search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைப்பு"

    • 10 அரசு பஸ்களில் உடனடியாக அமலுக்கு வந்தது
    • விரைவு பஸ்களில் செய்வோர் ரூ.64 செலுத்த வேண்டும்

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை போக்குவரத்துக் கழக கிளையில் சுமார் 36 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து சேலம், திருப்பூர், கோவை, பழனி, பொள்ளாச்சி பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ் கட்டணமாக ரூ.64 வசூலிக்கப்பட்டது. அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்ப டும் நிலையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் வால் பாறை-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வந்த பஸ்களில் 10 பஸ்கள் கடந்த 24-ந் தேதி முதல் சாதரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டன.

    இந்த பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து, பயணக் கட்டணமாக ரூ.64க்கு பதிலாக ரூ.48 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விரைவு பஸ்களில் பயணம் செய்வோர் கட்டணமாக ரூ.64 செலுத்த வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சானல்கள் சீரமைப்பு பணி தீவிரம்
    • அணைகளின் நீர்மட்டம் சரிவு

    நாகர்கோவில், ஜூன்.22-

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு 2 வார காலங்கள் ஆன பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.

    இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். உடனே சானல்களை தூர்வார வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதையடுத்து சானல்களை தூர்வார ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சானல்கள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. கிளை கால்வாயில் தற்பொழுது தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது. பிரதான சானல்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்ளும் போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டு சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 716 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், நாஞ்சில்நாடு புத்தனாறு சானல், அனந்தனார் சானல்களில் விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.97 அடியாக இருந்தது.

    362 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 716 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.25 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கோடை மழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக உள்ளது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு 1300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதும் பின்னர் மழை பொழிவு இன்றியும் நிலையற்றத் தன்மையுடன் இருந்து வருகிறது.

    இதனால் அணைக்கு ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், ஒரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது.

    மேலும் தற்போது அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,312 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இதுவரை 2,000 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும் என மொத்தம் 1, 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×