search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women strike"

    • ஆபாசமாக பேசியவரை கைது செய்ய வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சு வார்த்தை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றனர்.

    அதன்படி இன்று காலை 100 நாள் வேலை திட்ட பெண்கள் வழக்கம் போல் அத்திகுப்பம் ஏரியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் சாமு என்பவர், பெண்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டார்.

    இதனை தட்டி கேட்ட பெண்களை அவர் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட பெண்கள், காலை 10 மணி அளவில் வேலையை புறக்கணித்து திருப்பத்தூரில் இருந்து பொம்மிக்குப்பம் செல்லும் சாலைக்கு வந்தனர்.

    அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறப்பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இருப்பினும் அவர்கள், ஆபாசமாக பேசிய தி.மு.க. பிரமுகரை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • காமராஜபுரம் நேருஜி நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சரவணம்பட்டி,

    கோவை மாநகராட்சி 31 -வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் நேருஜி நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி காலி குடங்களுடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சரவணம்பட்டி காவல் துறையினர் மற்றும் 31 -வது வார்டு கவுன்சிலர் வைரமுருகன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜ், கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தத்தெடுத்த கிராமத்தில் மின்தடையை கண்டித்தும், குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும் பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். #Kamalhassan
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது அதிகத்தூர் கிராமம். இந்த கிராமத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தத்தெடுத்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும் இந்திராநகர் பகுதியில் குடிநீரும் சரிவர வினியோகிக்கப்படவில்லை.

    இதேபோல் அடிக்கடி அதிக மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதன பொருட்களும் சேதம் அடைந்து வந்தன.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று இரவு தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் புழுக்கத்தில் மக்கள் தவித்தனர்.

    மின்தடையை கண்டித்தும், குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை மேல்நல்லாத்தூர்- அகரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்கவும், மின் தடையை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதிக்கு 3 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. ஊராட்சி செயலர் சரிவர தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை.

    இதுபற்றி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பலன் இல்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அறிவிக்கப்படாத மின் தடையாலும் பாதிக்கப்பட்டு உள்ளோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி நடிகர் கமல்ஹாசனுக்கும் தெரியப்படுத்த உள்ளோம்” என்றனர். #Kamalhassan
    திருத்தணி அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த தாடூர் இருளர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 13 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். விவசாய கிணறு மற்றும் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை திருத்தணி - சோளிங்கர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×