என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
அவினாசியில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிய பொதுமக்கள்
- 13, 14, 15, ஆகிய நாட்கள்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
- தேசிய கொடி ஏற்றி பொதுமக்கள் சுதந்திர தினமகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அவினாசி :
75ம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகள் வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் 13, 14, 15, ஆகிய நாட்கள்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அவினாசி பேரூராட்சி அலுவலகம் ,தாலுகா அலுவலகம், பழங்கரை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட அலுவலகங்கள், ஓட்டல்கள், மற்றும் ஏராளமான வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி பொதுமக்கள் சுதந்திர தினமகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Next Story






