search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly"

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதிேயார்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார் ஏற்பாட்டில் கல்லல் சாந்தி ராணி முதியோர் இல்லத்தில் கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. நெடுஞ்செழி யன் தலைமை யில் முதியோர்களுக்கு கேக் மற்றும் பிரியாணி, வழங்கப்பட்டது. கல்லல் ஊராட்சி மன்ற தலைவரும், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவருமான சுப. வடிவேலு முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமச்சந்திரன் நீதிபதி, சந்திரசேகரன், மார்க்கண்டேயன், முகமது கனி, ஊராட்சி மன்ற தலைவர் உடையப்பா செல்வம், சேதுபதி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார், துணைத் தலைவர் மாரி, முன்னாள் தலைவர் குழந்தைவேலு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தார் கள். முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார். காளையார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சொக்கு ரமேஷ் நன்றி கூறினார்.

    • திருமங்கலம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகேயுள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி(75). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்யாணியின் மகன் தங்கப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலியாகினர்.
    • சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது60). இவர் கப்பலூரில் உள்ள மில்லில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு பணி முடிந்து 4 வழிச்சா லையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜெயபாண்டியின் மகன் பாண்டி கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் பேரை யூர் அருகேயுள்ள துள்ளுக் குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் மருதமுத்து(60). இவர் ஏ.கிருஷ்ணாபுரத்தில் நடந்த கோவில் திருவிழா விற்கு உறவினர் சமயகருப்பு வுடன் இருசக்கர வாக னத்தில் சென்றார். சமய கருப்பு வாகனத்தை ஓட்டி னார். அதிகாரிப்பட்டி-சின்ன கட்டளை சாலையில் சென்றபோது பின்னால் அமர்ந்திருந்த மருதமுத்து நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருத முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
    • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

    இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

    இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

    33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடல் மீட்கப்பட்டது.
    • வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதிநகர் கோகுலம் கார்டனை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி (வயது73). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தனது 2-வது மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அப்துல் காதர் ஜெய்லானி உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே 10 வயது சிறுமிக்கு, முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம், நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 65). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவுக்கார பெண் குடும்பத்துடன் பழகி வந்தார். அவர் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு சென்று வருவார்.

    இந்தநிலையில் சண்முக நாதன், உறவுப்பெண்ணின் 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியிடம் இது பற்றி வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி இது தொடர்பாக யாரிடமும் சொல்லவில்லை.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சண்முகநாதன் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் உறவுக்கார பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தனர்.

    • முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும்.
    • நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.

    தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் ஓய்வு பெற்ற பின் அமைதியான சூழலில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு உகந்த இடம் வயதானவர் ஒய்வு இல்லம். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அயல்நாட்டில் வேலை பார்ப்பதால் இங்கு பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத காரணத்தினாலும் தனிக்குடுத்தனங்கள் பெருகி உள்ள நிலையில் இடவசதி இன்மை, சௌகரியங்கள் இன்மை இது போன்ற பல தவிர்க்க முடியாத காரணத்தால் பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கின்றனர்.

    பெரியவர்களும் தங்களுக்கு உள்ள சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் தனக்கென்று ஒரு தனிமை தேவைப்படுவதாலும் தங்களது தனி உரிமைக்காகவும் சிலர் அமைதியான இது போன்ற சூழலில் வாழ விரும்புகின்றனர்.

    முதியவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓடி கொண்டே இருந்த சூழலில் தங்களது வயதான காலத்தில் அமைதியாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழும் சூழலை விரும்புகின்றனர். இவை அனைத்தும் இது போன்ற ஓய்வு இல்லங்கள் நிறைவேற்றுகின்றது.

    தற்போது பல கட்டட அமைப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் முதியவர்களுக்கு என தனித்தனியே வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. அவைகள் முதியவர்களின் வசதிக்கேற்ற மாதிரி முதியவர்களுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. இதில் பலதரப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஓய்வு பெற்ற முதியவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள்.

    முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும். ஆனால் தனித்தனி சொந்த வீடுகள். முதியவர்கள் வயதான பின்பு ஓய்வு காலத்தில் அவரவர் சொந்த வீட்டில் சுதந்திரமாக பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வாழும் வண்ணம் இக்கட்டட அமைப்புகள் அமைகின்றன.

    அவரவர் வசதிகளுக்கு ஏற்ப அவர்களின் பிள்ளைகளோ வயதானவர்களே கூட தங்களது ஓய்வு ஊதிய பணத்தை அதில் முதலீடு செய்து தனக்கென சொந்தம் ஆக்கிக் கொள்கிறார்கள். அங்குள்ள அனைத்து வீடுகளிலுமே முதியவர்கள் இருப்பதால் அதுவயதானவர்இல்லம் போன்ற ஒரு அமைப்பையே உருவாக்கி தருகிறது. அங்கு மருத்துவ வசதிகள் யோகாசன பயிற்சிகள் பூங்காக்கள் நடைபாதை மேடைகள் என பல வசதிகளும் அமைக்கப்படுகிறது.

    வயதானவர்கள் அவரவர் வீடுகளில் வசிப்பது போன்றே எந்த தொந்தரவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் அமைதியான பாதுகாப்பான முறையிலும் வீட்டு சூழலை உருவாக்கி தருகிறார்கள்.

    வயதானவர்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்பவும் கட்ட மைப்புகள் அமைக்கப்படுகின்றன. வீட்டில் குளியலறை வசதி படுக்கையறை சமையலறை என ஒவ்வொரு அறையிலும் வயதானவர்களின் வசதிகளுக்கு ஏற்ப கட்டட அமைப்புகள் உள்ளன.

    வயதானவர்களை கவனித்துக் கொள்ள பணியாளர்களும் அங்கே அமர்த்தப்படுகிறார்கள். 24 மணி நேரமும் மருத்துவ வசதிகளும் குடிநீர் வசதி என பல வசதிகளுடன் கட்டப்படுகிறது.

    வயதானவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் மூச்சுப் பயிற்சிகள் என அனைத்து பயிற்சிகளும் உள்ளேயே வழங்கப்படுகிறது. விளையாட்டுக் கூடங்கள் தோட்டங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கட்டமைப்பாகும்.

    வயதானவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதற்கான கட்டட அமைப்புகளும் அதற்குள்ளேயே உருவாக்கப்படுகிறது.

    பெரிய அடுக்குமாடி கட்டடங்களில் அனைவருக்கும் பொதுவான பூங்காக்கள் நடைபாதைகள் பயிற்சி மையங்கள் விளையாட்டு பொழுது போக்கு கூடங்கள் கோயில்கள் என்ற அனைத்தும் உள்ளடங்கிய கட்டட அமைப்புகள் போன்ற அமைப்பை ஒத்தவை தான் இந்த முதியோர் இல்ல கட்டட அமைப்புகளும்

    சிறந்த தொழில்நுட்ப கட்டட வல்லுனர்களால் பல அதிநவீன வசதிகளுடன் முதியவர்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கட்டடங்கள் வடிவமைக்கப்படுகிறது. அவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி கட்டடங்கள் கட்டப்படுகிறது.

    அனைத்து வசதிகளும் முதியோர் இல்லத்தில் இருந்தாலும் அது நமக்கு என சொந்தமான இடம் இல்லை என்பது பலருக்கும் மன வருத்தத்தை உருவாக்குவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்கும் வண்ணம் இது மாதிரி வயதானவர் ஓய்வு இல்லங்கள் சொந்த வீடுகளில் வாழும் சூழல் மற்றும் மன அமைதியை தருகிறது.

    மன உற்சாகத்தை தருவதுடன் அயல்நாடுகளில் வேலை பார்க்கும் தங்களது பிள்ளைகள் பேரன் பேத்திகள் என்று வந்தாலும் தங்குவதற்கு வசதியாக இருக்கும். சொந்த வீடு என்பதால் தங்குவதற்கு தொந்தரவு இல்லாத சூழலையும் உருவாக்கி தரும்.

    அவர்களுக்கும் தாய் தந்தையருடன் சொந்த வீட்டிலேயே இருக்கலாம். பேரன் பேத்திகளுக்கும் இது என் தாத்தா பாட்டி வீடு என்று சுதந்திரமாக சுத்தி திரிவதற்கும் வசதியாக இருக்கும்.

    வயதானவர்கள் காலத்திற்குப் பின்பு அவர்களது பிள்ளைகள் இதே மாதிரி மகிழ்ச்சியாக தங்களது வயதான காலத்தை கழிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவர்களது மகன் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள் என்று பரம்பரையாக சொந்த வீட்டில் வசிக்கலாம்.

    இதுவும் சொந்த வீடு வாங்கி சொத்து சேர்ப்பதற்கான ஒரு அமைப்பு தான். ஆனால் வயதானவர்கள் ஒன்று கூடி வாழும் ஒரு சூழலில் சொந்தமாக சுதந்திரமாக அமைதியாக வாழும் ஒரு அமைப்பு.

    சம்பாதிக்கும் நாட்களிலேயே இது போன்ற வீடுகளை வாங்கி வைத்துக் கொள்வது பிற்காலத்தில் நமக்கும் நமது சந்ததியினருக்கும் உதவியாக இருக்கும். இதுவும் ஒருவித முதலீடு தான். பாதுகாப்பான முதலீடு. சொத்து சேர்ப்பதற்கான நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.

    • வாலிபர்-முதியவர் பலியாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் ராமானுஜன் (வயது 22). இவர் மது போதைக்கு அடிமையாகி கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமானுஜம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வல்சாபுரத்தில் உள்ள தனது சித்தி சித்ரா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். இந்த நிலையில் நேற்று காலை துலுக்கன்குறிச்சி அருகில் ரோட்டோரம் நெற்றில் காயத்துடன் ராமானுஜம் இறந்து கிடந்துள்ளார்.

    இதனை கண்ட மாரிச்சாமி என்பவர் ராமானுஜத்தின் தந்தை வரதராஜிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வரதராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ராமானுஜம் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதில், ராமானுஜம் மோட்டார் சைக்கிளில் ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே கீழ இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (52). இவர் சென்ற மோட்டார் சைக்கிள் திடீ ெரன பழுதாகி விட்டது. அவர் சாலையோரமாக நின்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்த அவரது மகள் திவ்யா முனீஸ்வரி நரிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விருதுநகர் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிச்சி இந்திராகாலனியை சேர்ந்தவர் முத்து(வயது55). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துவின் ராஜ்குமார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வெல்லங்குடியை சேர்ந்தவர் நாராயணன்(28), வேன் டிரைவர். இவர் தனது வேனை பழுது நீக்கிவிட்டு மதுரையில் இருந்து ஊருக்கு திரும்பி னார். அப்போது வீரவ நல்லூரை சேர்ந்த மனோஜ்(30) உடன் சென்றார். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே வேன் சென்றபோது மனோஜ் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நாராயணன் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை திருவிருந்தாள்புரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வி.எம்.நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் குருநாத் (41), ஓவியர். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இந்த நிலையில் மதுரை சென்று வருவதாக கூறிச் சென்ற அவர் மாயமாகி விட்டார். இந்த நிலையில் அவர் தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அவரது மனைவி சங்கரேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர் வரப்பாளையம், பாச்சாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கிளீனராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டுவிட்டு பழைய வீட்டிற்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வெளியே வராததால் அவரது மனைவி ரங்காத்தாள் மற்றும் மகன் சதாசிவம் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறம் தாழ் போட்டு இருந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் விட்டத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக அவரை கீழே இறக்கி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெரியசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • போலி ஆவணம் தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த வேலம்பட்டியைச் சேர்ந்தவர் வீரன் (வயது 90). இவர் மதுரை எஸ்.எஸ். காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    அதில், எனக்கு சொந்தமான நிலத்துக்கு அரசாங்கம் இழப்பீடாக வழங்கிய ரூ.13 லட்சத்தை, துரைச்சாமி நகர், வீரணன், அவரது மகன் வினோத் ஆகிய 2 பேரும் போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்து விட்டனர் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் படி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். மேலும் திண்டுக்கல் முதியவர் வீரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் எனக்கும், துரைசாமி நகர் வீரணன் என்பவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலூகா, செங்குளம் கிராமத்தில் நிலங்கள் உள்ளன. இதில் 85 செண்ட் நிலத்தை தமிழக நெடுஞ்சாலைத்துறை நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தி கொண்டது. இதற்காக எங்களுக்கு ரூ.31 லட்சத்து 54 ஆயிரத்து 198 இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் எங்கள் இருவருக்கும் இடையே சமரச உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி நோட்டரி பப்ளிக் முன்னிலையில் ஒப்பந்த பத்திரம் தயாரானது. மொத்த சொத்தில் 57.5 சதவீத பங்கு வீரணனுக்கும், 42.5 சதவீத பங்கு எனக்கும் சொந்தமானது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே 4 வழி சாலைக்காக வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்து 54 ஆயிரத்து 198 தொகையை முழுவதுமாக அபகரிப்பது என்று வீரணனும், அவரது மகன் வினோத்தும் முடிவு செய்துள்ளனர். அவர்கள் என் அனுமதியின்றி ஒட்டு மொத்த பணத்தையும் தனிநபர் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணம் தயார் செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் என் கையெழுத்து போலியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த பணமும் வங்கி அதிகாரிகள் துணையுடன் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனக்கு 90 வயது ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கையெழுத்து போட முடியாமல், கை ரேகை மட்டுமே பதிவு செய்து வருகிறேன். எனவே தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொடுத்த பணத்தை போலி ஆவணம் வாயிலாக வங்கி அதிகாரிகள் துணையுடன் வீரணன் மற்றும் அவரது மகன் வினோத் ஆகிய இரண்டு பேரும் அபகரித்துக் கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வீரனுக்கு சொந்தமான நிலத்துக்கான நிவாரண தொகையை வினோத் தரப்பினர் போலி ஆவணம் தயாரித்து அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வீரனுக்கு சொந்தமான நிலத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து ரூ.13 லட்சத்தை மோசடி செய்ததாக எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வினோத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×