search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச மின்சாரம்"

    • சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும்.

    பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். தற்போது பீகார் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

    சட்டமன்றத்தில் பேசும்போது இலவச மின்சாரம் வழங்கமாட்டோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிதிஷ் குமார் கூறியதாவது:-

    மின்சாரம் இலவசமாக வழங்கப்படமாட்டாது என்பதை நான் தொடக்கத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாங்கள் எவ்வளவு குறைந்த விலைக்கு வழங்க முடியுமோ, அந்த அளவிற்கு வழங்குவோம். இது தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.

    சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் இலவசமாக வழங்கமாட்டோம். தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும். ஆகவே, இலவசமாக வழங்கப்படமாட்டாது" என்றார்.

    பீகார் எரிசக்தி மந்திரி பிஜேந்திர யாதவ் கூறுகையில் "மற்ற மாநிலங்களை காட்டிலும் பீகாரில் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால், நிச்சயமாக நாங்கள் அதைவிட குறைவான விலைவில் வழங்குவோம். எவ்வளவு காலம் இந்த இலவச மின்சாரம் மூலம் இழப்பை சந்திக்க முடியும்?. பணம் எங்கிருந்து வரும்?. 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் வழங்குகிறோம். புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வழங்குகிறோம். தற்போது இதைவிட அதிக வாய்ப்பு தேவைப்படுகிறா?" என்றார்.

    • சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    • பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

    பெங்களூரு

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த 200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மேலும் வாடகை வீடுகளில் வசிப்பவருக்கும், புதிதாக வீடு கட்டுபவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் பெற தகுதியானவர்கள் சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது மின் கட்டண தகவல் விபரம் மற்றும் வாடகை வீட்டில் இருப்பதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

    • ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
    • வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.

    இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

    இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்

    அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

    ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

    (இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
    • கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு திட்ட சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக அரசு சமீபத்தில், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மாதம் தலா 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் தற்போது ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அதில் ஒரு இணைப்புக்கு மட்டுமே இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று அரசு கூறியுள்ளது.

    இந்த புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வீட்டில் வசிப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கான அரசாரணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

    அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

    கர்நாடகத்தில் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது. மாதந்தோறும் மீட்டர் அளவிடும்போது, மொத்த மின் பயன்பாட்டிற்கு கட்டணத்தை கணக்கிட வேண்டும்.

    ரசீதில் தகுதியான மின் பயன்பாட்டிற்கான தொகையை கழித்துவிட்டு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

    கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. சேவா சிந்து இணையதளம் அனுமதிக்கப்பட்ட மின் அளவை விட நுகர்வோர் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அத்தகையோருக்கு பூஜ்ஜியம் என்று குறிப்பிட்ட ரசீது வழங்க வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனை பெற விரும்புகிறவர்கள் சேவா சிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின் நுகர்வோர் தங்களின் மின் நுகர்வோர் அடையாள எண், கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பாக்கிய ஜோதி, குடீர ஜோதி, அம்ருத் ஜோதி திட்ட மின் இணைப்புகள் இந்த திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

    மின் கட்டண பாக்கியை வருகிற 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்குள் பாக்கியை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் நுகர்வோர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவற்றில் ஒரு இணைப்பு மட்டுமே இந்த திட்டத்தின் பயனை பெற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 யூட்டுகள் வரை பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிப்பு.
    • அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதல் 100 யூனிட்டுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசேக் கெலாட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " பணவீக்க நிவாரண முகாம்களை பார்வையிட்டேன். பின்னர் பொதுமக்களிடம் பேசிய பிறகு, மின்கட்டணத்தில் சிலாப் வாரியான விலக்குகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூட்டுகள் பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை. 200 யூனிட்டுகள் வரை நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் தாமத கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    • கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • மார்ச் 1-ந்தேதி முன் தேதியிட்டு இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில் 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மாநிலத்தில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

    ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1-ந்தேதி முன் தேதியிட்டு இந்த மின் கட்டண சலுகை அமல்படுத்தப்படுகிறது.

    • மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு தி.மு.க. அரசு வைக்கும் ஆப்பு என மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி பேசினார்.
    • ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க. விலும் நின்று ஜெயித்திருக்கிறார்.

    மதுரை

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தி.மு.க. அரசு சொல்ல காரணம் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு வைக்கும் ஆப்பு என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி னார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதி.மு.க. சார்பில் கூத்தியார் குண்டு பகுதியில் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிகொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அதி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அதி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழகத்தில் அதி.மு.க. மட்டும் தான் ஏழை மக்களுக்கான கட்சி, இங்குதான் சாதாரண தொண்டன் கூட உச்ச நிலைக்கு வர முடியும். இங்கு தான் ஜனநாயகம் இருக்கிறது ஆனால் தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. அந்த குடும்ப கட்சியில் பல டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களது வேலையே ஊழல் செய்வது தான்.

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது. தி.மு.க. தேர்தல் நேரத்தில் அறிவித்த 520 வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். இன்னும் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வால் அடை யாளம் காட்டப்பட்ட 8 பேர் தற்போது தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதில் செந்தில் பாலாஜி என்ற அமைச்சர் 5 கட்சிக்கு சென்று வந்திருக்கிறார்.

    ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க. விலும் நின்று ஜெயித்திருக்கிறார். இந்த அதிசயம் யாருக்கும் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றக்கூடிய அந்த நபர்தான் முதன்மை அமைச்சராக இருக்கிறார். அவரை ஸ்டாலின் வாழ்த்தி கொண்டிருக்கிறார்.

    தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது பேசுவதும் வேறுபாடாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கவர்ச்சி யான திட்டங்களை அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி களை காற்றில் பறக்க விடுவது தி.மு.க.வின் வாடிக்கை. தி.மு.க. அரசு இப்போது கேட்டாலே ஷாக் அடிக்கும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

    100 யூனிட் இலவசம் மின்சாரம் அதி.மு.க. ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. அரசு மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கட்டாயப் படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து விட்டால் ஏதாவது ஒரு மானியம் மட்டுமே மக்கள் வாங்க முடியும். எனவே இந்த 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பு வைப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.

    மக்களுக்கு சுமை மேல் சுமை ஏற்றி வரும் தி.மு.க. அரசை ஆட்சியில் இருந்து இறக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இனிவரும் தேர்தல்களில் அதி.மு.க. அமோக வெற்றியை பெரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார், தகவல் தொழில்நுட்ப ப்பிரிவு மண்டல செய லாளர் ராஜ்சத்யன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்ட னர்.

    • விவசாயிகள் முற்றுகையிட்டு தூக்கு போடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காமல் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடக்கு பிரிவு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட இருகரை மெயின் ரோடு தெருவை சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காமல் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    எனவே மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தூக்கு போடும் நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    விவசாய சங்க ஒன்றிய குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட தலைவி தாமரைச்செல்வி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் ராஜாராமன், ஒன்றிய குழு நிர்வாகிகள் பழனிச்சாமி, கண்ணன், ரமேஷ் குமார், காமாட்சி, மணிகண்டன், செல்வம், திருநாவுக்கரசு, சின்ன ராஜா, ராமலிங்கம், ராஜமாணிக்கம் உத்ராவதி உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தற்போது உள்ளபடியே, 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடா்ந்து வழங்க வேண்டும்.
    • மின் இணைப்பு வேண்டி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி முறையாகவும் துரிதமாகவும் மின்இணைப்பு வழங்கவேண்டும்.

    திருப்பூர்:

    வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்க வேண்டும் என அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து அமைப்பின் பொது செயலாளா் ஈ.பி.சரவணன் திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் பெயரில் அனுப்பியுள்ள குறுச்செய்தியால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் இதில் கட்டண விகிதமும் மாற்றம் செய்யப்பட்டதாக வந்த தகவல்படி, கட்டணம் இரண்டரை மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே தற்போது உள்ளபடியே, 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடா்ந்து வழங்க வேண்டும். மின் இணைப்பு வேண்டி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி முறையாகவும் துரிதமாகவும் மின்இணைப்பு வழங்கவேண்டும். திருப்பூா் பகுதிகளிலுள்ள அனைத்து அலுவலகத்திற்கும் ஒரே மாதிரியான மின்வாரிய சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.

    • 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் உறுதி
    • டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்.

    சூரத்:

    குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்ததும், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். டிசம்பர் 2021 வரையிலான நிலுவையில் உள்ள மின் கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

    கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்திருக்கிறது. அவர்களிடம் புதிய யோசனைகள் இல்லை. தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்படாத பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்த தேர்தல் அறிக்கையை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள். டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். எனவே, எங்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தமுறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

    இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம் ஆத்மி அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது.
    • இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

    பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இது தற்போது பஞ்சாப் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றப்போகிறோம். இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×