search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள் தீவிரம்"

    • வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.
    • 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த பணிகளை தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்கள்.

    சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 16 சட்ட மன்ற தொகுதிகள் வருகின் றன. இந்த தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தேர்தலுக்காக 3,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 600 பதற்றமான சாவடிகள் உள்ளன. சென்னையில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 299 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ள 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

    வாக்குப்பதிவு நடை பெறும் மையங்களில் போதிய மின் விளக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூட வகுப்பறைகளே வாக்குப்பதிவு மையங்களாக மாறும் நிலையில் அங்கு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளோடு சேர்த்து கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டு போட வரும் வாக்காளர்களின் தாகத்தை தணிக்க தேவையான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

    தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.

    மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டு போடுவதற்கு வசதி யாக சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலி களில் வரும் வாக்காளர்கள் எளிதாக அதில் ஏறி வாக்குச் சாவடி மையத்துக்குள் சென்று ஓட்டு போடுவதற்கு உரிய நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே பாதுகாப்பு தொடர்பான பணிகளை போலீசாருடன் இணைந்து அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நாளில் வாக்குப் பதிவு மையங்களில் வாக் காளர்கள் அடையாள அட்டையுடன் இருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் வெளியாட்களை அனுமதிக்கவே கூடாது என்றும் தேர்தல் அலுவலர் களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நாள் அன்று இது தொடர்பாக வாக்குப்பதிவு மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற் பாடுகளை போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசி முன்கூட்டியே முடி வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதற்றமான சாவடிகளில் கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் சில தினங்களில் கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    பதற்றமான சாவடிகளில் துணை ராணுவ படையினை கூடுதலாக மையத்தின் வளாகத்துக்குள்ளும் வெளியேயும் பணி அமர்த்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி பாராளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு அதில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகளும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    • ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பணிகள் நடைபெறுகிறது
    • கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாகராஜா வுக்கு என தனி சன்னதி நாகர்கோவிலில் உள்ளது. இந்த கோவில் நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாக விளங்கு கிறது.

    இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். சர்ப்ப தோஷ பரிகாரம், கால சர்ப்ப தோஷ பரிகாரம், ராகு-கேது பரிகாரம், தொழில் காரியம், திருமண காரியம், குழந்தை பாக்கியம் பெற இத்தலத்திற்கு வந்து வழிபடலாம்.ஜாதகப்படி கல்நாகர் பிரதிஷ்டை செய்ய விரும்பும் பக்தர்கள், இத்திருத்தலத்தில் உள்ள நாகர் பீடத்தில் ஒற்றைக்கல் நாகரை பிரதிஷ்டை செய்யலாம்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் குறிப்பிட்ட சிறப்பு நாட்கள் இருக்கும். அப்படி, நாகராஜா 'ஆயில்யம்' நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திரத்தன்று வந்து பகவானை வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு. முக்கியமாக, ஆவணி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் மிகச்சிறப்பு.

    பல ஆண்டுகளுக்கு முன்பு வேணாட்டை ஆண்ட பூதளவீர ஸ்ரீவீரஉதயமார்த்தாண்டவர்மா என்ற களகாட்டை தலைநகராக கொண்ட மன்னர் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த கோவில் பற்றி கேள்வியுற்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இங்கு வந்து வழிபட்டார். இதனால் அவர் பூரண குணம் அடைந்தார். இதனால் இந்த ஆலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. இதையடுத்து மன்னர் ஆவணிமாத ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைகளை நடத்தி காணிக்கைகளை செலுத்தினார் என கோவிலில் உள்ள கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி 1 மைல் தூரத்திற்கு பாம்பு கடித்து யாரும் இறந்ததாக சான்று கள் இல்லை என கூறப்படுகிறது.

    நாகராஜா கோவிலில் குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்து நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்டு மாதம் 20-ந்தேதியும், 2-வது ஞாயிற்றுக் கிழமை 27-ந்தேதி, 3-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3-ந்தேதியும், 4-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10-ந்தேதியும், 5-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17-ந்தேதியும் வருகிறது. 5 ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு சுவாமி வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற் பாடு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்கள் ஒரு வழியாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மறுபாதை வழியாக வெளியே வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அபிஷேக அர்ச்சனை டிக்கெட் வழங்கப்படுகிறது. டிக்கெட் வாங்கியவர்கள் தனி வரிசையில் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர் களுக்கு பிரசாதமாக சில்வர் பாத்திரத்தில் பால் பாயாசம் மற்றும் தேங்காய் பழம் வழங்கப்படுகிறது.

    தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலில் வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    உடுமலை:

    கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது.

    இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர்.

    மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

    மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது.

    கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக தடப்பள்ளி-அரக்க ன்கோட்டை வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் பாசனம் பெறுகி ன்றன.

    விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரை கொண்டு இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இது குறித்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன சங்க தலைவர் சிபி தளபதி கூறியதாவது:

    கொடிவேரி அணை பாசனங்களுக்கு சித்திரை முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சித்திரையில் தண்ணீர் திறந்தாலும் வாய்க்கால் பராமரிப்பு பணியால் எதிர்பார்த்த மகசூல் இல்லை.

    ஆனால் நடப்பு முதல் போகம் எந்த இடையூறும் இன்றி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ கத்தில் நெல் உற்பத்தியில் கொடிவேரி அணை பாசனங்கள் முன்னிலையில் உள்ளது.

    நடப்பு போகத்தில் முறையான நீர் நிர்வாகத்தால் பருவத்தே பயிர் செய்ததால் ஏக்கருக்கு சராசரியாக 2500 கிலோ மகசூல் கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பி ன் சார்பில் 10ஆயிரம் பனை விதைகளும், 5000 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளது.
    • சாமளாபுரம் பொன்னுச்சாமி உள்பட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மங்கலம்: 

    திருப்பூர் மாவட்டம், சாமளா புரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் உள்ள சின்னகுளத்தின் குளக்கரையில் சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பி ன் சார்பில் 10ஆயிரம் பனை விதைகளும், 5000 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளது .இதன் முதற்கட்டமாக பள்ளபாளை யம் சின்னகு ளத்தின் குளக்கரையில் பனைவிதைகள், மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டு சொட்டுநீர்பாசனம் அமைப்ப தற்கான பணிகள் நடைபெற்றது.இப்பணிகளை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி களான எஸ்.கே.எல்.மணி, என்.ராமசாமி, பள்ளபாளையம் கிருஷ்ணகுமார், திருப்பூர் மேற்கு ரோட்டரி முன்னாள் தலைவர் ரகுபதி, சாமளாபுரம் பொன்னுச்சாமி உள்பட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சித்திரை திருவிழா 23-ந்தேதி தொடங்குவதால் மதுரை வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • தடுப்பணைகளால் விபத்து அபாயம் ஏற்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி -சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடக்தக்கது சித்திரை பெருவிழா. 12 நாட்கள் நடக்கும். விழாவின்போது மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்து டன் விழா தொடங்குகிறது. மே 5-ந்தேதி முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது.

    அழகர் கோவிலில் இருந்து தங்க குதிரையில் புறப்பட்டு வரும் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கு வார். இந்த நிகழ்வை கண்டு களிப்பதற்காக மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வைகையாற்று பகுதியில் திரளுவார்கள்

    இதனை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ள ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அங்கு குப்பை குளங்களை அகற்றும்பணி நடந்து வருகிறது.

    சித்திரை திருவிழா நெருங்குவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

    வைகை ஆற்றில் சமீபத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இது இன்னமும் தூர்வாரப்படவில்லை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் வைகையின் இருபுறமும் திரண்டு வருவது வழக்கம். அப்போது மக்கள் வெள்ளம் 6 அடி உயர தடுப்பணை அருகே சென்றால், தண்ணீருக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர வைகை ஆற்றின் படித்துறைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

    எனவே அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல தேங்கி கிடக்கிறது. வைகை ஆற்றில் கள்ளழகரை காண வரும் பக்தர்கள், மொட்டையடித்து ஆற்றில் நீராடுவார்கள். அப்போது ஆற்றின் படிகள் சிதிலமடைந்து இருப்பதன் காரணமாக அதனை அறியாமல் பக்தர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். எனவே வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கும் முன்பாக ஆற்றை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் கோத்தகிரி சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
    • வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது

    கோத்தகிரி ,

    நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்துசுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் கோத்தகிரி சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    மற்றும் கோத்தகிரி பகுதியில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட சாலைகளில் அதிவேகமாகவும் செல்கின்றன. வளைவுகளில் கனரக வாகனங்கள் வேகமாக திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக தொடர்ந்து விபத்துகள் நடக்கும் இடங்களில் கோத்தகிரி, ஊட்டி சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை கோபி, அந்தியூர் மற்றும் பவானி,சத்தி,பாசன பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், அதிகளவில் முதல் போக நெல் சாகுபடி செய்திருந்தனர்.

    ஏ.எஸ்.டி., 16 (இட்லி குண்டு), ஏ.டி.டி. சன்ன ரகம் 45,சம்பா,பொன்னி உள்ளிட்ட ரகங்கள் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

    தற்சமயம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பங்களாபுதூர், டி.என் .பாளையம்,பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாகுறை காரணமாக எந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தற்போது நெல் அறுவுடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்..

    விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும்நெல்லை கொள்முதல் செய்வ–தற்காக, கோபியில், கூகலூர், நஞ்சகவுண்டன் பாளையம், புதுவள்ளியாம் பாளையம், புதுக்கரைபுதூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க–பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யும் நெல்களை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வருகின்றனர்,

    மேலும் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக நெல் சாகுபடி செய்திருப்பதால் தஞ்சை, திருவாருர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஏராளமான நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கபட்டு அறுவடை பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகிறது..

    மேலும் உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத நிலை உருவாகும்.

    இதனை தவிர்க்க உடனே உரங்களின் விலையை குறைத்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லிற்கு கூடுதல் விலை கொடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • அதிகாரிகள் விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுப் பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை, வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் காசிபாளையம், ஆலங்காடு, காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக ஆக்கிரமித்து வீடு கட்டி வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மாற்று இடம் மற்றும் வீடுகள் வழங்கி காலி செய்யப்பட்டுள்ளன.அவ்வகையில், நொய்யல் ஆற்றின் வடபுறத்தில் மாநகராட்சி கணக்குப்படி 97 வீடுகள், பொதுப்பணித்துறை கணக்குப்படி 135 வீடுகள் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பது தெரிய வந்தது. இந்த வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால், யாரும் காலி செய்யவில்லை.

    இந்நிலையில் 56 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. அவ்வகையில் 9 குடும்பங்கள் அங்கிருந்து தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வீடுகளை காலி செய்தனர்.மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு வழங்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோர்ட்டு உத்தரவுப்படி காலி செய்த வீடுகளை இடித்து அகற்றி தங்கள் வசம் எடுக்க அங்கு அதிகாரிகள் சென்றனர்.வீடு பெறுவதற்கான நடைமுறை குறித்து மீதமுள்ள குடியிருப்புவாசிகளிடம் விளக்கம் தெரிவித்த அதிகாரிகள் விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    • கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னே ற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
    • கோவையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கான ஏற்பா டுகள் செய்யப்பட்டது.

    ஆனால் சிலை வைக்க அப்போதைய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் பீடம் அமைக்கப்பட்டதோடு நிறுத்தி வைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கருணாநிதி சிலை வைக்க 3 ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அனுமதி கிடைத்தது. அதைத்தொடர்ந்து கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னே ற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக டி.என்.பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே சிலை வைப்பதற்காக நிர்வாகத்திடம் முழு அனுமதி பெற்ற பின்பே சிலை நிறுவ வேண்டும் என்று கூறிவிட்டார்.

    தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளதால் அடுத்த மாதம் 4-ந் தேதி காலை ஈரோட்டில் நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, நிறைவேறிய திட்டங்களை திறந்து வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாலை கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பின்னர் 5-ந் தேதி ஈரோட்டில் புத்தக திருவிழாவை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா மட்டுமில்லை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும். குருநாதசாமி கோவில் திருவிழா தேரோட்டத்தை பொரு த்தவரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையுடன் கலந்து முடிவு செய்யப்படும்.

    இந்த ஆண்டு கீழ்பவானி பாசனத்திற்கு அடுத்த மாதம் 1 அல்லது 15-ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து கோவையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் உள்பட மாவட்ட, ஒன்றிய தி.மு..க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.
    • அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    உடுமலை:

    கேரளாவில்தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    பருவமழை தீவிரமடையும்போது, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் தன்னார்வலர் அடங்கிய தாலுகா அளவிலான மீட்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மழை சேதம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் விரைந்து மீட்பு பணியை துவக்க வேண்டும்.மழைப்பொழிவு, மழை சேதம் விவரங்களை தினமும் பெற்று சேதங்களுக்கு, நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரிடர் தடுப்பு பணிகளுக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேரமும், கண்காணிப்பு பணி நடக்கும் வகையில், சுழற்சி முறையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்படும்.தமிழக அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தாலுகாவுக்கு ஒரு துணை கலெக்டர் நிலை அதிகாரிகள் தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு அமைத்து கண்காணிக்கப்படும். விரைவில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்றனர்.

    ×