search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெபருமை"

    • நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் 75வது சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் கடைகளுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை இந்திய தேசியக்கொடி ஏற்றிட நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று நாட்களிலும் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளு க்கான கொடிகள் நகராட்சி, பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டம் துவக்கபட்டது முதற்கட்டமாக ஆறு ஆயிரம் தேசிய கொடியினை வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை வேதாரணியம் உப்பு சத்திய கிரக நினைவு கட்டிடத்தில் நகரமன்ற தலைவர் புகழேந்தி துவக்கிவைத்தார் நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் மங்களநாயகி, நகராட்சி கமிஷனர் ஹேமலாதா பொறியளார் முகமது இப்ராஹிம், சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வேதாரத்தினம் பேரன் கேடிலியப்பன் ரோட்டரி சங்க தலைவர் செந்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொ ண்டனர்

    தேசியகொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும். தனியார் கட்டிட உரிமையா ளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர போரட்ட நிகழ்வுகளில் முக்கிய பங்குவகித்த வேதாரண்யத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என நகரமன்ற தலைவர் புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளர்.

    ×