search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகள்"

    • வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காட்டில் 2 நாட்களாக கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழையினால் ஆறு கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.

    தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் களக்காடு ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்கு றிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

    முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

    வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வீடு களை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் நேற்று மாலை பெரும்பாலான வீடுகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். வீட்டின் முற்றம், வாசல், மாடி என எங்கு திரும்பினாலும் தீபமாகவே காட்சியளித்தது. பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சில வீடுகளில் ஓலை கொலுக்கட்டை செய்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதனால் திருப்பூரில் கார்த்திகை தீபத் திருவிழா களை கட்டியது.

    சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத வாலீஸ்வரர் சாமிக்கு, பால், தயிர், இளநீர் உள்பட 32 வகை திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேவூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில், அஞ்சநேயர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில்களில் கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது.

    இதுபோல் ஊத்துக்குளி பகுதியில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி கைலாசநாதர் கோவில், அம்மன் கோவில்களில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை பெண்கள் புத்தாடை அணிந்து கோவில்களில் தீபம் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அவரவர் வீடுகளில் வண்ண கோலமிட்டு மண் விளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனர்.

    • கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
    • 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

    நேற்று தஞ்சை, குருங்குளம், திருவையாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

    இருப்பினும் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் மழை இல்லை.

    இருந்தாலும் இரவில் மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 11 கூரை வீடுகள், 5 ஓட்டு வீடுகள் என மொத்தம் 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு:-

    தஞ்சாவூர்-9.50, அதிராம்பட்டினம் -9.20, ஒரத்தநாடு -9, திருவையாறு-7.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு 165 வீடுகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மீனவ வீட்டு வசதி திட்டத்தில் மீனவர்க ளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து ராமநாத புரம் மாவட்டத்திற்கு 165 வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு உறுப்பி னர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலு வலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ராமநாத புரம் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்கு நர்கள் அல்லது துணை இயக்குநர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ள லாம்.

    விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தினை அரசு வழிகாட்டு நெறி முறைகளின்படி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவே அல்லது நேரடியாகவே 30.11.2023 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்மந்தப் பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி அல்லது துணை இயக்குநர் அலுவலங்களை தொடர்புகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரவித்துள்ளார்.

    • சிற்றாறு 1 அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் மற்றும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப் போது மழை பெய்தது.

    மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். மழை விட்டு விட்டு பெய்து வந்ததையடுத்து தீபாவளி விற்பனையும் மந்தமாக இருந்தது. கடை வீதிகளில் இன்று கூட்டம் குறைவா கவே காணப்பட்டது. களி யக்காவிளை, குழித்துறை, தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு 1 அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சி பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டு மானாலும் உபரி நீர் வெளி யேற்றப்படலாம் என்பதால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 465 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.17 அடியாக உள்ளது. அணைக்கு 512 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 18.71 அடியாக உள்ளது. அணைக்கு 155 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 234 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில் நேற்று மேலும் 4 வீடுகள் இடிந்துள்ளது.

    அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாவில் தலா ஒரு வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை, தடிகாரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டை களில் மழை நீர் தேங்கி யுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    அணைகளும், பாசன குளங்களும் நிரம்பி வருவ தையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிர படுத்தியுள்ளனர். ஏற்க னவே மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். 6500 ஹெக்டே ரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் நடவு பணிகள் நடந்து வருகிறது.

    தற்போது நடவு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    • ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
    • கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    இந்த நிலங்களில் பலர் உரிய அனுமதி பெற்று வீடு கட்டி கோவிலுக்கு வரி செலுத்தி வசித்து வருகின்ற னர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளன. இந்த நிலையில் சிலர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை முறையாக செலுத்தாமலும், கோவில் நிலத்தில் உரிய அனுமதி யின்றியும் கட்டிடம் கட்டி வசித்து வந்ததாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதியின்றி வசித்து வருபவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும், வரி செலுத்தாத வர்கள் வரி பாக்கியை செலுத்துமாறும் பலமுறை நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தீர்வு ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வசித்து வந்த வீடுகளை, இடித்து அப்புப்புறப்படுத்தும்படி நிலம் மீட்பு தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கோவில் அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து நேற்று மாலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட2 வீடுகளை இடித்து அகற்றுவ தற்காக போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியே செல்லும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டை காலி செய்வதற்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டு மென கோரிக்கை வைத்த னர். அதற்கு அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டே இது குறித்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்ட தாகவும் இனி அவகாசம் தர முடியாது எனவும் தெரி வித்தனர். மேலும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்று மீண்டும் அதே இடத்தில் வீடு கட்டி வசிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 வீடுகளில் வசித்தவர்கள் போலீசார் பாதுகாப்புடன் வெளி யேற்றப்பட்டு அந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப் பட்டன.

    • மாம்பழத்துறையாறு. சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன
    • அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம்பழத்துறையாறு. சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. இதனால் அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி அணைகளு க்கும் தண்ணீர் வரத்து அதிக மாகவே உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.91 அடியாக உள்ளது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.70 அடி நீர்மட்டம் உள்ளது.

    பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 354 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 172 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 372 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வழக்கமாக அணையின் முழு கொள்ளளவில் 6 அடி குறைவாக தண்ணீர் இருக்கும் போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் அந்த குறிப்பிட்ட அளவை நெருங்கி வருவதால், பொதுப்பணித்துறையினர் அணைகளுக்கு வரும் நீர்வரத்ைத 24 மணி நேரமும் கண்காணித்து வரு கின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வரும் நிலையில் பொய்கை அணை மட்டும் நீர் வரத்து இல்லாமல் உள்ளது.42.65 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 8.60 அடியே நீர்மட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றும் மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கொட்டாரத்தில் அதிகபட்சமாக 16 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இதற்கிடையில் கல்குளம் தாலுகாவில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 14 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே 125-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி.
    • சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி துணை தலைவர் வெற்றிவேல், ஊராட்சி செயலர் ரெங்கராசு, டாக்டர் ஆனந்தன் சுகதார ஆய்வாளர் அருளானந்தம், ஒன்றிய கவுன்சியர் கஸ்தூரி குஞ்சையன் உள்ளிட்ட சுகாதார துறையினர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
    • தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமிண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் இதேபகுதியில் நடிகர் பாபிசிம்ஹா அரசு அனுமதியின்றி 3 மாடி கட்டிடம் கட்டி வருவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கொடைக்கானலில் ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

    இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், நிலஅளவையர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பாபிசிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டிடங்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வனத்துறையினரும் ஈடுபட்டனர். அளவீடு செய்யப்பட்ட அறிக்கையை திண்டுக்கல் கோட்டாட்சியர் ராஜாவிடம் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிகுமார் பிரசாத் தெரிவிக்கையில், கொடைக்கானலில் 2400 சதுரடிக்குமேல் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது. ஆனால் தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

    இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. வனத்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டிடம் கட்ட அனுமதி பெறவில்லை. பாபிசிம்ஹா தனது தாயார் பெயரில் உள்ள இடத்தை புதுப்பித்து வீடு கட்டி வருகிறார். ஆனால் அதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என தெரியவில்லை.

    2 பேரிடமும் நோட்டீஸ் அளித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

    • நாகர்கோவில் மாநகராட்சியில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் அனுமதி
    • பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள நிலையில், இவ்வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

    மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தான் சேதமடைந்த பழைய வீடுகளை சீரமைப்பதற்கு விதிகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

    கடந்த 11-4-2023 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது இது குறித்து நான் பேசினேன். அப்போது நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் 2019-ம்  ஆண்டில் அப்போது ஆட்சியில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் கம்பைன்டு டெவலப்மெண்ட் அன்ட் பில்டிங் ரூல்ஸ் 2019 என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்த சட்ட அடிப்படையிலேயே ஒரு சென்ட்டுக்கு குறைவான நிலங்களும், அதே போல் 3 அடிக்கு குறைவான தெருக்களும் இருக்கின்றன. அவர்கள் கட்டிட அனுமதிக்கு சென்றால் இதுவரையில் கிடைக்கவில்லை. கிட்டத் தட்ட 3 ஆயிரம் விண்ணப்பங்கள் அரசிடம் பெண்டிங்கில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அவர்கள் வீடு கட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அவர்களால் வீடு கட்டுவதற்கு ஒரு செங்கல் கூட வாங்க முடியவில்லை என பேசினேன்.

    அதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி பதிலளித்து பேசும் போது, கண்டிப்பாக கவனிக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து இதுகுறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசால் அலுவலர்கள் அடங்கிய கமிட்டி போடப்பட்டு அவர்களும் நாகர்கோவில் வந்து, குறுகிய தெருக்களையும், ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் அமைந்துள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    உடனடியாக துறை அமைச்சர் இது குறித்து நடவடிக்கை எடுத்து நாகர்கோவில் மாநகராட்சியில் குறுகிய இடங்களில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் வீடுகள் கட்டுவதற்கும், வீடுகளை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பித்துள்ள மக்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி வாயிலாக கட்டிட அனுமதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு வழங்கும் விதிகளில் மக்கள் நலன்கருதி சலுகைகள் அளிக்கப்பட்டன. இந்நிலை மீண்டும் தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

    • கான்கிரீட் வீடுகளும் கட்டி கொடுத்து இலவச மின் இணைப்பும் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.
    • முன்னாள் கலெக்டர் தொடக்கி வைத்த செந்தமிழ் நகா் திட்டம் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம், அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையில் தஞ்சாவூா் கலைஞா் நகரைச் சோ்ந்த விளிம்பு நிலை மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூா் மாவட்டத்தில் விளிம்பு நிலை மக்களுக்காகச் செந்தமிழ் நகா் திட்டத்தை முன்னாள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கொண்டு வந்து வீடுகள் கட்டிக் கொடுத்தாா். இந்த திட்டத்தில் இடம் தேர்வு செய்து இலவசமாக வீட்டு மனைப்பட்டா, சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை தயார் செய்து கான்கிரீட் வீடுகளும் கட்டி கொடுத்து இலவச மின் இணைப்பும் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.

    இதேபோல, கலைஞா் நகரைச் சோ்ந்த வீடு இல்லாத 48 குடும்பங்களைச் சோ்ந்த எங்களுக்கு திருக்கானூா்பட்டியில் தயாா் நிலையில் உள்ள செந்தமிழ்நகா் திட்டம் மூலம் இலவச மனைப் பட்டா வழங்கி இலவசமாக வீடுகள் கட்டித் தர வேண்டும். முன்னாள் கலெக்டர் தொடக்கி வைத்த செந்தமிழ் நகா் திட்டம் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கடைமடை பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் 28 பணிகள் 301.13 கி.மீ தொலைவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

    பெருங்கட்மபனூர் மற்றும் ஓர்குடி கிராமங்களில் வாய்க்கால் தொலைவு 4.00 கி.மீ முதல் 7.00 கி.மீ வரை மற்றும் 12.00 கி.மீ முதல் 15.00 கி.மீ வரை தேவநதி வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரம் வரை மற்றும் தெத்தி வடிகால் 3 கிலோமீட்டர் தூரம் வரை வடிகால் மற்றும் வாய்க்கால்கள் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

    இதன் பாசனப்பரப்பு 12085 ஏக்கர் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, பெருங்கடம்பனூர் கிராமம் புளியந்தோப்பு தெருவில் மின்சார கசிவு காரணமாக ஜெயராமன் மற்றும் பிரேம்தாஸ் ஆகியோரது தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொ றியாளர் ராஜேந்திரன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×