search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜே.பி. நட்டா"

    • தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது.
    • மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது.

    அரியலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர் , விருதுநகர் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். 3 தொகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.

    தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பண்பாடு, சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் எதிரணியில் உள்ள தி.மு.க.வினர் சனாதனத்தையும், கலாசாரத்தையும் எப்படி ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

    பாராளுமன்றத்தில் மோடி தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வர நினைக்கும் போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசாரும், அவரை பேசவிடாமல் செய்து விடுகிறார்கள். ஆகவே தமிழக கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பா.ஜ.க. பாடுபட்டு கொண்டிருக்கிறது.

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் தோற்றுபோனாலும் கூட, மோடி அவர்கள் நிர்வாகத்தை திறமையாக கையாண்டதினால், இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    2024-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமரானால் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா பொருளாதாரத்தில் 6 மடங்கு வளர்ச்சி பெற்று உள்ளது. 2014-ல் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த செல்போன்களில் 97 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தது.

    ஆனால் தற்போது 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா செல்போன்களே பயன்பாடடில் உள்ளது. அதற்கு காரணம் பா.ஜ.க.வின் தெளிவான பொருளாதார கொள்கைதான். கார் உற்பத்தியில் ஜப்பான் முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் இருந்தது. தற்போது இந்தியா 2வது இடத்திற்கு வந்து விட்டது.

    இதற்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது. தற்போது தரமான மருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது. பெட்ரோலிய துறையிலும் 106 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் நாடு முன்னேறும்.

    ஏழை மக்களின் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், படித்த இளைஞர்களின் உயர்வு, விவசாயிகளின் பாதுகாப்பு, பட்டியலின மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்த மோடி செயல்பட்டு வருகிறார். ஏழ்மையை அகற்றி வலிமையான இந்தியாவாக உருவாக்க அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.

    80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி, அல்லது 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் 25 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்து விட்டனர் என்று உலக வங்கி கூறுகிறது.

    நாடு முழுவதும் 11.78 கோடி விவசாயிகளுக்கும், அதில் தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு கவுரவ நிதியாக 6 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    10 கோடி பெண்களுக்கு இந்தியாவில் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கும், சிதம்பரம் தொகுதியில் 2.5 லட்சம் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 16 லட்சம் தமிழகத்திலும், 43 ஆயிரம் வீடுகள் சிதம்பரம் தொகுதியிலும் கட்டப்பட்டு உள்ளது.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 11.4 கோடி குடிநீர் இணைப்பும், இதில் தமிழகத்தில் 80 லட்சம், சிதம்பரத்தில் 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி கவனம் உள்ளது. அதற்கு உதாரணம் தமிழகத்தின் வருவாய் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

    மத்திய அரசு நிதியானது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.1650 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கிராமபுற சாலை திட்டங்களுக்கு ரூ.630 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக ரூ.822 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம வளர்ச்சிக்காக ரூ.10,800 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

    ரெயில்வே திட்டங்களுக் 7 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை, திருச்சி, ஓசூர், கோவை, சேலம் உள்ளது. இதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளோம், 11 ஸ்மார் சிட்டி தமிழகத்திற்கு மோடி தந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீது மோடிக்கு மிகப்பெரிய பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஊழலை ஒழிப்பேன் என்று மோடி சபதம் ஏற்று உள்ளார். இந்தியா கூட்டணியோ ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று சபதமேற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    வாரிசு அரசியல், பணம் கொள்ளை யடித்தல், கட்டப்பஞ்சாயத்து என்று தி.மு.க. குடும்ப ஆட்சியின் கூடாரமாக இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை மைதானத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக செந்துறை ரோடு அமீனாபாத், இறைவன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

    இந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா, ஐ.ஜே.கே., அ.ம.மு.க. உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பாஜக தேசிய தலைவர் நட்டா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • 5 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
    • தொடர்ந்து பொதுக்கூ ட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கட்சி அலுவ லகத்தை திறந்து வைக்க இன்று கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமை க்கப்பட்ட ஹெலிபேடில் வந்து இறங்கினார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலும் கிருஷ்ணகிரி குந்தா ரப்பள்ளி கூட்டு ரோடு அருகில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தை பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து 75 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து காணொலி காட்சி மூலம் தருமபுரி, நாமக்கல், திருச்சி, திரு வள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவ லகத்தை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பொதுக்கூ ட்ட நிகழ்ச்சி நடந்தது.

    இந்த விழாவிற்கு பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மத்திய மந்திரி எல். முருகன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் கே.எஸ்.ஜி. சிவபிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், செய்தி தொடர்பாளர் நரசிம்மன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் அன்பரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ஜே.பி.நட்டாவை வருகையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது. இதனால் கடும் சோதனைக்கு பிறகே தொண்டர்களை உள்ளே அனுமதித்தனர்.

    தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • கிருஷ்ணகிரிக்கு வருகிற 10-ந் தேதி பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகை தருகிறார்.
    • இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    பா.ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரிக்கு வருகை தருகிறார்.

    பெங்களூருக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    பின்னர், கிருஷ்ணகிரியில்- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

    இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளியில் புதிதாக பா.ஜனதா கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடம், ஹெலிபேடு ஆகியவற்றை பா.ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கே.பி.ராமலிங்கம், நரேந்திரன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், மாவட்ட தலைவர்கள் சிவப்பிரகாசம் (கிருஷ்ணகிரி கிழக்கு), நாகராஜ் (கிருஷ்ணகிரி மேற்கு), மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.

    ×