா மேற்கிலும், 18-ந் தேதி திரிபுரா கிழக்கிலும் வாக்குப்பதிவு நடந்தது.

    இதில், திரிபுரா மேற்கு தொகுதியில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்ற முறைகேடுகளில் பா.ஜனதாவினர் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.



    இதையடுத்து, திரிபுரா மேற்கு தொகுதியில் 26 சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ள 168 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த 168 வாக்குச்சாவடிகளிலும், நாடாளுமன்ற 6-வது கட்ட தேர்தலுடன் சேர்த்து, வருகிற 12-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இதேபோல் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளிலும், புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TripuraElection

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். #Loksabhaelections2019 #BJP #NarendraModi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இதுவரை 200-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளார்.

    தலைநகர் டெல்லியில் இதுவரை பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மட்டும் டெல்லியில் 2 கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கும் வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் செய்ய இன்றும், நாளையும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு டெல்லியில் போட்டியிடும் 7 பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் ஒரே இடத்தில் ஆதரவு திரட்ட உள்ளார்.

    பிரதமர் மோடி டெல்லியில் பங்கேற்று பேசும் ஒரே பொதுக்கூட்டம் இது மட்டுமே. எனவே இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த டெல்லி மாநில பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    டெல்லியில் மொத்தம் 272 மண்டலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 20 பஸ்களில் தலா ஆயிரம் தொண்டர்கள், பொதுமக்களை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை மோடி பங்கேற்று பேசும் கூட்டத்தில் குறைந்தபட்சம் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி இன்று மதியம் அரியானாவில் சிக்கா, குருஷேத்திரா நகரங்களில் நடக்கும் 2 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பிறகே டெல்லி ராம்லீலா மைதான கூட்டத்தில் பேச உள்ளார்.

    மோடி டெல்லியில் மாலை 5 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் டெல்லி வர இரவு 7 மணி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தை வாரணாசியில் மோடி பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தையும் விட மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Loksabhaelections2019 #BJP #NarendraModi
    பாராளுமன்றத்துக்கு 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    பீகார் 5, ஜார்கண்ட் 3, மத்திய பிரதேசம் 6, மராட்டியம் 17, ஒடிசா 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் தலா 13, மேற்கு வங்காளம் 8, காஷ்மீர் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 

    இந்த தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.

    பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் வருகிற மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019

    பாராளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார். #LokSabhaElections2019 #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, பிரகலாத்ஜோஷி, ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்தும், சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயருக்கு கட்சி மேலிடத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். தலைவா்கள் தங்களின் தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவு குறித்து எடுத்துக் கூறினர். அவர்கள் அளித்த தகவலின்படி, கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணிக்கையில் இருந்து ஒரு தொகுதி கூடுமே தவிர அதில் குறைய வாய்ப்பு இல்லை.

    சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.



    இதில் 2 தொகுதிகளுக்கு 2 பெயர்களை தேர்வு செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். கட்சி மேலிட தலைவர்கள், வேட்பாளர்களின் பெயா்களை நாளை (அதாவது இன்று) அறிவிப்பார்கள்.

    அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பியவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம். கட்சியின் நலன் கருதி, தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிர முயற்சி செய்வோம்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    பா.ஜனதா சார்பில் சிஞ்சோலி தொகுதியில் டாக்டர் உமேஷ்ஜாதவ்வின் சகோதரர் ராமச்சந்திர ஜாதவ் மற்றும் குந்துகோல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஐ.சிக்கனகவுடர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் உயரும். தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலம் 104-ல் இருந்து 106 ஆக உயரும்.#LokSabhaElections2019 #Yeddyurappa
    நடிகர் சிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளதாக சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #LokSabhaElections2019 #Srikanth
    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவர் வாக்களித்துள்ளார். இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவரும் விதிகளை மீறி வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் சாலிகிராமத்தில் காவேரி பள்ளிக்கூடத்தில் வாக்களித்தது தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதிலும் பூத் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.



    இவர்களது ஓட்டுகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது யார் என்பதை கண்டுபிடித்து அந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Srikanth

    ×