search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal hassan"

    • மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
    • தி.மு.க. கூட்டணிக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறோம் என்றார் கமல்ஹாசன்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் 1 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

    இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அந்த உடன்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கமல்ஹாசனும் கையெழுத்திட்டனர்.

    மேலும் இந்த உடன்பாட்டில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விட்டு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எங்கள் கட்சி சார்பிலும் வேறு யாரும் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் இல்லை. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும்.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது எனவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

    • 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து.
    • நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது என்றார்.

    மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

    மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது.

    2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு ஆதரவாக பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், தீர்ப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் நிறைய சோதனைகளையும், நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது.

    சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான தங்களின் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    திருச்சியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி சிலை அருகே நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னதாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க கோட்டை சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இதனிடையே போராட்டம் நடத்த வந்தவர்களிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது, மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இருப்பினும் அக்கட்சி நிர்வாகிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உருவபொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இந்து மகா சபா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து,அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தத்தெடுத்த கிராமத்தில் மின்தடையை கண்டித்தும், குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும் பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். #Kamalhassan
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது அதிகத்தூர் கிராமம். இந்த கிராமத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தத்தெடுத்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும் இந்திராநகர் பகுதியில் குடிநீரும் சரிவர வினியோகிக்கப்படவில்லை.

    இதேபோல் அடிக்கடி அதிக மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதன பொருட்களும் சேதம் அடைந்து வந்தன.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று இரவு தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் புழுக்கத்தில் மக்கள் தவித்தனர்.

    மின்தடையை கண்டித்தும், குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை மேல்நல்லாத்தூர்- அகரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்கவும், மின் தடையை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதிக்கு 3 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. ஊராட்சி செயலர் சரிவர தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை.

    இதுபற்றி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பலன் இல்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அறிவிக்கப்படாத மின் தடையாலும் பாதிக்கப்பட்டு உள்ளோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி நடிகர் கமல்ஹாசனுக்கும் தெரியப்படுத்த உள்ளோம்” என்றனர். #Kamalhassan
    4 தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 3ந் தேதி தொடங்குகிறார். #TNAssemblyElection #KamalHassan
    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.



    அதற்கு முன்னதாகவே அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருக்கும் விவரங்கள் அடங்கிய பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதம் 3, 4, 14-ந்தேதி ஓட்டப்பிடாரத்திலும், 5, 6, 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 10, 11, 17-ந்தேதி சூலூரிலும், 12, 13, 16-ந்தேதி அரவக்குறிச்சியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் வாக்குகளை திரட்ட உள்ளார்.

    ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்பே, கமல்ஹாசனின் பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #TNAssemblyElection #KamalHassan

    மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalhassan #pmmodi
    சென்னை:

    ஈரோடு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கோபிசெட்டிபாளையத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, 

    வரும் மக்களவை தேர்தல், பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் அல்ல, நம் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல். மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. 

    அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து விட்டது. இது பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அல்ல. நம்மை தேர்வு செய்வதற்கான தேர்தல். காமராஜர், எம்ஜிஆர் போன்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் மக்களை படித்தவர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #kamalhassan #pmmodi

    ஆரத்தி எடுக்கும் போது பணம் கொடுப்பது தவறு என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். #KamalHassan

    ஆலந்தூர:

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற செல்கிறேன்.

    பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அழுத்தமான அரசு வேண்டும். இதனை கட்டுப்படுத்த காவல் துறைக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் மக்களை சந்திக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.

    தீர்ப்பு என்பது மக்கள் கையில் தான் உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பது என்பது நல்ல வி‌ஷயம் எனக்கு கூட ஆரத்தி எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுப்பது தவறு.

    நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுக்கென்று முழுமையான தனி காவல் நிலையம் செயல்படும். ஏற்கனவே உழவர் சந்தை என்று ஒன்று உள்ளது. ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை. மற்ற கட்சிகள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.அதைவிட்டுவிட மாட்டோம்.

    தேர்தல் நேரத்தில் பி.எம். மோடி படம் வெளியிட காங்கிரஸ் தடை கேட்டுள்ளது. இது சரியானது தான். தேர்தலில் அந்த கட்சிக்கு இது விளம்பரம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan

    பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். #KamalHassan #tngovt #edappadipalanisamy
    சென்னை:

    பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் , “தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் மிக அலட்சியமாக வெளியிட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் செயல்பட்டுள்ளனர்.

    இதனை அடுத்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

    அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க முடியும்?, வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாக கூறும் நிலையில் எப்படி வெளியானது?. பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே, உங்களுக்கு பதறவில்லையா?, மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் மட்டுமின்றி காப்பாற்ற துடிப்போருக்கும் தண்டனை உண்டு. இந்த விவகாரத்தில் அரசாங்கம் அமைதி காக்கிறது.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே ஏன்?” என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். #KamalHassan #tngovt #edappadipalanisamy
    தேமுதிக மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalHaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.

    எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தகுதி உள்ளவர்கள், அவர்களுக்கு தெரிந்த தகுதி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம்.



    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம். தே.மு.தி.க., இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. வேறு சிலபேர் எங்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நல்லவர்கள் கூட நிற்பார்கள். எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #kamalHaasan
    மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். #Kamalhassan

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு 159 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் உறவினர்கள் தான். குறிப்பாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வலுவான உறவினர்கள். எனக்கு மீனவர்களின் மீன்பிடி தொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தெரியும்.

    கடந்த காலத்தில் நான் நடித்த கடல் மீன்கள் படத்திற்காக வலை விரித்து மீன் பிடிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்தவன். எனவே நான் மீனவர்களின் சீடன். சினிமாவிற்காக மட்டுமல்ல. தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் நானே வலை விரித்து மீன் பிடித்து அவர்களது கஷ்டங்களை நன்கு அறிந்தவன்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. அரசு கட்டங்கள் சேதமடைந்த நிலையில் பிரிக்கப்பட்ட காக்கா கூடு போல் உள்ளன. மேலும் பல இடங்களில் மரங்களும் அகற்றப்படாமல் உள்ளன.

    புயல் நிவாரண பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இந்த செயல் வேதனை அளிக்கிறது. புயலால் பாதித்த மக்களுக்குஅரசு என்ன செய்தது என்று தெரியவில்லை.

    வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் கொடுப்பது கொடையோ, தர்மமோ அல்ல. நாங்கள் பட்ட கடன் ஆகும்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்படும் பொருட்களும், நிவாரண உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் நேர்மையான முறையில் சம்பாதித்து வரிசெலுத்தி வெள்ளை பணத்தில் நான் (கறுப்பு பணம் அல்ல) உதவிகள் செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வதாராத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இது தேர்தலுக்காக கூறப்படும் செய்தி அல்ல. மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் நடிகை ஸ்ரீபிரியா, மாவட்ட பொறுப்பாளர் ஆனாஸ், வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானவன்மாதேவி மீனர கிராம பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். #Kamalhassan

    தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். #Kamalhassan

    திருவாரூர்:

    திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண்(திருவாரூர் தெற்கு), செய்யது அனாஸ்(நாகை தெற்கு), சதாசிவம்(தஞ்சை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயற்குழு உறுப்பினர்கள் நடிகை பிரியா ராஜ்குமார், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் நல்லவர்களை உருவாக்கியுள்ளது. அதுபோல் கெட்டவர்களை உருவாக்கியுள்ளது. வாரிசு அரசியலை உருவாக்கித் தந்ததும் இந்த திருவாருர். எனவே குடும்ப அரசியலை, வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே திருவாரூரில் இந்த கூட்டத்தை நடத்தி உள்ளோம்.

    இன்றைக்கு பலர் மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக கூறுகிறார்கள். அது மெகா கூட்டணி தானா என்பதை இங்கிருக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இங்கு வந்திருக்கக் கூடிய கூட்டம் பிரியாணி பொட்டலத்திற்கும் குவார்ட்டர் பாட்டிலுக்கும் வந்ததல்ல. அதுபோல காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட மாட்டோம் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    கஜா புயலுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க நிதி இல்லை என்றவர்கள் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் இலவசம் என்கிறார்கள். இப்பொழுது எங்கிருந்து பணம் வந்தது. ஆபத்துக்கு உதவாத அந்த பணம் நமக்கு எதற்கு? இன்றைக்கு 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாக சொல்கிறார்கள். இது உண்மை என்று ஒத்துக் கொண்டால், 60 லட்சம் குடும்பங்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வைத்திருப்பது யாருடைய குற்றம்.

    60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளுவது என்றால் அதற்கு 30 ஆண்டு காலம் பிடித்திருக்கும். அப்படி என்றால் இந்த இரண்டு கட்சிகளுமே மக்களை வறுமைக்கோட்டில் கீழே தள்ளுவதில் தான் குறியாக இருந்து இருக்கிறது. இப்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த இரண்டு கட்சிகளையும் கீழே தள்ள வேண்டும் என்பதுதான். அதைத்தான் மக்கள் நீதி மையம் செய்து கொண்டிருக்கிறது.

    நாம் தனித்து போட்டியிடுவது நல்லதல்ல என்று சிலர் திடீர் அக்கறை காட்டுகிறார்கள். நாங்கள் எங்களது கொள்கையில் தெளிவாக இருக்கிறோம்.

    இந்திய நாட்டின் அரசியலில் தமிழரின் பங்கு இருக்க வேண்டும். பிரதமர் யார் என்பதை காட்டும் அடையாளமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்காகத்தான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க உள்ளோம்.

    அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் களமிறங்கியுள்ளோம். என்னைப் பார்த்து டுவிட்டரில் அரசியல் நடத்துகிறார்கள் என்கிறார்கள். இதோ இந்த மேடையில் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருப்பது டுவிட்டர் அரசியலா? களத்திற்கு வந்து போராடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.

    நாங்கள் யாரோடும் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக குதிரை பேரம் பேச மாட்டோம். கூட்டணி என்பது ஏமாற்று வேலை. இதனை தற்போதைய அரசியல் நிலவரங்கள் நமக்கு உணர்த்துகிறது. நேர்மையான அரசியலை உருவாக்குவதே நம்முடைய கடமை.

    காவிரி டெல்டா மாவட்டங்களை பொருத்த வரை இப்பகுதியினை பசுமை வேளாண் பகுதி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழக மக்களின் நலன் பாதுகாக்கப்படுவது தான் மக்கள் நீதி மையத்தின் முக்கிய குறிக்கோளாகும். தமிழகத்தை மேம்பாடு செய்வதற்கு டெல்லி குறுக்கே நிற்குமேயானால் டெல்லியை ஆள்பவர்கள் யார் என்பதை நாம் தீர்மானித்து மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு இன்னும் 45 நாட்கள் தான் உள்ளது. எனவே அதற்கான முடிவுகளை நீங்கள் இன்றைக்கு தீர்மானிக்க வேண்டும். இந்த நாட்டை அனைவரும் பாதுகாப்போம். நாளை நமதே.

    இவ்வாறு அவர் பேசினார். #Kamalhassan

    ×