search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டீஸ் வினியோம்"

    • 27 பேர் வீட்டுக்கான தொகையை அவர்களாகவேசெலுத்தினர்.
    • 6 பேர் தங்கள் வீடுகளைக் காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரை மற்றும் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற உரிய துறை மூலம் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.காயிதே மில்லத் நகரில் கரையோரம் உள்ள 108 வீடுகளுக்கு சில மாதம் முன், காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.இங்கு வசித்தோருக்கு வீரபாண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் 27 பேர் வீட்டுக்கான தொகையை அவர்களாகவேசெலுத்தினர்.மேலும் 60க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில்ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மின் வாரியம், வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.

    அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்ற சிலர் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.வீடு வெள்ளையடிக்க வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும். தற்போதுள்ள வீடு காலி செய்ய ஆள் மற்றும் வாகன வசதியில்லை என்று கூறினர்.மின் இணைப்பு பெற உடனடியாக அதே இடத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஒரு சிலர் பொருட்களை கொண்டு செல்ல வசதியில்லை என்றபோது அவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் உதவினர்.வீடு ஒதுக்கீடு பெற்ற 6 பேர் தங்கள் வீடுகளைக் காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றனர். அந்த வீடுகள் அடையாளம் காணப்பட்டது.பிற வீடுகளையும் உடனடியாக காலி செய்ய அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்கினர். அனைத்து வீடுகளும் பொருட்கள் அகற்றி காலி செய்து கொள்ள அதிகாரிகள் சில நாள் அவகாசம் வழங்கினர். அதன் பின் இடித்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    ×