search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரிக்கு, 10-ந் தேதி  ஜே.பி. நட்டா வருகை
    X

    கிருஷ்ணகிரிக்கு, 10-ந் தேதி ஜே.பி. நட்டா வருகை

    • கிருஷ்ணகிரிக்கு வருகிற 10-ந் தேதி பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகை தருகிறார்.
    • இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    பா.ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரிக்கு வருகை தருகிறார்.

    பெங்களூருக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    பின்னர், கிருஷ்ணகிரியில்- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

    இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளியில் புதிதாக பா.ஜனதா கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடம், ஹெலிபேடு ஆகியவற்றை பா.ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கே.பி.ராமலிங்கம், நரேந்திரன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், மாவட்ட தலைவர்கள் சிவப்பிரகாசம் (கிருஷ்ணகிரி கிழக்கு), நாகராஜ் (கிருஷ்ணகிரி மேற்கு), மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.

    Next Story
    ×