search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JP Nadda"

    • தில்லைநகர் சாலை முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணி.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிற்பகலில் உத்தரவிட்டுள்ளது.

    மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கியும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

    அதன்படி, நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாற்றுப் பாதையில் பேரணி தொடங்கியுள்ளார்.

    அதன்படி, தில்லைநகர் சாலை முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணியை ஜே.பி.நட்டா நடத்தி வருகிறார்.

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
    • ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

    ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடு அனைத்து துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு நாடு வந்ததற்கு பிரதமரின் தலைமை பண்பே காரணம்.

    ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி தமிழராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில், கையில் செங்கோலுடன் பிரதமர் மோடி சென்றார்.

    திமுகவும், காங்கிரஸூம் தமிழ்க் கலாச்சாரத்தை கலங்கடிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு.
    • இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    • தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது.
    • மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது.

    அரியலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர் , விருதுநகர் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். 3 தொகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.

    தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பண்பாடு, சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் எதிரணியில் உள்ள தி.மு.க.வினர் சனாதனத்தையும், கலாசாரத்தையும் எப்படி ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

    பாராளுமன்றத்தில் மோடி தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வர நினைக்கும் போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசாரும், அவரை பேசவிடாமல் செய்து விடுகிறார்கள். ஆகவே தமிழக கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பா.ஜ.க. பாடுபட்டு கொண்டிருக்கிறது.

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் தோற்றுபோனாலும் கூட, மோடி அவர்கள் நிர்வாகத்தை திறமையாக கையாண்டதினால், இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    2024-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமரானால் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா பொருளாதாரத்தில் 6 மடங்கு வளர்ச்சி பெற்று உள்ளது. 2014-ல் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த செல்போன்களில் 97 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தது.

    ஆனால் தற்போது 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா செல்போன்களே பயன்பாடடில் உள்ளது. அதற்கு காரணம் பா.ஜ.க.வின் தெளிவான பொருளாதார கொள்கைதான். கார் உற்பத்தியில் ஜப்பான் முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் இருந்தது. தற்போது இந்தியா 2வது இடத்திற்கு வந்து விட்டது.

    இதற்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது. தற்போது தரமான மருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது. பெட்ரோலிய துறையிலும் 106 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் நாடு முன்னேறும்.

    ஏழை மக்களின் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், படித்த இளைஞர்களின் உயர்வு, விவசாயிகளின் பாதுகாப்பு, பட்டியலின மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்த மோடி செயல்பட்டு வருகிறார். ஏழ்மையை அகற்றி வலிமையான இந்தியாவாக உருவாக்க அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.

    80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி, அல்லது 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் 25 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்து விட்டனர் என்று உலக வங்கி கூறுகிறது.

    நாடு முழுவதும் 11.78 கோடி விவசாயிகளுக்கும், அதில் தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு கவுரவ நிதியாக 6 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    10 கோடி பெண்களுக்கு இந்தியாவில் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கும், சிதம்பரம் தொகுதியில் 2.5 லட்சம் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 16 லட்சம் தமிழகத்திலும், 43 ஆயிரம் வீடுகள் சிதம்பரம் தொகுதியிலும் கட்டப்பட்டு உள்ளது.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 11.4 கோடி குடிநீர் இணைப்பும், இதில் தமிழகத்தில் 80 லட்சம், சிதம்பரத்தில் 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி கவனம் உள்ளது. அதற்கு உதாரணம் தமிழகத்தின் வருவாய் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

    மத்திய அரசு நிதியானது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.1650 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கிராமபுற சாலை திட்டங்களுக்கு ரூ.630 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக ரூ.822 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம வளர்ச்சிக்காக ரூ.10,800 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

    ரெயில்வே திட்டங்களுக் 7 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை, திருச்சி, ஓசூர், கோவை, சேலம் உள்ளது. இதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளோம், 11 ஸ்மார் சிட்டி தமிழகத்திற்கு மோடி தந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீது மோடிக்கு மிகப்பெரிய பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஊழலை ஒழிப்பேன் என்று மோடி சபதம் ஏற்று உள்ளார். இந்தியா கூட்டணியோ ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று சபதமேற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    வாரிசு அரசியல், பணம் கொள்ளை யடித்தல், கட்டப்பஞ்சாயத்து என்று தி.மு.க. குடும்ப ஆட்சியின் கூடாரமாக இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை மைதானத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக செந்துறை ரோடு அமீனாபாத், இறைவன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

    இந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா, ஐ.ஜே.கே., அ.ம.மு.க. உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பாஜக தேசிய தலைவர் நட்டா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    • கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
    • டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தலையொட்டி, பா.ஜ.க. வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளிடமும், கடந்த 5-ந்தேதி மூத்த நிா்வாகிகளிடமும் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்டு பட்டியல் தயாரித்தனா்.

    இந்தப் பட்டியல் குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

    மூத்த நிா்வாகிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாஆகியோரை சந்தித்து ஆலோசிக்க போவதாக கூறிவிட்டு அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    தமிழக வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்தித்தார். இதையடுத்து அமித்ஷாவும், நட்டாவும் தமிழக குழுவினருடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


    டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    இன்னும் எந்த கூட்டணியும் முழுமை அடையாமல் இழுபறியான நிலையே நீடிப்பதால் பா.ஜனதா தரப்பிலும் வேட்பாளர் அறிவிப்பில் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை முதலில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    அதன்படி 8 தொகுதிகள் வரை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு, டாக்டர் ஆனந்த பிரியா, டாக்டர் காயத்ரி, சுமதி வெங்கடேஷ், மகா லெட்சுமி, கார்த்தியாயினி, உமாரதி ஆகிய பெண் நிர்வாகிகள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    பெரிய அளவில் கூட்டணி அமையாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தால் குறைந்த பட்சம் 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.
    • இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தங்களது X கணக்கில், 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை இணைத்துள்ளனர்.

    முன்னதாக தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    இதே போல் 2019 மக்களவை தேர்தலிலும் சவுக்கிதார் மோடி என்ற வாசகத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ்,"நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் இல்லை. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்;

    பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் மோடியின் குடும்பம் என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்துள்ளனர்.


    • குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
    • மத்தியபிரதேசத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வானார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்

    இந்நிலையில், ஜே.பி.நட்டா இன்று குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மதன் ரத்தோர், சுனிலால் காசியா ஆகியோரும் எம்.பி. ஆக போட்டியின்றி ராஜஸ்தானில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    • வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார்.
    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா நேற்று சென்னை வந்தார். தங்கசாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதன் பிறகு அவர் டெல்லி புறப்படும் முன்பு தோழமைக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்காகவே வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார். நட்டாவை சந்திக்க அவர் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை நட்டா அழைக்கவில்லை.

    பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமை பெறவில்லை.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சை சந்தித்து பேசினால் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அடுத்தடுத்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை நட்டா சந்திக்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.

    • பிரதமர் மோடியின் நினைவில் தமிழகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
    • எங்கு சென்றாலும் தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்வில் கலந்து கொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று (பிப்ரவரி 11) மாலை சென்னை வந்திருந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிகழ்ச்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "பிரதமருக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழகம், பிரதமர் மோடியின் நினைவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது."

    "பிரதமர் எங்கு சென்றாலும், தமிழை குறித்தும் தமிழ் மக்களை குறித்தும் பேசுகிறார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு பத்ம விருது அறிவித்து கௌரவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியின் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. உலகில் எங்கு சென்றாலும் தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.

    • சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
    • முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தை சந்திக்க இருக்கிறார்.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்துள்ள ஜே.பி. நட்டாவை பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

     


    சென்னை வந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ட்ரல் அருகே நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வத்தையும் ஜே.பி. நட்டா சந்திக்க இருக்கிறார். இந்த பயணத்தின் போதே பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வியூகம் பற்றிய ஆலோசனை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

    • காட்டாங்குளத்தூரில் நடக்கும் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
    • ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ஜனதாவின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக இருந்தது. அதன் பின்னர் மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக பயண நிகழ்ச்சி வகுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் திடீரென பயண திட்டத்தை மாற்றியுள்ளார். காலை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜே.பி.நட்டாவிற்கு பதில் மாநில செயலாளர் அண்ணாமலையும், பொறுப்பாளர் தேசிய விநாயகமும் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு நட்டா டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அதன் பிறகு அமைந்தகரையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    ×