search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal hassan"

    சினிமாவில் இனி நான் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது. இருக்காது என்று கமல்ஹாசன் கூறினார். #KamalHassan #MakkalNeedhiMaiam
    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் கலை விழா நேற்று நடந்தது. கமல்ஹாசன் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    மருத்துவர்களின் பெருமை, பெயர் இல்லாவிட்டாலும் பல 100 வரு‌ஷம் வாழும். இந்த மருத்துவக் கல்லூரியை உருவாக்கிய ஐடாஸ்கடர் பெயர். அவர் முகம் மறந்து போகலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற இந்த கல்வி காட்டில் மலர்கள் மலர்ந்து கொண்டும், கனிகள் கனிந்து கொண்டே இருக்கும்.

    நாளைய மருத்துவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நாங்கள் எல்லாம் இந்த மருத்துவ கல்லூரியில் நடனம் ஆடினோம் என்றுதான் பெருமைகொள்ள முடியும். ஆனால் உங்கள் பெருமை 100 ஆண்டுகள் ஆனாலும் நீடிக்கும்.

    8-ம் வகுப்பு கூட மிதிக்காத நான் இங்கு வந்தது உங்களுக்கு மகிழ்ச்சி. எனக்கு பெருமை. நான் இங்கு வந்தது ஒரு தாகத்தால். எனக்கு நல்ல தமிழகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் தாகமும் இருக்கிறது. அது எனக்கு மட்டும் இல்லை. கைதட்டும் அனைவருக்கும் இருக்கிறது.

    நல்ல தமிழகம் என்பது ஒரு மனிதரிடம் இருந்து வருவது அல்ல. பலர் அதை நினைக்க வேண்டும். நாங்கள் திட்டமிடுவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது அரசு அல்ல. அன்புஅரசு 100 ஆண்டுகள் கூட இருக்கும். மருந்து, மாத்திரை தாண்டி ஏழைகளை நோக்கி உங்கள் மருத்துவம் நீள இருக்கிறது.

    மனிதநேயம் உங்கள் மூலம் இன்னும் வாழும். அதை காப்பாற்ற வேண்டியது என் கடமை. அதற்காக எந்த மூலையில் இருந்தாலும் உங்களைத் தேடி வருவேன்.

    நான் இப்போது செய்துகொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் நான் இப்படி உங்களுடன் சேர்ந்து புலம்பிக்கொண்டிருக்க மாட்டேன். தமிழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதை பற்றி சிந்தித்துகொண்டிருப்போம்.

    நமக்கு எதுக்கு, இது எல்லாம் ஏன் என்று யோசித்தேன். என் சலவை சட்டை கசங்கிவிடுமோ என்று பயந்தேன். இனி பயப்பட மாட்டேன். ஏதோ சினிமா வசனம் பேசுவது போல் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. இதை எல்லாம் எப்போதோ சினிமாவில் பேசிவிட்டேன்.

    நாங்கள் மற்றவர்களுக்காக சிரிப்பவர்கள், அழுபவர்கள். எனவே நான் இப்போது பேசுவதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். மீதம் இருக்கும் என் நாட்கள் என்னை வாழ வைத்த மக்களுக்காகத்தான்.



    இனி நான் சினிமாவில் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது. இருக்காது. இதை உங்களிடம் சொல்லக் காரணம் இவரே செய்யும்போது நான் செய்யக்கூடாதா என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்.

    நான் ஒரு சினிமா நடிகனாக சம்பாதித்து செட்டில் ஆகி நிம்மதியாக சென்று இருக்கலாமே... 63 வயதில் ஏன் இங்கே வரவேண்டும்? இதை சிந்தியுங்கள். 23, 24 வயதில் நான் செய்யக்கூடாதா என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.

    கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்பார்கள். கட்சி அரசியல் தான் பேசக் கூடாது. மக்கள் அரசியல் பேசலாம். உங்களை ஆட்டுவிப்பதே அரசியல் தான். அதை பேச ஏன் தயங்க வேண்டும்?

    உங்கள் பங்களிப்பு இருந்தால் தான் நாட்டை மாற்ற முடியும். அரசியலை அசிங்கம் என்று நினைத்து விடக்கூடாது. ஒதுங்கக்கூடாது.

    மாணவர்கள் அரசியல் பேசியே ஆக வேண்டும். வருங்காலம் உங்களை ஆட்டி வைக்க போகிறதா? நல்லதாக அமைய போகிறதா? என்பதை அரசியல் தான் முடிவு செய்கிறது.

    அரசியலை கண்டு ஒதுங்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள். அரசியலில் மாணவர்கள் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டை திருத்த முடியும்.

    ஏழைகள் காசு வாங்கி கொண்டு ஓட்டுபோடும் அந்த கொடுமையை மூழ்கடிக்க மாணவர்களின் வெள்ளத்தால் தான் அடித்து செல்ல முடியும்.

    இப்போது ஒதுங்கிவிட்டால் வயதான பிறகு என்னை போல் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும். இது என்னோடு போகட்டும்.

    அந்த வருத்தம் இந்த தலைமுறையினருக்கு இல்லாமல் போக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHassan #MakkalNeedhiMaiam

    ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார். #KamalHassan #YogendraYadav
    சென்னை:

    ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் தமிழக விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு கமல்ஹாசனுக்கு இந்த சந்திப்பில் யோகேந்திர யாதவ் நன்றி கூறினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த யோகேந்திர யாதவ், “மக்கள் நீதி மய்யத்தின் தேவை தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிற்கும் இன்றியமையாததாக இருக்கும்”, என்று கூறினார்.

    மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #KamalHassan #YogendraYadav
    காங்கிரஸ் பக்கம் வர கமல் சிக்னல் கொடுத்துவிட்டார் என்று திருநாவுக்கரசர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #kamalhassan #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள ஊழல் வேதனையையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அவமானம். இது எந்த மட்டத்தில் நடந்துள்ளது என்பதை நீதி விசாரணை மூலம் கண்டறிய வேண்டும். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் இருந்து கொள்ளைபோன சிலைகளை நேர்மையான போலீஸ் அதிகாரியான பொன்மாணிக்கவேல் கண்டுபிடித்து வரும் நிலையில் அரசியல் ரீதியாக யாரையோ காப்பாற்றுவதற்காக அவருக்கு இடையூறு கொடுப்பது நல்லதா?


    அண்ணா பல்கலைக்கழக ஊழல், அறநிலையதுறை ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 10-ந்தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி வருகிற 20-ந்தேதி வடசென்னையில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெறும்.

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசுக்கு சாதகமான நிலையே நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையிலான அணியோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தினகரன் அணியினர் கருத்துக்களை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை. ரஜினி பா.ஜனதா பக்கம் சென்றால் தலித், சிறுபான்மையினர் உள்ளிட்ட 36 சதவீத வாக்குகளை இழப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேரன் காஜா செய்யது இப்ராகிம், திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், சிவராஜ சேகர், ரூபி மனோகரன், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், துணைத் தலைவர் தாமோதரன், கோபண்ணா, சிரஞ்சீவி, ஆகியோர் உடனிருந்தனர்.#kamalhassan #Thirunavukkarasar

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பற்றி நேரில் சென்று முதல்வர் விசாரித்தது நல்ல மாண்பு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் பாராட்டியுள்ளார். #Karunanidhi #karunanidhiHealth #KamalHassan
    சென்னை :

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திமுக தலைவர் கலைஞரை சந்திக்க முடியவில்லை. என்னுடைய ஆதங்கத்தின் காரணமாக போனேன். கலைஞர் நலம் பெற்றுவிட்டதாகவும், இல்லை என்றும் கூறுவதும் பற்றி எனக்கு தெரியாது.

    சிகிச்சை நடந்துகொண்டு இருக்கிறது. கலைஞர் நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோரையும் போல் என்னுடைய ஆசையும் ஆகும்.

    ரஜினிகாந்த் வெளியூரில் இருப்பதால் சந்திக்கவில்லை. நல்ல செய்தியாக இருக்கும் என்பதால் வெளியூர் செல்கிறேன். 
    கலைஞரை, முதல்வர் உள்பட அதிமுகவினர் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தது நல்ல மாண்பு. 19 வயதில் இருந்து அரசியலில் இருக்கும் பெரும் தலைவர். அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பது முக்கியமல்ல. இது போன்ற நிகழ்வுகளில் மாண்பு காண்பிப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார். #Karunanidhi #karunanidhiHealth #KamalHassan
    “ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விமர்சனம் செய்யும் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால், அவரை பதவி நீக்கம் செய்வதுடன், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறுகிறார். எந்த சட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன் பதவி விலக வேண்டும் என்று கூறப்படவில்லை.


    நடிகர் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார். அவர் அரசியலுக்கே லாயக்கற்றவர். ஒருவர் மீது யார்  வேண்டுமானாலும் குற்றச்சாட்டு கூறலாம். அது நிரூபணமானால்தான் குற்றவாளியாக கருத முடியும். சட்டமன்ற கூட்டத்தொடர் 46 நாட்கள் நடந்தபோதும்கூட தமிழக அரசின் மீது யாரும் எந்தவித குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை.

    பெட்ரோல், டீசல் விலையை சரக்கு, சேவை வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காகவும், விலைவாசி உயர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு பஸ்களில் விவசாயிகள் கட்டணமின்றி விளைபொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. பசுமை பண்ணை காய்கறி அங்காடிகளில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MinisterKadamburRaju
    ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன், அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக தெரிவித்துள்ளார். #KamalHassan
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு விடையளித்த மக்கள் நீதிமய்ய தலைவர்  கமல்ஹாசன், காவிரி நதிநீர் ஆணையத்தை இரு மாநிலங்களும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், பசுமை வழிச்சாலை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், திட்டங்கள் தேவையா இல்லையா என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் உறவினருக்காக பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ விமானத்தை வழங்கியது குறித்து இந்தியாவில் அரசியல் மாண்பு சீர்கெட்டு வருவதாக மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். #KamalHassan
    “என்னை போலி பகுத்தறிவுவாதி என்று கூற என்ன உரிமை இருக்கிறது” என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார். #KamalHassan #TamilisaiSoundararajan
    ஆலந்தூர்:    

    கமல்ஹாசன் அமாவாசை நாளில் கட்சியை தொடங்குகிறார், அமாவாசை அன்று கட்சி கொடி தொடங்குகிறார், ஆனால் பகுத்தறிவுவாதி போல போலி வேஷம் போடுகிறார் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமாவாசை தினத்தில் கொடியேற்றியது பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் என்னை போலி பகுத்தறிவுவாதி என்று சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் பகுத்தறிவாதி தான். மக்கள் நீதி மய்யத்தில் உள்ள அனைவரும் பகுத்தறிவுவாதிகள் என்று கூறமுடியாது. என்னுடைய கட்சியினர் இதுபோன்று ஏற்பாடு செய்திருந்தால் அவர்களை நான் கண்டிக்க கடமைப்பட்டு உள்ளேன்.

    பல்வேறு தரப்பினரும், பல்வேறு மதத்தினரும், பல்வேறு நம்பிக்கை உள்ளவர்களும் மக்கள் நீதி மய்யத்தில் உள்ளனர். என்னுடைய மகள் சுருதி பகுத்தறிவுவாதி என்று சொல்ல முடியாது. நான் அரசியலில் பகுத்தறிவு கொள்கையை பரப்பி மூடநம்பிக்கையை ஒழிக்க மட்டும் வந்திருந்தால் தவறாக இருக்கலாம். ஆனால் நான் ஏழ்மையை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் தான் வந்திருக்கிறேன். அதற்கு எல்லாருடைய உதவியும் தேவைப்படுகிறது.

    ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று அழைப்பது பழைய கூக்குரல். இது பற்றி வந்த எல்லாருடைய விமர்சனங்களும் சரியானது. இதை தவிர்க்க எல்லா முயற்சிகளையும் நான் எடுப்பேன். இனி இதுபோன்று நிகழாது என்று தொண்டர்கள் சார்பில் வாக்குறுதி தரலாம்.

    ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்தக்கூடாது என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் கருத்து.

    சத்துணவில் முட்டை வாங்குவதில் முறைகேடுகள் நடந்தது பற்றி ஓராண்டுக்கு முன்பு சுட்டிகாட்டியபோது அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, பொய்யான குற்றச்சாட்டு, எங்கே நிரூபிக்க சொல்லுங்கள் என்று மார்தட்டியவர்கள் தான் தற்போது அதில் சிக்கி உள்ளனர். மீண்டும் அதை தான் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இவற்றை ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்களுக்கு முக்கியமான வேலையாக இருக்கிறது. லோக் ஆயுக்தா மசோதாவில் நிறைய தண்ணீர் தான் இருக்கிறது. அதில் பாலை காணவில்லை. அதில் தண்ணீரை சேர்க்க கூடாது. அது பாலாகவே இருக்க வேண்டும்.

    கோவை கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சி எடுத்த போது தள்ளிவிடப்பட்டதில் மாணவி இறந்தது கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற பயிற்சியை கல்லூரி நிர்வாகமே செய்திருப்பது ஆபத்தான செயல். கல்லூரி நிறுவனங்களின் மாடி உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வியின் தரம் உயர வேண்டும்.

    தமிழகத்தில் தாமரை மலரும் என்று பா.ஜ.க.வினர் கூறுவது, எந்த தாமரை என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan #TamilisaiSoundararajan
    டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். #KamalHassan #SoniaGandhi
    புதுடெல்லி:

    நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

    அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை.


    இதற்கிடையே, தேர்தல் ஆணைய அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி  நிர்வாகிகளுடன் நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார்.

    அதன்பின்னர், கமல்ஹாசன் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இருவரின் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல், 'நேற்று ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து இன்று மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தியுடன் எதுவும் பேசவில்லை' என கூறினார். #KamalHassan  #SoniaGandhi

    காவிரி டெல்டாவை பாதுகாக்க ஜூன் 12-ந் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாய அமைப்புகள் வருகிற 12-ந் தேதி திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளன. இந்த போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டப்பூர்வமான இயக்கங்களையும், போராட்டங்களையும் மக்கள் நீதி மய்யம் ஆதரிக்கும். உண்ணாவிரத போராட்டத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் இல்லை என்றாலும், உங்கள் (பி.ஆர்.பாண்டியன்) அமைப்பின் சார்பில் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்வது எனது கடமை.

    ஜூன் 12-ந் தேதி தாங்கள் (பி.ஆர்.பாண்டியன்) மேற்கொண்டுள்ள நிகழ்வில், வேறு பணிகள் காரணமாக என்னால் நேரில் பங்கேற்க இயலாது. எனினும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    அமைச்சர் ஜெயக்குமார் என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்துகொண்டு என் புகழை பரப்பட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalhassan #MinisterJayakumar
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, ‘காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் ஞானம் இல்லாமல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், நீங்கள் தனி ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘ஆயிரத்தில் ஒருவன் அல்ல. நான் கோடியில் ஒருவன். 7½ கோடியில் ஒருவன். அவருக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதைவிடவும் முக்கியமான பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. டுவிட்டரில் பதில் சொல்லி அலுத்துவிட்டேன். இப்போது என்னுடைய வேலையை செய்கிறேன். அதையாவது செய்யவிடுங்கள். அவர் என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ.) இருந்துகொண்டு, என்னுடைய புகழை நன்றாக பரப்பட்டும்’ என்றார். #kamalhassan #MinisterJayakumar
    தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள், சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதி தான் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #Sterliteprotest #Kamalhassan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக-தமிழக ஒற்றுமைக்கும், காவிரி பற்றியும் எனது பேச்சு இருக்கும். அதையும் விட சில பேச்சுவார்த்தை கர்நாடக முதல்-மந்திரியுடன் பேச வேண்டியது இருக்கிறது. அதற்காகத்தான் பெங்களூரு செல்கிறேன். ஆனால் கண்டிப்பாக சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேச மாட்டேன்.

    காவிரி தண்ணீரை விட வலியுறுத்தும் பலம் என்னிடம் இல்லை. நான் மக்களின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்து சொல்ல முடியும். அவர் கூறும் கருத்துகளை இங்கு வந்து சொல்ல முடியும். காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. அந்த கருத்தின் அடிப்படையில்தான் என்னுடைய பயணத்தை நோக்கி செல்கிறேன்.

    கர்நாடக முதல்-மந்திரியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எப்படி அமையும்? நம்முடைய கோரிக்கை என்ன? என்று ஊருக்கே தெரியும். இரு மாநிலங்களுக்கும் தெரியும். நமக்கு என்ன தேவை. அவர்களால் என்ன இயலும் என்பதை பேச உள்ளேன்.

    சட்டமன்றத்துக்கு மீண்டும் தி.மு.க. செல்ல முடிவு செய்து இருப்பது நல்ல முடிவாகும். இது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் மீது செய்யப்படுவது விமர்சனம். அது அவருடைய கருத்து. நான் மக்களின் கருத்துகளை மக்களின் பிரதிநிதியாக பிரதிபலிக்கிறேன். நான் மக்களிடம் கேட்டு சொன்ன கருத்து ஒட்டுமொத்த மக்களின் எதிரொலிதான். நானாக எந்த கருத்தையும் சொல்லவில்லை.

    கர்நாடகாவில் படங்கள் வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள், வர்த்தக அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை வியாபாரம் செய்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நான் வியாபார மன நிலையில் இல்லை. அது இப்போது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். அதை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு.

    தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் சமூகவிரோதிகள் கிடையாது. அப்படி பார்த்தால் நானும் சமூகவிரோதிதான். போராட்டம் நடத்தினால் சுடுகாடு ஆகும் என்பது ரஜினிகாந்தின் கருத்து. ஆனால் என்னுடைய கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். அவரை பார்த்ததுகூட இல்லை.



    காந்தி இறந்தபின் பிறந்தவன் நான். போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். அந்த தன்மை என்ன? என்று காந்தியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து செய்வது போராட்டம் கிடையாது.

    துப்பாக்கி வந்தாலும் திறந்த மனதுடன் ஏற்கும் தன்மையை தூத்துக்குடியில் பார்த்தோம். தூத்துக்குடி போராட்டம் நல்ல ஒரு பாதையாக நினைக்கிறேன். அதில் வன்முறை இருந்திருந்தால் அதை இன்னும் நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். போராட்டங்களில் அந்த கறைக்கூட பதியாமல் இருக்க வேண்டும். போராட்டங்களை நிறுத்தமாட்டார்கள். நிறுத்தவும் கூடாது.

    ஸ்டெர்லைட் ஆலை தனது எல்லையை கடந்து பேராசையினால் பல தவறுகளை செய்து இருக்கிறது. பெரிய ஆலைகள் வர வேண்டும் என்பது காந்தி, பாரதியின் கனவுகள். ஆனால் அவை மண்ணின் சட்டங்களை மதித்து நடக்கும் ஆலைகளாக இருக்க வேண்டும்.

    தி.மு.க. தலைவரை எப்போதும் தள்ளி நின்று வாழ்த்துகின்ற ரசிகன் நான். அந்த கூட்டத்தில் பார்த்திருக்க முடியாது. பிறந்த நாள் முடிந்தபின்னர் நான் சென்று வாழ்த்தி இருக்கிறேன். இந்த முறையும் அப்படித்தான் போய் வாழ்த்துவேன்.

    தூத்துக்குடியில் வீடு, வீடாக சென்று சோதனை நடப்பதாக சொல்கின்றனர். ஆனால் உண்மையான தகவல் என்ன என்று தெரியாமல் பரப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sterliteprotest #Kamalhassan
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #PinarayiVijayan #Kamalhassan
    திருவனந்தபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கொச்சி சென்றார்.

    அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர்.

    ஏற்கனவே, நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

    மேலும், கட்சி தொடங்கும் முன்பு பினராயி விஜயனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து கட்சி தொடங்கி நடத்துவதற்கான ஆலோசனைகளை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #PinarayiVijayan #Kamalhassan
    ×