search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka govt"

    • கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
    • அரிசிக்கான தொகையானது ஜூலை 1ம் தேதி முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 5 கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கிலோவுக்கு 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும்.

    இது தற்காலிக ஏற்பாடு மற்றும் அரிசி கொள்முதல் செய்யும்வரை மாற்று வழி என்று சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.

    • சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    • பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

    பெங்களூரு

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த 200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மேலும் வாடகை வீடுகளில் வசிப்பவருக்கும், புதிதாக வீடு கட்டுபவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் பெற தகுதியானவர்கள் சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது மின் கட்டண தகவல் விபரம் மற்றும் வாடகை வீட்டில் இருப்பதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

    • புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
    • கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு திட்ட சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக அரசு சமீபத்தில், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மாதம் தலா 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் தற்போது ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அதில் ஒரு இணைப்புக்கு மட்டுமே இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று அரசு கூறியுள்ளது.

    இந்த புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வீட்டில் வசிப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கான அரசாரணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

    அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

    கர்நாடகத்தில் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது. மாதந்தோறும் மீட்டர் அளவிடும்போது, மொத்த மின் பயன்பாட்டிற்கு கட்டணத்தை கணக்கிட வேண்டும்.

    ரசீதில் தகுதியான மின் பயன்பாட்டிற்கான தொகையை கழித்துவிட்டு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

    கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. சேவா சிந்து இணையதளம் அனுமதிக்கப்பட்ட மின் அளவை விட நுகர்வோர் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அத்தகையோருக்கு பூஜ்ஜியம் என்று குறிப்பிட்ட ரசீது வழங்க வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனை பெற விரும்புகிறவர்கள் சேவா சிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின் நுகர்வோர் தங்களின் மின் நுகர்வோர் அடையாள எண், கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பாக்கிய ஜோதி, குடீர ஜோதி, அம்ருத் ஜோதி திட்ட மின் இணைப்புகள் இந்த திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

    மின் கட்டண பாக்கியை வருகிற 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்குள் பாக்கியை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் நுகர்வோர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவற்றில் ஒரு இணைப்பு மட்டுமே இந்த திட்டத்தின் பயனை பெற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
    • வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது என டிகே சிவக்குமார் பேச்சு

    கர்நாடக அரசு மேகதாது என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை தொடங்கி உள்ளது.

    தற்போதைய துணை முதல்வரான டி.கே.சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

    'தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது. தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையால் தமிழகத்திற்கு அதிக பயன் உள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கீடு நீர் கிடைக்கும்' என்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

    ஆனால் தமிழகம் தரப்பில் இந்த விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை. அணை கட்டும் முயற்சியை தடுப்பதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு மோதலுக்கு தயாராகிவிட்டது. இதன் காரணமாக மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.
    • மேகதாது விவகாரத்தில் நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது.

    மேலும், நான் முதலமைச்சராக இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.

    பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

    மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.
    • கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டினால் காவிரி நீரினால் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொழிலை இழக்க நேரிடும்.

    மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு குடிநீராக கிடைக்கும் மேகதாது அணையின் காவிரி நீரும் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இப்பேற்பட்ட சூழலில் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.

    கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.

    குறிப்பாக மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வரும் வேளையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கர்நாடக காங்கிரஸ் மேகதாது சம்பந்தமாக வாக்குறுதி அளித்த போதே தமிழக தி.மு.க அரசும், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.

    அதை விடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போதும், காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் தமிழக அரசும், காங்கிரசும் அப்போது ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது என்ன காரணம் சொன்னாலும் இப்பிரச்சனையில் தமிழக அரசும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    எனவே கர்நாடக அரசு, மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கடும் கண்டிப்பையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, அணைக்கட்டும் பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட்டு தமிழக விவசாயிகள் நலன் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கையாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா கடந்த ஓராண்டாக தீவிர முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த நிலையில் பா.ஜனதாவினர் மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுப்பார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    இதனால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

    காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல், சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகிய 2 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மகேஷ் கமடள்ளி நேற்று முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தையால் கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டு வந்த சிக்கல் தற்போது நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க வசதியாக மூத்த தலைவர்கள் மந்திரி பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது மந்திரிசபையில் காங்கிரசுக்கு ஒன்று மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 என்று மொத்தம் 3 மந்திரி பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறுகையில் ‘நாங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் புதிதாக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.’ என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘கூட்டணி ஆட்சி உறுதியாக இருக்கிறது.

    ரமேஷ் ஜார்கிகோளி உள்பட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியைவிட்டு விலக மாட்டார்கள். கடந்த ஓராண்டாக எடியூரப்பா, கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறி வருகிறார். வருகிற 1-ந்தேதி கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் அரசு அமைப்பேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அப்படி முடியாவிட்டால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?’ என்று சவால்விட்டு உள்ளார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
    ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    ஏற்கனவே 2 முறை ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாகவும், தற்போது 3-வது முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சித்தராமையா மற்றும் துணை முதல்மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரசார் நடவடிக்கை எடுத்தாலும் பாரதீய ஜனதா தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் போனில் பேசி அவர்களை இழுக்க முயற்சி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்க வில்லை என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். ஆபரேசன் தாமரை நடைபெறவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் உண்மையில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை இரவு கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது பா.ஜனதாவுக்கு வரும்படி அந்த எம்.எல்.ஏ.வை அழைத்து இருக்கிறார்கள்.

    அதற்காக மிகப்பெரிய பரிசை கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய பரிசு நீங்கள் நினைப்பது போல் மிகக்குறைவான பரிசு அல்ல. அது மிகப்பெரிய பரிசு.

    அந்த மிகப்பெரிய பரிசு என்னவென்று நான் சொன்னால் அனைவரும் வியப்படைவீர்கள். மிகப்பெரிய பரிசு மட்டுமல்ல பணமும் கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருக்கின்றனர்.

    ஆனால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை தொடர்பு கொள்வதை விட்டுவிடும்படியும் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவிடம் கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.

    அந்த எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன என்பதை நான் கூறமாட்டேன். அதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.


    கடந்த 2008-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்து முதல் மந்திரி பதவியை எடியூரப்பா தக்க வைத்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போதும் எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதை நான் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    மேகதாது அணை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin #EdappadiPalaniswami #MekedatuDam
    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ., பரணிகுமார் இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இன்று நாட்டில் நிலவும் பிரச்சனைகள் அனைவருக்கும் தெரிந்தது. அதனை எடுத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி இன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது.

    மேகதாது அணை பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாராளுமன்ற மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் 55 பேர் பிரதமரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தோம். மேலும் இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம்.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பேசும்போது, “காவிரியின் குறுக்கே மத்திய அரசு மற்றும் தமிழகத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது. இது தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை கேட்டு முடிவெடுப்போம்” என தெளிவாக கூறியுள்ளார்.

    ஆனால் கர்நாடக அரசு தன்னிச்சையாக, மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதனை மத்திய அரசும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


    ஆனால் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இது வேதனை அளிக்க கூடியது. ஆட்சியாளர்கள் தமிழகத்தை பற்றி சிந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெரியசாமி, கே.என்.நேரு, வேலூர் மாவட்ட செயலாளர் காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #EdappadiPalaniswami #MekedatuDam
    மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SC #MekedatuDam
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

    இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து இருந்தது.

    இந்த அனுமதிக்கு தடை கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

    மேலும் மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தது.

    இந்த மனுக்கள் கடந்த டிசம்பர் 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டு இருந்தது.


    இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு கடந்த 4-ந் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில் “தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரி இருந்தது.

    மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் “கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்க நிபந்தனையின் பேரில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசும் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. #SC #MekedatuDam
    கர்நாடக மாநிலத்தில் சட்டசபை உறுப்பினர் ஆனந்த் சிங் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. கணேஷ் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #CongressMLAGanesh #CongressMLA #MLAGaneshsuspended
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த துணை முதல் மந்திரி பரமேஸ்வரா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அம்மாநில மந்திரிகள் கிருஷ்ணா பைரே கவுடா, கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உத்தரவின்படி, ஆனந்த் சிங்-ஐ தாக்கிய எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் கோர்ப்பாடே இன்று மாலை தெரிவித்துள்ளார். #CongressMLAGanesh #CongressMLA #MLAGaneshsuspended 
    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #MekadatuDam #MekadatuIssue
    புதுடெல்லி:

    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. அத்துடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்தது.


    இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,  தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. #MekadatuDam #MekadatuIssue
    ×