search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நூற்றாண்டு விழா
    X

    அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நூற்றாண்டு விழா

    • முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேனாடு ஊராட்சி தலைவர் ஆல்வின் கலந்து ெகாண்டார். கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்விழி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் டோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.

    Next Story
    ×