search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chain"

    • கணவருடன் மோட்டார் சைக்கிளில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம்.

    இவரது மனைவி உஷா (வயது 60). இவர் கடந்த 10-ம் தேதி இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அப்பகுதி யில் மோட்டார் சைக்கிளில் நின்ற மர்மநபர்கள் 2 பேர் சட்டென்று உஷா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து உஷா கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜதுரை.

    இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 45).

    இந்நிலையில், இவர் சாரங்கபாணி கீழ வீதியில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் அடையா ளம் தெரியாத மர்மநபர்கள் பின்தொடர்ந்தனர்.

    மோட்டார் சைக்கிள் சாரங்கபாணி கீழவீதி பெரிய தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது, விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெ க்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் தப்பி ஓடிய மர்மநப ர்களை போலீ சார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தார்.
    • நீலாவதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி சோழன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி நீலாவதி (55).

    இவர் தனது பேத்தியை அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் திடீரென நீலாவதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை சட்டென்று பறித்தார். அதிர்ச்சி அடைந்த நீலாவதி திருடன்.. திருடன். என கத்தி கூச்சலிட்டார்.

    ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நீலாவதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
    • நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக் குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பச்சை பூஜையும்,அபிஷேக ஆராதனையும் நடைபெ ற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலி கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்புணிகுழு, குடிப்பட்டு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • மூதாட்டியிடம் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு அருகே உள்ள புலவன்காடு பகுதியைச் சேர்ந்த வசந்தா (வயது 75).

    இவர் சம்பவத்தன்று தனது சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியிடம் தஞ்சாவூருக்கு எப்படி செல்வது என்று வழி கேட்டனர்.

    பின்னர் சிறது நேரத்தில் மூதாட்டி யிடம் இருந்து 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    இது குறித்து வசந்தா பாப்பாநாடு போலீசில் புகார் அளி த்தார்.

    அதன் பேரில் பாப்பா நாடு இன்ஸ்பெ க்டர் இள ங்கோவன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்க ளை தேடி வருகி ன்றனர். 

    • மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது67). இவர் அதே பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற நபர்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வண்டியூர் சி.எஸ்.ஆர். தெரு பாலச்சாமி மகன் விஜய் (வயது26). இவர் வண்டியூர் மெயின் ரோடு மாநகராட்சி வாட்டர்டேங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆயுதங்களை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5400-ஐ வழிப்பறி செய்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து விஜய் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • கடந்த 5 மாதங்–களில் கார–ண–மில்–லா–ம–லும், தேவை–யில்–லா–மல் அபாய சங்–கி–லியை விதி–மு–றை–களை மீறி
    • இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் வழக்–குப்–ப–திவு செய்–து அவர்களை கைது செய்–து உள்–ள–னர்.

    சேலம்:

    ரெயில்–களில் பய–ணி–க–ளின் அவ–சர தேவைக்–காக பயன்–ப–டுத்த அபாய சங்–கிலி பொருத்–தப்–பட்–டு உள்–ளது. இந்த அபாய சங்–கி–லியை சிலர் தேவை–யில்–லா–மல் இழுத்து ரெயிலை நிறுத்தி விடு–கின்–ற–னர். இத–னால் ரெயில் நடு–வ–ழி–யில் நிறுத்–தப்–பட்டு பய–ணி–கள் குறிப்–பிட்ட நேரத்–திற்கு செல்ல முடி–யாத நிலை ஏற்–ப–டு–கிறது.

    இது போன்ற சம்–ப–வங்–களை கட்–டுப்–ப–டுத்–தும் வகை–யில் ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் ரெயில்–களில் கண்–கா–ணித்து வரு–கின்–ற–னர். மேலும் ரெயில்–களில் தேவை இல்–லா–மல் அபாய சங்–கி–லியை இழுப்–ப–வர்–கள் மீது வழக்–குப்–ப–திவு செய்து கைது செய்–யப்–பட்டு வரு–கின்–ற–னர்.

    அதன்–படி சேலம் கோட்–டத்–திற்கு உட்–பட்ட பகு–தி–களில் கடந்த 5 மாதங்–களில் கார–ண–மில்–லா–ம–லும், தேவை–யில்–லா–மல் அபாய சங்–கி–லியை விதி–மு–றை–களை மீறி இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் வழக்–குப்–ப–திவு செய்–து அவர்களை கைது செய்–து உள்–ள–னர்.

    இது –கு–றித்து ரெயில்வே பாது–காப்பு படை போலீ–சார் கூறும்போது, ' கடந்த நிதி–யாண்–டில் மட்–டும் தேவை–யில்–லா–மல் ரெயி–லின் அபாய சங்–கி–லியை இழுத்து ரெயில்–களை நடு–வ–ழி–யில் 23 பேர் நிறுத்தி உள்–ள–னர். அவர்–கள் மீது வழக்–குப்–ப–திவு செய்து கைது செய்–துள்–ளோம். எனவே ரெயி–லில் தேவை–யில்–லா–மல் பய–ணி–கள் அபாய சங்–கி–லியை இழுக்–கா–மல் ரெயில்வே துறைக்கு ஒத்–து–ழைப்பு தர வேண்–டும்' என்–ற–னர்.

    • சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.
    • பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் சாமிநாயக்கன்

    பட்டி அடிக்காரை பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி விஜயா (வயது 47). இவர் சம்ப வத்தன்று சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கி வேறு பகுதிக்கு செல்வ தற்காக பேருந்து நிலை யத்தில் காத்திருந்தபோது, பையில் வைத்திருந்த மணிபர்ஸ் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காந்தி மியூசியம் அருகே பெண் அலுவலரிடம் செயினை வாலிபர்கள் பறித்தனர்.
    • அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா (வயது52). இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    சித்திரை திருவிழாவை யொட்டி நடக்கும் பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார்.

    அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்றபோது பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அமுதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
    • 10 பவுன் மதிப்புள்ள 2 தாலி செயின்களை முகமூடி அணிந்து வந்த கும்பல் பறித்து சென்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது மனைவி பாக்யா (33).

    இவர்கள் இருவரும் நாச்சியார்கோவிலில் உள்ள உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தென்கரையில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டி ருந்தனர்.

    அப்போது புதுக்குடி என்கிற இடத்தில் 3 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் இந்த தம்பதி யினரை வழிமறித்துள்ளது.

    கத்தியை காட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டி பாக்யாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பறித்ததுடன் அவரது கணவரிடம் இருந்துசெல்போ னையும் பறித்துள்ளனர்.

    தொடர்ந்து அவர்கள் வந்த இருசக்கர வாக னத்தையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

    இதனையடுத்து சிறிது தூரத்தில் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 32) பானுமதி 26) என்கிற இருவரும் திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களையும் இந்த முகமூடி கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பானுமதி கழுத்தில் இருந்த தாலிச் செயினையும் பறித்துள்ளனர்.

    மொத்தம் 10 பவுன் மதிப்புள்ள இரண்டு தாலிச் செயின்களை அடுத்தடுத்து இந்த முகமூடி கும்பல் பறித்து சென்றுள்ளது.

    இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காட்சிகள் இருள் சூழ்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் கடந்த நான்கு மாதத்தில் இதே இடத்தில் வழிப்பறி பணத்தை அடித்து பறிப்பது போன்ற ஐந்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே இப்பகுதியில் இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமிராக்களை பொருத்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.
    • 10 பவுன் தாலி செயினை கண்ணி மைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நடராஜா காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கிரகலட்சுமி (வயது 49). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் பிள்ளைகளை அவரது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் கிரகலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் கிரகலட்சுமி புகார் செய்தார்.

    அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் சேனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மர்மநபர், சரஸ்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
    • சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியின் ஓடி வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் அருகே உள்ள அ.குன்னத்தூரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 73). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி வீட்டின் பின்புறத்தில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர், சரஸ்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியின் ஓடி வந்தனர்.

    இதை பார்த்த அந்த அவர், பீர் பாட்டிலை உடைத்து அருகே வந்தால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி அருகில் இருந்த கரும்பு காட்டிற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மூதாட்டி சரஸ்வதி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நகையை பறித்து சென்றது அ.குன்னத்தூரைச் சேர்ந்த சுரேஷ் (40) என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், சுரேசுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சுரேஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×