search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணக்கு பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால்9-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
    X

    கணக்கு பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால்9-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

    • சம்பவத்தன்று மாணவியி ன் தாய் பள்ளிக்கு சென்றார். ஆசிரியையை சந்தித்து பேசினார்.
    • இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவைஅருகே உள்ள சூலூரை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கணக்கு பாடம்

    மாணவி நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனையடுத்து மாணவியிடம் கணித ஆசிரியை பெற்றோர் அழைத்து வரும்படி கூறினார்.

    சம்பவத்தன்று மாணவியி ன் தாய் பள்ளிக்கு சென்றார். ஆசிரியையை சந்தித்து பேசினார்.

    பின்னர் பள்ளி விடும் நேரம் என்பதால் தனது மகளை அழைத்து செல்லலாம் என்பதற்காக பள்ளி அருகே உள்ள பெருமாள கோவிலில் காத்திருந்தார்.

    சாணிப்பவுடர்

    பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவியின் வாய் மஞ்சள் நிறத்தில் இருந்தது. இதனை பார்த்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் என்ன வென்று கேட்டார். அப்போது மாணவி கணக்கு பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் பள்ளியில் வைத்து மஞ்சள் சாணிப்பவுடரை கரைத்து குடித்ததாக தெரிவித்தார்.

    இதனையடுத்து மாணவியை அவரது தாய் சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×