search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளை காலி செய்ய பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற கோரிக்கை
    X

    திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில், துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் நடந்தது.

    வீடுகளை காலி செய்ய பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற கோரிக்கை

    • பெரியபட்டினத்தில் வீடுகளை காலி செய்ய பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
    • யூனியன் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார். அலுவலக உதவியாளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர் சிவலிங்கம்: மாயாகுளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தில் 100 நாட்கள் பணியாளர்களை வைத்து கூட்டம் நடத்துகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    பைரோஸ்கான்: பெரியபட்டினம் ஊராட்சியில் ஜலாலியா நகர், தங்கையா நகர் ஆகிய பகுதிகளில் 2011-ம் ஆண்டு 80 பேருக்கு அரசு இலவச பட்டா வழங்கி உள்ளது.இந்த இடத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த மக்களை வீடுகளை விட்டு காலி செய்யுமாறு ஊராட்சி தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

    கமிஷனர்: இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி: காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கழுநீர்ஓடை, அலை வாய்க் கரைவாடி, ஸ்ரீநகர், கோகுலம் நகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வருவதில்லை. அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலாராணி: இந்த யூனியன் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கோரிக்கையை யாரும் முழுமையாக கேட்பதி ல்லை. எங்களின் குரலை கேட்டால்தான் மக்களின் குரலை நிவர்த்தி செய்ய இயலும். அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருமுருகன்: ஆலங்குளம் கண்மாயில் அடர்ந்து வளர்ந்த கருவேல் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் நீரை தேக்க வழி இல்லாமல் உள்ளது. ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

    சுமதி ஜெயக்குமார்: முத்து ப்பேட்டை ஊராட்சியில் ஏராளமானோருக்கு டெங்கு நோய் பாதிப்பின் அறிகுறி உள்ளது. கொசு மருந்து அடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரியபட்டினம் கவுன்சிலர் பைரோஸ் கான்: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பி.டி.ஓ. கணேஷ் பாபு நன்றி கூறினார்.

    Next Story
    ×