என் மலர்

    நீங்கள் தேடியது "Reduction of water"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்தது.

    இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.66 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 609 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வரை கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 1800 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.

    தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும் பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலி ருந்து 2,700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை நிலவரபடி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியில் நீடித்து வருகிறது.
    • அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.90 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரபடி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1263 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நேற்றைய விட இன்று குறைக்கப்பட்டுள்ளது. இன்று பவானி ஆற்றுக்கு 250 கன அடி என மொத்தம் 1250 கன அடி விதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக உள்ளது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு 1300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதும் பின்னர் மழை பொழிவு இன்றியும் நிலையற்றத் தன்மையுடன் இருந்து வருகிறது.

    இதனால் அணைக்கு ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், ஒரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது.

    மேலும் தற்போது அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,312 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இதுவரை 2,000 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும் என மொத்தம் 1, 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் நின்றுவிட்டது.
    • இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் நீர்மட்டம் கடந்த வாரம் முழுகொள்ளளவை எட்டியது. இதனைதொடர்ந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் நின்றுவிட்டது.

    இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காைல நிலவரப்படி 68.75 அடியாக உள்ளது. வரத்து 1956 கனஅடி, நேற்று வரை 2060 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று காைல முதல் 1166 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5509 மி.கனஅடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.75 அடியாக உள்ளது. வரத்து 1271 கனஅடி, திறப்பு 2150 கனஅடி, இருப்பு 6483 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து மற்றும் திறப்பு இல்லை. இருப்பு 435.32 மி.கனஅடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி, வரத்து 3 கனஅடி, இருப்பு 100 மி.கனஅடி.

    ×