search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூற்றாண்டு விழா"

    • பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
    • அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

    சென்னை:

    இந்திய சமூக நீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் ஆகும்.

    கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து 1924-ம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது கேரள தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி இந்த போராட்டத்திற்கு நீங்கள் வந்துதான் உயிர் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இந்த கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு வந்து, வைக்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

    இந்த போராட்டம் அப்போது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தந்தை பெரியார் 2 முறை கைதானார். முதல் முறை ஒரு மாதமும், 2-ம் முறை 6 மாதமும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் கை, கால்களில் சங்கிலியால் பிணைக்கப் பட்டு அவர் சிரமப்படுத்தப்பட்டார். அந்த சமயத்தில் திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்ததால், ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார்.

    அதுமட்டுமின்றி வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையையும் ராணி நீக்கினார். இதனால் பெரியாரின் போராட்டம் வெற்றி யில் முடிந்து 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார்.

    இந்த போராட்ட வெற்றி யின் 100-ம் ஆண்டை குறிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட் டம் நூற்றாண்டு சிறப்பு விழா சென்னை நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. திடீரென இன்று காலையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு விழா மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்றே சென்னை வந்துவிட்டார். அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்று தங்க வைத்தனர்.

    இன்று காலையில் விழா நடைபெற்ற வேப்பேரி பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒருசேர வந்தனர். அவர்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.

    அதன் பிறகு அங்கிருந்த பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    அதன் பிறகு பெரியார் திடலில் உள்ள நினைவு தூண் அருகே விழா நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியார் நினைவுப் பரிசு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நூற்றாண்டு விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு மலரை வெளியிட அதை பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.

    அதே போல் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பெரியாரும் வைக்கம் போராட்டமும் என்ற நூலை வெளியிட அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா. மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., பரந்தாமன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டாவை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.
    • பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி ஊராட்சி, அண்ணா பல்க லைக்கழக பொறியியல் கல் லூரி கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை துறை யின் மூலம் டாக்டர் கலை ஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எம்.எல்.ஏ.க்கள் ராமநாத புரம் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி செ. முருகேசன், திருவா டானை ராம.கருமாணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    டாக்டர் கலைஞரின் நூற் றாண்டு விழாவையொட்டி பல்வேறு கட்டங்களாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநா தபுரம் வருவாய் கோட்டத் திற்கு உட்பட்ட ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்க லம், திருவாடனை, ராமேசுவ ரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 1028 பயனாளிக ளுக்கு இ-பட்டா வழங்கப்ப டுகிறது.

    இதில் பயன்பெறும் பய னாளிகளில் ஒரு பகுதியினர் தங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு இதுவரை பட்டா கிடைக்காமல் இருந்து இன்று கிடைக்கப் பெற்று இருப்பீர்கள். மேலும் இதுவரை பட்டா கிடைக்காமல் வாடகை குடி யிருப்பில் இருந்தவர்க ளுக்கு இன்று பட்டா கிடைக் கப்பெற்று இருக்கும். இப்படி பல்வேறு நிலைக ளில் பட்டா பெறாமல் இருந்த பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் முதலமைச்சர் மீனவர் மாநாட்டிற்கு வருகை தந்த பொழுது சுமார் 4,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 5,375 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் 1,808 பேருக்கும் பட்டா வழங்கப் பட்டுள்ளது. நத்த பட்டா 1,086 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் இதுவரை வீட்டுமனை பட்டா வேண்டி சுமார் 4000 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அவர்களுக் கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    சட்டமன்ற உறுப்பினர் கள் வேண்டுகோளுக்கி ணங்க பொதுமக்களின் கோரிக்கைகளை தங்கள் பகுதிக்கு சென்று சிறப்பு முகாம் நடத்தி கோரிக்கை களை நிறைவேற்றிட கேட் டுக்கொண்டுள்ளார். அதே போல் ஊராட்சி பகுதிக ளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்க ளின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து 1,028 பயனா ளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராம நாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், புல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள் மற்றும் வட் டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது
    • கூடுதல் தலைமை செயலர் ஆலோசனை

    வேலூர்:

    வேலூரில் சுருணா நிதி நூற்றாண்டு விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த விழா முன்னேற்பாடுகள் குறித்து நீர்வளத் துறை அரசு கூடு தல் தலைமைச் செயலர் சந்தீப் சக் சேனா தலைமையில் ஆலோசனை நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 'பகுத் தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர்' என்ற தலைப்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொள்கிறார்.

    இது தொடர்பாக லெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத் தில் நீர்வளத் துறை கூடுதல் செய லர் மலர்விழி, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் மிகச் சிறப்பாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூரில் கொண்டாடப்பட உள்ளது. இதைச் சிறப்பாகக் கொண்டாட நீர்வளத் துறை அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த விழா சிறப்பு மலரும், ஒரு குறும்படமும் வெளி யிடப்பட உள்ளது என்றார். முன்னதாக விழா நடைபெறும் நகர அரங்கம், தனியார் மஹாலை சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

    அப்போது, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், நீர்வளத் துறை சிறப்பு செயலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

    • முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு
    • நிகழ்ச்சிகளை பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியைஜேன் சில்வியா தொகுத்து வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "சட்டமன்ற நாயகர்- கலைஞர்" விழா குழு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சபாநாயகரும் "சட்டமன்ற நாயகர்- கலை ஞர்" விழா குழு உறுப்பின ருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் நாகராஜன் முன்னிலைவகித்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியை பேபி வர வேற்றுப் பேசினார். விழா வில் தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மாணவி சுஷ்மா "கலைஞரின் திட்டங்களும் சாதனை களும்" என்ற தலைப்பிலும், மாணவி அபிநயா "கலைஞர்ஒரு சகாப்தம்" என்ற தலைப் பிலும், மாணவிதேவி சாதனா "கலைஞரின் திட்டங்கள்" என்ற தலைப் பிலும் மாணவி பிரபா ஏஞ்சல் "கலைஞரின் சட்டமன்ற சாதனைகள்" என்ற தலைப்பிலும், மாணவி சந்தியா "கலைஞரின் சாதனைகள்" என்ற தலைப்பிலும் பேசினார்கள். இதில் மாணவி அபிநயாவுக்கு முதல் பரிசும் மாணவி சந்தியாவுக்கு 2-வது பரிசும் மாணவி பிரபா ஏஞ்சலுக்கு 3-வது பரிசும் கிடைத்தது.

    பரிசு பெற்ற இந்த மாணவிகளுக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடை யப்பன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மோகன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செய லாளரும் முன்னாள் பேரூ ராட்சி வார்டு கவுன்சிலரு மான வைகுண்ட பெரு மாள், மாநில தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பேரூர் தி.மு.க. அவைத் தலைவர் சுப்பையா பிள்ளை, மாவட்ட தி.மு.க. பொறி யாளர் அணி துணை அமைப்பாளர் தமி ழன்ஜானி, கிருஷ்ண

    குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் சட்டமன்ற பேரவை இணை செயலாளர் பாண்டியன் நன்றி கூறி னார்.

    நிகழ்ச்சிகளை பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியைஜேன் சில்வியா தொகுத்து வழங்கினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு வழங்குகிறார்
    • ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியினர் செய்து வருகின்றனர்.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இந்த கால்பந்து போட்டிகள் நாளை (4-ந்தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் கால்பந்து போட்டிகளை தொடங்கி வைக்கிறார். மாலையில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெறும் விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கால்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பா ளர்கள், விளை யாட்டு அலுவலர்கள், ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்தாட்ட போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியினர் செய்து வருகின்றனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு மணிமாறன் பரிசு வழங்கினார்.
    • கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க மாணவர் அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது.

    தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.1000 மணிமாறன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட மாணவர் அணி அமைப் பாளர் பாண்டி முருகன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன்.ஒன்றிய செயலாளர்கள் தன பாண்டியன், மதன் குமார், ராமமூர்த்தி, நாக ராஜன், பாண்டியன், ஆலம் பட்டி சண்முகம், ஐ.டி.விங் மதுரை மண்டல பொறு்ப பாளர் பாசபிரபு, திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், மாவட்ட அணி அமைப்பாளர் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
    • முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் 3-வது முறையாக வேலைவாய்ப்பு முகாம் வருகிற நவம்பர் 4-ந்தேதி சனிக்கிழமையன்று கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள் மற்றும் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகளுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    • கருணாநிதியின் உருவப்படத்தை ஓவியமாக வரையும் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட கருணாநிதியின் உருவப்படத்தை ஓவியமாக வரையும் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு வண்ணங்கள் தீட்டினர்.

    சிறப்பாக வண்ணம் தீட்டிய 5 மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஓவியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர்பாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சகாய ஜோஸ்பின், மாதா, ராணி ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், மனோ தங்கராஜ் வழங்கினர்
    • விழாவில் 7,36,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச் சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திற னாளி களுக்கான மருத்துவ முகாம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் இன்று நடந்தது.

    விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சிவசங்கரன் வரவேற்று பேசினார். மருத்துவ முகாமினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். 11 பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களும், 47 பயனாளிகளுக்கு திறன் பேசியும், 5 பேருக்கு பாதுகாவலர் நியமன சான்றும் வழங்கப்பட்டது. விழாவில் 7,36,353 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் உள்ளத்தோடு மக்களை பார்த்து வருகிறார். இந்த அரசு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6.8 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

    உலக நாடுகளில் இதை ஒப்பிடும்போது ஒரு சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமாக மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.1443 கோடி செலவில் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொழில் தொடங்கவும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய துணை கண்டத்திலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளி களுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்கியது தி.மு.க. அரசு தான். மாற்றுத்திறனாளிகள் எப்பொழுது வேண்டுமானா லும் தங்களது பிரச்சினைகளை எங்களிடம் நேரில் தெரிவிக்க லாம். மாற்றுதிறனாளிகள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. இந்த அரசு உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளி களுக்கு என்று தனி அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி. கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கி உள்ளார்.

    ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்கள் கல்வி அறிவு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பசிப்பிணியை போக்குவதுடன் அறிவு பிணியை போக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவி தொகை கிடைக்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கும் நிலையை உருவாக்கவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் நலம் சார் அரசாக இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஒன்றிய செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன், மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை ஜேமினா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் பிரியாதிரேஸ் நன்றி கூறினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை நடக்கிறது.
    • ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் வருகிற 14-ந்தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவ லகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார்.

    கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி கருத்தரங்கு, பட்டிமன்றம் மற்றும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளன. இதில் அமைச் சர்கள் ராஜகண்ணப்பன், அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். மேலும் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேகரனாரின் ஈகமும், போராட்ட குணவும் மிகவும் போற்றத்தக்கவையாகும்.
    • இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பு இன்று தான் வெளியாகியுள்ளது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீண்டாமைக்கு எதிராகவும், தேவேந்திரர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், ஈகியருமான இமானுவேல் சேகரனாரின் 66-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர் நடத்திய போராட்டங்களையும், அவரது ஈகத்தையும் நான் நினைவு கூர்கிறேன். சேகரனாரின் ஈகமும், போராட்ட குணவும் மிகவும் போற்றத்தக்கவையாகும்.

    கடந்த ஐந்தாண்டுகளில் பல தலைவர்களுக்கு நினைவிடங்கள், மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல தலைவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புகள் எதிலும் இமானுவேல் சேகரனாரின் பெயர் இடம்பெறவில்லை. இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பு இன்று தான் வெளியாகியுள்ளது.

    இன்னும் 28 நாட்களில் தொடங்கவிருக்கும் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டுக்கு அரசு விழாவாக கொண்டாடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அவரது பிறந்தநாள் நூற்றாண்டில், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும், அவை குறித்த பரப்புரைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
    • போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது தும்மக்குண்டு கிராமம். இங்கு மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இசையில் புதிய பரிணாமங்கள் தலையெடுத்த போதிலும் பழமைக்கு என்றுமே மவுசு உண்டு என்பதை இந்த கிராம மக்கள் மெய்ப்பித்து உள்ளனர்.

    அந்த வகையில் தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசை போட்டி திருவிழா தும்மக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    அவர்கள் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.

    இரு தரப்பினரிடையே யாருடைய பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறதோ அவர் வெற்றியாளராக கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று சுற் றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    நலிவடைந்து வரும் இந்த தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் விதமாகவும் இது போன்ற போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு டி.எம்.சவுந்தரராஜனின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு வெகுவிமரிசையாக இந்த போட்டி நடைபெற்று வருவதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    ×