search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முயற்சி"

    • மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
    • பள்ளி சீருடையை மாற்றி விட்டு டியூசன் வகுப்புக்கு புறப்பட்டான்.

    மணவாளக்குறிச்சி :

    குமரி மாவட்டம் மண்டைக்காடுஅருகே உள்ள கூட்டுமங்கலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கணிணி பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் அஷ்வந்த் (வயது 9). இவன் அந்தப்பகுதியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். மாலையில் டியூசன் வகுப்புக்கும் சென்று வந்தான்.

    நேற்று மாலை அஷ்வந்த், பள்ளியில் இருந்து வழக்கம்போல் வீடு திரும்பினான். பின்னர் அவன் பள்ளி சீருடையை மாற்றி விட்டு டியூசன் வகுப்புக்கு புறப்பட்டான். பஸ் நிலையம் பகுதிக்கு அஷ்வந்த் வந்த போது, 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

    அவர்கள் நைசாக அஷ்வந்திடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது பஸ் நிலைய பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்தி 2 பேரும் திடீரென, அஷ்வந்த்தை மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்றனர். இதனை எதிர்பார்க்காத அவன், அவர்களது பிடியில் இருந்து தப்பிக்க முயன்றான். உடனே 2 பேரும் அஷ்வந்த் வாயில் துணியை (கர்சீப்) வைத்து அழுத்தி உள்ளனர்.

    அந்த நேரத்தில் ஊர் மக்கள் அங்கு வந்ததால், மோட்டார் சைக்கிள் நபர்கள், அஷ்வந்தை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். டியூசன் சென்ற மாணவனை கடத்த முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மண்டைக்காடு போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஷ்வந்த்தை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றனர்? முன்விரோத செயலா? அல்லது பணம் பறிக்க முயற்சியா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது.
    • அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மோகன் சேலம் மநாகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது-

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது. இதில் தற்போது தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலத்தை ஜெயராமன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன்.

    இந்தநிலையில் அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். நேற்று அவர் உள்பட 20 பேர் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்போவதாக கூறி எனது விவசாய நிலத்திற்குள் உள்ளே நுழைந்தனர். இதனை தடுத்து நிறுத்திய நான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன்.

    அவர்களும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எனவே அத்து மீறி விவசாய விளை நிலத்தை அபகரிக்க தொடர்ந்து முயற்சிக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.  

    • தொடர்பாக பிடிக்கப்பட்ட லாரி ஒன்று பல மாதங்களாக நின்று கொண்டிருந்தது.
    • கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பா திரிப்புலியூர் நத்தவெளி சாலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு விசாரணை வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்ட லாரி ஒன்று பல மாதங்களாக நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து உடனடியாக மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பின்னர் தீயை அணைக்க முயற்சி செய்த நிலையில், தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த லாரியின் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    வேலாயுதம்பாளையம் அருகேவக்கீலை தாக்கி கொல்ல முயற்சி

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. வழக்கறிஞரான இவர் சவுக்கு சங்கரின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. சவுக்கு சங்கரின் யூ டியூப் நிர்வாகிகளான சூர்யா மற்றும் பிரதீப் ஆகியோர் ராஜாவை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து காரில் வேலாயுதம்பாளையம் வந்தனர். மூன்று பேரும் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை பகுதியில் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் எதிரில் உள்ள பேக்கரிக்கு வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் வக்கீல் ராஜா மற்றும் சவுக்கு சங்கரின் யூடியூப் அட்மின்கள் சூரியா, பிரதீப் ஆகிய மூன்று பேரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் வழக்கறிஞர் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பித் தாக்க, 6 பேரும் அவர்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். சவுக்கு சங்கரின் யூடியூப் அட்மின்கள் சூரியா, பிரதீப் இருவரும் அவர்களது காரில் ஏறி தப்பிச் சென்றவர்களை துரத்திக் கொண்டு சென்றனர். காரில் தப்பிச் சென்ற மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நாமக்கல் மாவட்ட பகுதிக்கு சென்று மறைந்து விட்டனர்.

    இந்நிலையில் படுகாயம் அடைந்த ராஜாவை உடனடியாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வழக்கறிஞர் ராஜா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆன பதிவுகளை கைப்பற்றி தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • திருச்சி பொன்மலையில்போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து ரெயில்வே வேலையில் சேர முயற்சி
    • 4 பேர் மீது வழக்குபதிவு- போலீசார் நடவடிக்கை

    திருச்சி,  

    திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்ல துரை. இவர் ரெயில்வே ஊழியர். கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிடுகிறார்.

    இவர் உயிருடன் இருக்கும் போதே முதல் மனைவி பழனியம்மாள் மற்றும் பிள்ளைகள் ராஜா, ராதா , சதீஷ்குமார் ஆகியோர் செல்லத்துரையை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.

    இதனால் செல்லத்துரை சரோஜா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். சரோஜாவுக்கு கதிர் வேல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரெயில்வேயில் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக முதல் மனைவி பழனிய ம்மாள் அவரது பிள்ளைகள் ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் 2-ம் தாரத்து மகன் கதிர்வேலை சட்ட வாரிசாக காட்டாமல் மறைத்து மோசடி செய்து வாரிசு சான்றிதழ் பெற்று ள்ளனர்.

    மேலும் அந்த வாரிசு சான்றிதழை கொடுத்து ரெயில்வே வேலை பெறு வதற்கு முயற்சி செய்து ள்ளனர்.

    இதனை அறிந்த கதிர் வேல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல்துறையி னரிடம் புகார் அளித்தார்.அதன் மீது நடவடிக்கை இல்லை என்பதால் திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 5-ல் வழக்கு பதிவு செய்ய கூறி புகார் செய்தனர்.

    புகார் மனுவை விசாரித்த நீதிமன்றம் பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த பொன்மலை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டதன் பேரில் பொன்மலை போலீசார் பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு நீதி முகாம் நடந்தது. அப்போது சென்னிமலை காந்தி நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரது மனைவி வளர்மதி (வயது 43) மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த மண் எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வளர்மதி மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர்.

    பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் இவரது கணவர் சாமிநாதன் இவரை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சாமிநாதன் வளர்மதியின் தாலிசெயினை பிடுங்கி விட்டு வளர்மதியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி வளர்மதி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் வளர்மதி தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.
    • 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், கடினல்வ யல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆயக்கா ரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட், தகட்டூர் ராமகோவிந்த ன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி ஆசிரியர் சுப்பிரம ணியன் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

    கடினல்வயல் உதவி தலைமையாசிரியர் சிவகுருநாதன். இவர் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவர் மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.

    ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட். இவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    தகட்டூர் ராமகோவி ந்தன்காடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியை மீண்டும் ஒரு மாணவனோடு தொடங்கி தற்போது 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தவர் சுப்பிர மணியன். இவர் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.விருது பெறும் 3 ஆசிரியர்களையும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தி னர், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். விருது பெறும் ஆசிரியர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • 2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

    பெரம்பலூர்

    திருமானூர் அருகே குருவாடி கிராமத்திற்கும், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கிராமத்திற்கும் இடையே செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையொட்டி அப்பகுதியில் நில அளவிடும் பணிைய அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். இதற்கு குருவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தால் நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    கிராம மக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தூத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளான சுயராஜன் (வயது 52), மகேந்திரன் (41) ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் தீக்குளிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 63 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
    • வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்த வர் சின்னப்பொண்ணு(50), இவரது மகன் லோகேஷ் (18) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    பின்னர் சின்ன பொண்ணு மறைத்து வைத்து கொண்டு வந்த மண் எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சின்ன பொண்ணு கூறுகையில், எனது கணவர் ராஜேந்திரன் பெயரில் 2 3/4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு எனது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.

    பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஓருவர் 2 3/4 ஏக்கர் நிலத்தில் 1 3/4 சென்ட் நிலத்தை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தார்.எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டுகிறார்.

    இது குறித்து வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

    எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களிடமிருந்து ஏமாற்றி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரி வித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார்.
    • கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார். இதை பார்த்த பேரூராட்சி ஊழியர்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன்.

    இந்த நிலையில் இன்று வேலைக்கு தாமதமாக வந்ததால் பேரூராட்சி ஊழி யர்கள் திட்டினர். இதனால் மனம் உடைந்த நான் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாரி டம் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை சரவணம்பட்டி போலீசில் இளம்பெண் பரபரப்பு புகார்
    • வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்ய முயன்றார்

    கோவை,

    கோவை பீளமேடு அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

    நான் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளாராக பணியாற்றி வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவரின் நண்பரான ஹட்கோ காலனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உன்னி என்ற மதுசூதனன் (36) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்.

    எனது கணவரின் நண்பர் தானே என்ற அடிப்படையில் நான் சகஜமாக பழகி வந்தேன். சம்பவத்தன்று நான் வெளியே சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தேன்.

    வீட்டில் நான் தனியாக இருந்த போது உன்னி என்ற மதுசூதனன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். தனியாக இருந்த என்னை அவர் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்து நான் சத்தம் போட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை தாக்கினார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    எனவே வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த என்னை பலாத்காரம் செய்ய முயன்ற எனது கணவரின் நண்பர் உன்னி என்ற மதுசூதனன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் தனியாக இருந்த நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற உன்னி என்ற மதுசூதனன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
    • அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் நாங்கள் அதே பகுதியில் 3 செண்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இந்த இடத்தை அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×