search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளிப் பட்டறை உரிமையாளரிடம் செயின், பணம் பறிப்பு
    X

    வெள்ளிப் பட்டறை உரிமையாளரிடம் செயின், பணம் பறிப்பு

    • ராஜேந்திரன் ( வயது 42). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 42). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 12- ந் தேதி மாலை தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்- இன்ஸ்பெக்டர் வீரன்

    மற்றும் போலீசார், வழிப்பறி யில் ஈடுபட்ட அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (19), கவியரசன் (25) ஆகிய இருவரையும் நேற்று கைது

    செய்தனர். மேலும் தலைமறை வாக உள்ள அவர்களின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர். போலீசார், கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×