search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMAY-Urban"

    பிரதம மந்திரியின் திட்டத்தில் நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு மேலும் 5 லட்சத்து 60 ஆயிரத்து 695 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. #PMModi #PMAYUrban
    புதுடெல்லி:

    பிரதம மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு 2022-ம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித்தருவது என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    இந்நிலையில் மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளருமான துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் 43-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 174 வீடுகளும், புதுச்சேரியில் 1,158 வீடுகளும் உள்பட நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு மேலும் 5 லட்சத்து 60 ஆயிரத்து 695 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை மொத்தம் 79 லட்சத்து 4 ஆயிரத்து 674 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
    ×