search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PRO"

    சினிமா பி.ஆர்.ஓ-க்களுக்கு தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் அடையாள அட்டை வழங்கியுள்ளார். #PRO
    தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் என்றழைக்கப்படும் சினிமா பி.ஆர்.ஓ-க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

    தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல், பொருளாளா் யுவராஜ், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் மதுரை செல்வம், கிளாமர் சத்யா, ஆறுமுகம், சரவணன், கே. செல்வகுமார், கௌரவ தலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், திரைநீதி செல்வம், மற்றும் மௌனம் ரவி, ரியாஸ், துரைபாண்டியன், வெட்டுவானம் சிவகுமார், மதிஒளிகுமார், வெங்கட், பாரிவள்ளல், கணேஷ்குமார், பாலன், அந்தணன், ஆதம்பாக்கம் ராமதாஸ், சக்திவேல், மனோகரன், கடையம்ராஜூ, மேஜர்தாசன், செல்வரகு, ராஜ்குமார், சூர்யா, விஜிமுருகன், நித்திஷ், சக்திசரவணன், புவன், சையதுஇப்ராகிம், பிரகாஷ், சுரேஷ்குமார், புதிய உறுப்பினர்கள் பிரியா, தர்மதுரை, தியாகராஜன் ஆகியோருக்கு தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் அடையாள அட்டை வழங்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் சால்வை அணிவித்து உறுப்பினர்களை பாராட்டி பேசினார்கள். 

    இந்த விழாவில் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், நடிகரும் இயக்குநரும் திரைப்பட தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு "கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை" யூனியன் சார்பில் வழங்கப்பட்டது. 

    தலைவர் விஜயமுரளி வரவேற்புரை ஆற்றி தொகுத்து வழங்க, செயலாளர் பெருதுளசி பழனிவேல் நன்றி தெரிவித்து பேசினார்.
    அமைச்சர் ஜெயக்குமார் என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்துகொண்டு என் புகழை பரப்பட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalhassan #MinisterJayakumar
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, ‘காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் ஞானம் இல்லாமல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், நீங்கள் தனி ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘ஆயிரத்தில் ஒருவன் அல்ல. நான் கோடியில் ஒருவன். 7½ கோடியில் ஒருவன். அவருக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதைவிடவும் முக்கியமான பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. டுவிட்டரில் பதில் சொல்லி அலுத்துவிட்டேன். இப்போது என்னுடைய வேலையை செய்கிறேன். அதையாவது செய்யவிடுங்கள். அவர் என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ.) இருந்துகொண்டு, என்னுடைய புகழை நன்றாக பரப்பட்டும்’ என்றார். #kamalhassan #MinisterJayakumar
    ×