search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "houses"

    • அம்மன்ஹட்டி பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
    • விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு, இத்தலார் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கல்லக்கொரை முதல் பி.மணிஹட்டி சாலை, இத்தலார் முதல் குந்தா சாலையில் சேதமடைந்த பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.மேலும் அம்மன்ஹட்டி பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருப ர்களிடம் கூறியதாவது:-

    கூடலூர், தெய்வம லையில் ஏற்பட்டு உள்ள விரிசலை புவி யியல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் விதிமுறை களை மீறி கட்டப்பட்ட குடியிருப்பு களை அகற்றி விட்டு, அவர்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை ரூ.50 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது. விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ், குந்தா தாசில்தார் இந்திரா உடனிருந்தனர்.

    • 13, 14, 15, ஆகிய நாட்கள்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
    • தேசிய கொடி ஏற்றி பொதுமக்கள் சுதந்திர தினமகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    அவினாசி :

    75ம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகள் வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் 13, 14, 15, ஆகிய நாட்கள்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி அவினாசி பேரூராட்சி அலுவலகம் ,தாலுகா அலுவலகம், பழங்கரை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட அலுவலகங்கள், ஓட்டல்கள், மற்றும் ஏராளமான வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி பொதுமக்கள் சுதந்திர தினமகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

    • இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
    • தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகின்ற 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளு க்கும் தேசியக்கொடிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 2562 வீடுகளுக்கு சென்று தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுர ங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் 75வது சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் கடைகளுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை இந்திய தேசியக்கொடி ஏற்றிட நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று நாட்களிலும் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளு க்கான கொடிகள் நகராட்சி, பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டம் துவக்கபட்டது முதற்கட்டமாக ஆறு ஆயிரம் தேசிய கொடியினை வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை வேதாரணியம் உப்பு சத்திய கிரக நினைவு கட்டிடத்தில் நகரமன்ற தலைவர் புகழேந்தி துவக்கிவைத்தார் நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் மங்களநாயகி, நகராட்சி கமிஷனர் ஹேமலாதா பொறியளார் முகமது இப்ராஹிம், சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வேதாரத்தினம் பேரன் கேடிலியப்பன் ரோட்டரி சங்க தலைவர் செந்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொ ண்டனர்

    தேசியகொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும். தனியார் கட்டிட உரிமையா ளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர போரட்ட நிகழ்வுகளில் முக்கிய பங்குவகித்த வேதாரண்யத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என நகரமன்ற தலைவர் புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளர்.

    • ஊட்டி காந்தல் பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
    • சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு உடனடியாக நிதி உதவி வழங்கப்பட்டது.

    ஊட்டி 

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்துவரும் நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.


    இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் நேரில் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு அவர்களுக்கு உடனடியாக நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், நகர மன்ற உறுப்பினரும், பாசறை மாவட்ட செயலாளருமான அக்கீம்பாபு, நகரமன்ற உறுப்பினர் லயோலோகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

    • வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
    • வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா தேவாலா அருகே வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் 2 காட்டு யானைகள் புகுந்தது.

    தொடர்ந்து இளையராஜா என்பவரது கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து மணிகண்டன், சுலைக்கா, பெரியசாமி, வளர்மதி, சிவன் கருப்பன், முத்துமாரி ஆகியோரது வீடுகளை உடைத்து காட்டு யானைகள் சேதப்படுத்தின. ஒரே நாள் இரவில் காட்டு யானைகள் 6 வீடுகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதை கண்டித்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.

    தகவல் அறிந்த கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் நடத்தப்படவில்லை. தொடர்ந்து வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டு வந்தது. மேலும் இவரது வீடு தனியாக உள்ளதால் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது.

    இதன் காரணமாக அவர் இரவில் உறவினர்கள் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி வந்தார்.நேற்று காலை தனது வீட்டுக்கு வந்தபோது காட்டு யானை உடைத்து சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

    கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தாக்குதலால் நிம்மதியை இழந்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியுடன் கூறினர். ஒரே நாளில் 7 வீடுகளை காட்டு யானைகள் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • அதிகாரிகள் விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுப் பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை, வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் காசிபாளையம், ஆலங்காடு, காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக ஆக்கிரமித்து வீடு கட்டி வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மாற்று இடம் மற்றும் வீடுகள் வழங்கி காலி செய்யப்பட்டுள்ளன.அவ்வகையில், நொய்யல் ஆற்றின் வடபுறத்தில் மாநகராட்சி கணக்குப்படி 97 வீடுகள், பொதுப்பணித்துறை கணக்குப்படி 135 வீடுகள் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பது தெரிய வந்தது. இந்த வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால், யாரும் காலி செய்யவில்லை.

    இந்நிலையில் 56 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. அவ்வகையில் 9 குடும்பங்கள் அங்கிருந்து தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வீடுகளை காலி செய்தனர்.மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு வழங்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோர்ட்டு உத்தரவுப்படி காலி செய்த வீடுகளை இடித்து அகற்றி தங்கள் வசம் எடுக்க அங்கு அதிகாரிகள் சென்றனர்.வீடு பெறுவதற்கான நடைமுறை குறித்து மீதமுள்ள குடியிருப்புவாசிகளிடம் விளக்கம் தெரிவித்த அதிகாரிகள் விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
    • இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களா–கவே வீடு கட்டி கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அளவில் வீடு கட்ட இடவசதி இருக்க வேண்டும். இந்நிலம் அத்தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். நில உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

    நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அத்தொழிலாளியின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    தகுதியானவர்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றை tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரம் அறிய ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது 0424 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார். 

    • 27 பேர் வீட்டுக்கான தொகையை அவர்களாகவேசெலுத்தினர்.
    • 6 பேர் தங்கள் வீடுகளைக் காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரை மற்றும் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற உரிய துறை மூலம் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.காயிதே மில்லத் நகரில் கரையோரம் உள்ள 108 வீடுகளுக்கு சில மாதம் முன், காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.இங்கு வசித்தோருக்கு வீரபாண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் 27 பேர் வீட்டுக்கான தொகையை அவர்களாகவேசெலுத்தினர்.மேலும் 60க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில்ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மின் வாரியம், வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.

    அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்ற சிலர் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.வீடு வெள்ளையடிக்க வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும். தற்போதுள்ள வீடு காலி செய்ய ஆள் மற்றும் வாகன வசதியில்லை என்று கூறினர்.மின் இணைப்பு பெற உடனடியாக அதே இடத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஒரு சிலர் பொருட்களை கொண்டு செல்ல வசதியில்லை என்றபோது அவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் உதவினர்.வீடு ஒதுக்கீடு பெற்ற 6 பேர் தங்கள் வீடுகளைக் காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றனர். அந்த வீடுகள் அடையாளம் காணப்பட்டது.பிற வீடுகளையும் உடனடியாக காலி செய்ய அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்கினர். அனைத்து வீடுகளும் பொருட்கள் அகற்றி காலி செய்து கொள்ள அதிகாரிகள் சில நாள் அவகாசம் வழங்கினர். அதன் பின் இடித்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை நகரில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.
    சென்னை:

    கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கிய சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதும் வறண்டு விட்டன. பூண்டி, புழல் ஏரிகளில் உள்ள தண்ணீரும் இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

    இதனால் சென்னை நகரில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.

    தற்போது பைப்புகளில் வினியோகிக்கப்படும் தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். போர்வெல்களில் நீரும் இல்லாததால் லாரி, டிராக்டரில் சப்ளை செய்யப்படும் தண்ணீரையே எதிர்பார்த்து காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட வட சென்னை பகுதியில் பைப்புகளில் தண்ணீர் வருவது நின்று விட்டது.

    கொளத்தூர் பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. பெருங்குடி பகுதியில் ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் சப்ளையாகிறது. அம்பத்தூரில் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் ½ மணி நேரமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    கொட்டிவாக்கத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் 2 மணி நேரம், கோடம்பாக்கத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது.

    ராயபுரம், திருவொற்றியூர் பகுதியில் டேங்கர் லாரிகளில் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள். நங்கநல்லூரில் வாரத்துக்கு ஒருமுறை ¾ மணி நேரம் மட்டும் தண்ணீர் சப்ளையாகிறது.

    முறையாக குடிநீர் வராததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதி வாரியாக 800 லாரிகள் மூலம் 8 ஆயிரத்து 400 முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ரெட்டேரி ஏரியில் இருந்து அடுத்த மாதம் முதல் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    மேலும் பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரி தண்ணீரையும் குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பி உள்ளனர்.

    பிரதம மந்திரியின் திட்டத்தில் நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு மேலும் 5 லட்சத்து 60 ஆயிரத்து 695 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. #PMModi #PMAYUrban
    புதுடெல்லி:

    பிரதம மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு 2022-ம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித்தருவது என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    இந்நிலையில் மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளருமான துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் 43-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 174 வீடுகளும், புதுச்சேரியில் 1,158 வீடுகளும் உள்பட நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு மேலும் 5 லட்சத்து 60 ஆயிரத்து 695 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை மொத்தம் 79 லட்சத்து 4 ஆயிரத்து 674 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
    ×