என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் தற்கொலை
    X

    முதியவர் தற்கொலை

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கரட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் கடந்த 2 வருடமாக தீராத முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கரட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாப்பான் (வயது 65). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2 வருடமாக தீராத முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும், முதுகுவலி சரியாகவில்லை. இந்நிலையில் நேற்று மாலை, வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாப்பானை மீட்டு, நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×