search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Centenary Celebration"

    • மெரினா கடற்கரையில் தினமும் பாதுகாப்பு பணிக்கு குதிரைப்படை அனுப்பப்படுகிறது.
    • குதிரைப்படை சென்னை போலீசில் முக்கிய பிரிவாக நாளுக்கு, நாள் உருவெடுத்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போலீஸ்துறையில் குதிரைப்படை போலீஸ் பிரிவும் ஒரு அங்கமாக இருக்கிறது. மிகப்பெரிய பாரம்பரியத்தை உள்ளடக்கிய குதிரைப்படை போலீஸ் பிரிவு நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1926-ம் ஆண்டு 54 குதிரைகளுடன் சென்னை போலீசின் ஒரு அங்கமாக குதிரைப்படை பிரிவு தோற்றுவிக்கப்பட்டது.

    அந்த கால கட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் குதிரைகளைத்தான் பயன்படுத்துவார்கள். ரோந்து செல்வதற்கு குதிரைப்படைதான் பேருதவியாக இருந்தது. தற்போதும் குதிரைப்படை சென்னை போலீசுக்கு உற்ற துணையாக செயல்படுகிறது.

    மெரினா கடற்கரையில் தினமும் பாதுகாப்பு பணிக்கு குதிரைப்படை அனுப்பப்படுகிறது. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின்போது இந்த குதிரைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    விநாயகர் சிலை ஊர்வலம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிலும் குதிரைப்படை போலீசார் முக்கிய பங்காற்றுகிறார்கள். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் போலீஸ் அரங்கில் பொதுமக்களை கவரும் வகையில் வண்ண உடை அலங்காரத்தில் இந்த குதிரைகள் நிறுத்தப்படுவதும் வழக்கம்.

    தற்போது சென்னை போலீஸ் குதிரைப்படை விளையாட்டுகளிலும் பங்கேற்கிறது. சமீபத்தில் போலீஸ் குதிரை விளையாட்டு போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை போலீஸ் குதிரைப்படையை சேர்ந்த குதிரைகள் சாகசங்களை நிகழ்த்தி வெற்றி வாகை சூடி பதக்கங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் குதிரைப்படை சென்னை போலீசில் முக்கிய பிரிவாக நாளுக்கு, நாள் உருவெடுத்து வருகிறது.


     

    தற்போது சென்னை குதிரைப்படை போலீசில் 12 பெண் குதிரைகளும், 13 ஆண் குதிரைகளும் என 25 குதிரைகள் உள்ளன. சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குதிரைப்படை பிரிவு செயல்படுகிறது. இங்கு 40 குதிரைகள் இடம் பெறும் வகையில் வசதி வாய்ப்புகள் உள்ளது. நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ள இந்த தருணத்தில் புதிதாக மேலும் 5 குதிரைகள் சேர உள்ளது.

    டெல்லியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து புதிய குதிரைகளை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்க உள்ளனர். நூற்றாண்டு விழாவை காண உள்ள குதிரைப்படை போலீஸ் பிரிவை புதுப்பொலிவுடன் சீரமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

    அதன் மூலம் புதிதாக குதிரை லாயங்கள் கட்டப்படுகின்றன. பழைய லாயங்கள் இடிக்கப்படுகிறது. இந்த குதிரைப்படை பிரிவு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் நேரடி மேற்பார்வையில் தலைமையக கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. குதிரைப்படையை சிறப்பாக செயல்படுத்த இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் தலைமையில் 2 பெண் போலீசார் உள்பட 19 போலீசார் பணியில் உள்ளனர்.

    குதிரைகளை பராமரிப்பதற்கு தனியாக பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள். 8 வயதில் குதிரைகள் வாங்கப்படுகின்றன. அவற்றிற்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. 20 வயது வரை குதிரைகள் போலீசில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றன. 20 வயது நிரம்பியவுடன் அந்த குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. பின்னர், சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அந்த தொண்டு நிறுவனத்தில் வாழ்ந்து குதிரைகள் தங்களை ஆயுட் காலத்தை முடித்துக் கொள்கின்றன. குதிரைப்படையின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டாவை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.
    • பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி ஊராட்சி, அண்ணா பல்க லைக்கழக பொறியியல் கல் லூரி கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை துறை யின் மூலம் டாக்டர் கலை ஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எம்.எல்.ஏ.க்கள் ராமநாத புரம் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி செ. முருகேசன், திருவா டானை ராம.கருமாணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    டாக்டர் கலைஞரின் நூற் றாண்டு விழாவையொட்டி பல்வேறு கட்டங்களாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநா தபுரம் வருவாய் கோட்டத் திற்கு உட்பட்ட ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்க லம், திருவாடனை, ராமேசுவ ரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 1028 பயனாளிக ளுக்கு இ-பட்டா வழங்கப்ப டுகிறது.

    இதில் பயன்பெறும் பய னாளிகளில் ஒரு பகுதியினர் தங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு இதுவரை பட்டா கிடைக்காமல் இருந்து இன்று கிடைக்கப் பெற்று இருப்பீர்கள். மேலும் இதுவரை பட்டா கிடைக்காமல் வாடகை குடி யிருப்பில் இருந்தவர்க ளுக்கு இன்று பட்டா கிடைக் கப்பெற்று இருக்கும். இப்படி பல்வேறு நிலைக ளில் பட்டா பெறாமல் இருந்த பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் முதலமைச்சர் மீனவர் மாநாட்டிற்கு வருகை தந்த பொழுது சுமார் 4,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 5,375 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் 1,808 பேருக்கும் பட்டா வழங்கப் பட்டுள்ளது. நத்த பட்டா 1,086 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் இதுவரை வீட்டுமனை பட்டா வேண்டி சுமார் 4000 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அவர்களுக் கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    சட்டமன்ற உறுப்பினர் கள் வேண்டுகோளுக்கி ணங்க பொதுமக்களின் கோரிக்கைகளை தங்கள் பகுதிக்கு சென்று சிறப்பு முகாம் நடத்தி கோரிக்கை களை நிறைவேற்றிட கேட் டுக்கொண்டுள்ளார். அதே போல் ஊராட்சி பகுதிக ளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்க ளின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து 1,028 பயனா ளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராம நாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், புல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள் மற்றும் வட் டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்.
    • எல்லா உயிர்களையும் ஒன்றாக மதிக்க கூடிய சமூகத்தில் கருத்து வேறுபாடு இல்லை என்று கனிமொழி எம்.பி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா, சமய சமூக அரசியல் நல்லிணக்க விழா சின்னக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அமைச்சர்கள்

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். நூற்றாண்டு ஓருங்கிணைப்பு குழு ஜேம்ஸ்விக்டர், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும். மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், மேயர் ஜெகன் பெரியசாமி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், பெனோ வென்சர்ரோச், கான்ஸ்டான்டின் ரவீந்திரன், உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

    கனிமொழி எம்.பி.

    விழாவில் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு பேசியதாவது:-

    இன்று சமூகத்தில் இருக்க கூடிய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். எல்லா உயிர்களையும் ஒன்றாக மதிக்க கூடிய சமூகத்தில் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக சமூக மக்களின் ஆணிவேர் அடித்தளங்களை உடைத்து நொருக்கப்பட வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சி யோடு பணியாற்றுகின்றனர்.

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த விழா நடைபெறுகிறது. நான் படித்த கல்லூரியில் தான் ஜெயலலிதாவும் படித்தார். எங்கேயும் மதம் மாற வேண்டும் என்று யாரும் கட்டாயபடுத்தியது கிடையாது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் தான் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார்.

    பெரியாரின் கொள்கை

    நான் கல்லூரி படிக்கும் போது பெரியாரின் கொள்கையை பின்பற்றி அவ்வழியில் சென்றேன். பெண்கள் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்ட சமயங்களில் அவர்களுக்கான உரிமை, உடமை போன்ற பல்வேறு முடிவுகளுக்கு கிறிஸ்தவ சபை துணை நின்றது. பெரும் மகிழ்ச்சி என்னவென்றால் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் வேலையில் இங்கு மறைமாவட்ட நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    கலைஞர் கருணாநிதி சமூகநீதி ஓடுக்கப்பட்ட மக்க ளுக்காக விடிவெள்ளியாக இருந்தார். அதே வழியில் நீங்களும் பயணிக்க வேண்டும். எந்த நெருக்கடிகள் மற்றும் உழைப்பவர்களுக்குரிய பாகுபாடுகள், பிரிவினை, உரிமை பறிப்பு, சமூகநீதி, கருத்து சொல்லக்கூடாது போன்ற பிற்போக்கு சிந்தனையாளர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை.

    போராட்டங்கள், அடையாளங்கள், சுயமரி யாதை, இந்து, கிறிஸ்தவம், முஸ்ஸீம், அனைவரும் சாதி, மதம் கடந்து மனிதநேயத்தோடு பழகி வரும் வேளையில் அவற்றை பிரித்தாலும் சூழ்ச்சிக்கு நாம் இடமளிக்க கூடாது. கடந்து வந்த பாதையை மறக்காமல் நமது உரிமையை பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்கு தெரியும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது அடுத்து இந்தியாவை வழிநடத்த யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்று பேசிய உறுதியான முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் முன்னாள் மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ், துணை மேயர் ஜெனிட்டா, அகில இந்திய காங்கிரஸ் மீனவர் தேசிய செயலாளர் ஜோர்தான், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், தூத்துக்குடி மாவட்ட மீனவர் காங்கிரஸ் பி.சி.சி. உறுப்பினர் தலைவர் ஆன்றனி சுரேஷ், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.டி.எஸ். அருள், மாநகர் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜான்சன் தல்மெய்தா, துணைத்தலைவர் இருதயராஜ் மஸ்கர்னாஸ், செயலாளர் ஜோ பர்னாந்து, தூத்துக்குடி மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் தலைவர் ஐசன் சில்வா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன். மாநில வர்த்தக அணி இணைச்செய லாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம்,தி.மு.க. மீனவர் அணி இணை செயலாளர் புளோரன்ஸ் கலாபன்வாஸ், ஜேசையா வில்லவராயர், வக்கீல் கயஸ், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், பவாணி மார்ஷல், விடுதலை சிறுத்தை மாவட்ட தலைவர் அகமது இக்பால், பெரியார் திராவிட கழகம் பால்பிரபாகரன், கண்ணன் பட்டர், மாவட்ட அரசு ஹாஜி முஜீபர் ரகுமான், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்டக், ஹெர்மன்கில்ட், மற்றும் செந்தில்குமார், பேச்சிமுத்து, பிரபாகர், அல்பட், லிங்கராஜா, பெல்லா, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மறைமாவட்ட பொருளாளர் சகாயம், மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், நூற்றாண்டு வரவேற்பு குழு எட்வர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மைக்கேல் ஜெகதீசு நன்றி கூறினார்.

    முன்னதாக நூற்றாண்டு விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்து கடிதத்தை சபாநாயகர் அப்பாவு, மறைமாவட்ட ஆயரிடம் வழங்கினார்.

    • சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நூற்றாண்டு விழா நடந்தது.
    • தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பிரதமர், முதல்-அமைச்சர் துணை நிற்கின்றனர் என்று மத்திய மந்திரி பேசினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் தொழில் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    மதுரை தென்மண்டல அஞ்சலகத்தின் ஜெனரல் வி.எஸ்.ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் தென் பகுதிகளில் சிறப்புப்பெற்ற நகரமாக சிவகாசி திகழ்கிறது. அதற்குப் பட்டாசு, தீப்பெட்டி தொழில்களின் வளர்ச்சியே காரணமாகும். இந்த தொழில்கள் வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளன. ஆ.சண்முக நாடாரின் முயற்சியால் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனம் 1923-ல் தொடங்கப்பட்டது. முதலில் தீப்பெட்டி தொழிலே சிவகாசி மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது.

    இன்று இந்த நிறுவனம் படிப்படியாக உயர்ந்து அலுமினியத் துகள்களின் உற்பத்தி, ஆரோ வாட்டர், எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில் துறை களில் சிறப்புப்பெற்றுத் திகழ்கிறது. இந்த குழுமத்தின் முயற்சியால் காளீஸ்வரி அறக்கட்டளை நிறுவப்பட்டது. அதன்கீழ் காளீஸ்வரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

    காளீஸ்வரி குழுமத்தின் கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பணிபுரிகின்றனர். வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கை மேம்பா ட்டிற்கு இந்த நிறுவனங்கள் உதவிபுரிகின்றன.

    காளீஸ்வரி குழுமம் அமெரிக்கா, ஜப்பான் மெக்சிகோ, கனடா, தென்ஆப்பிரிக்கா, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளது. சிவகாசியின் அடையா ளங்களாகப் பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் உள்ளன.

    பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காளீஸ்வரி நிறுவனத்தின் இயக்குநர் அ.பா.செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினார். பெங்களூர் இஸ்ரோ யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரா சர்மா கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

    காளீஸ்வரி நிறுவனத்தின் இயக்குநர் சி.சண்முகநாதன் வரவேற்றார். இயக்குநர் எஸ்.சண்முக நடராஜ் நன்றி கூறினார்.

    • முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் பி.கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 கி.மீ தூரத்துக்கு மினி மாரத்தான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் 21 வயதிற்குட்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதுகுளத்தூர்- கடலாடி நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியை மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசும், 2-வது இடம் பிடித்தவருக்கு 5,100 ரொக்கப்பரிசும், 3-வது இடம் பிடித்தவருக்கு ரூ.3100 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

    10 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் முதல் பரிசாக ரூ.2,100-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3- பரிசாக ரூ.1,100-ம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் பூவலிங்கம் என்ற மாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தந்தை மாரியப்ப வாண்டையாரின் நினைவு தினம் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நாகராஜன், மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்துனர்.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன் வரவேற்றார். தென் மண்டல தலைவர் குஷி செந்தில் கொடியேற்றினார். மறத்தமிழர் சேனை மாநில துணை பொதுச்செயலாளர் ஆதி முத்துக்குமார், மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, நிர்வாகிகள் வையாபுரி, கருப்பையா, முத்துமணி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.

    • நெல்லை - திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23-ல் முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
    • நெல்லை, திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு சார்பில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    ஆறுமுகநேரி:

    நெல்லை - திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அயராது முயற்சி எடுத்தவர் அன்றைய காலகட்டத்தில் நெல்லை ஜில்லா போர்ட் மெம்பரான ஆறுமுகநேரி எஸ்.பி. பொன்னையா நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை, திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா ஆறுமுகநேரி ெரயில்வே வளர்ச்சி குழு சார்பில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. முருகேசபாண்டியன் வரவேற்று பேசுகிறார். ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் எஸ்.பி. பொன்னையா நாடார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, நாசரேத், நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களிலும் இந்த நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முக்கியமான நான்கு ரெயில்களின் முகப்பில் தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. ரெயில்வே பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு தலைவர் பி.ஆர்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் ரா.தங்கமணி , நிர்வாகி பி.எஸ்.முருகன் உள்பட பலர் செய்து வருகின்றனர்

    • முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேனாடு ஊராட்சி தலைவர் ஆல்வின் கலந்து ெகாண்டார். கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்விழி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் டோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.

    • விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
    • அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பள்ளி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றினைக்கும் பணியை கடந்த 3 மாதங்களாக மேற்கொண்டு 50 சதவிகித மாணவர்களை ஒன்றிணைத்து இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.  

    • 1200 பேருக்கு அன்ன கூடை வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெம்பாக்கம் மேற்கு, கிழக்கு, மத்திய, ஒன்றிய திமுக சார்பில் பெருங்கட்டூர் கிராமம், கலைஞர் திடலில் பொதுக் கூட்டம் மற்றும் நல திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்குஒ. ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜு, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனிவாசன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பேராசிரியரின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் 1200 அன்னக்கூடைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏஅன்பழகன், லோகநாதன், ஆர். வெங்கடேஷ் பாபு, நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர், ஞானவேல், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அசோக், ஆர்.வி. பாஸ்கரன், சான்பாஷா, சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் குப்புராஜ் நன்றி கூறினார்.

    • 1000 பேருக்கு அன்ன கூடை வழங்கப்பட்டது
    • திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புளிரம்பாக்கம் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், சேர்மன் நாவல் பாக்கம் பாபு, ஆர். வெங்கடேஷ் பாபு, ராம் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ஞானவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு பேராசிரியரின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும், எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் 1000 அன்ன கூடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், வேல்முருகன், லோகநாதன், நகர மன்ற தலைவர் மோகனவேல், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர், திராவிட முருகன், ரவிக்குமார், பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதவல்லி உதயசூரியன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் க.கனிமொழி, கென்னடி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ ஆறுமுகச்சாமி, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் சாமிதுரை ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக்அப்துல்லா, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தென்காசி கிழக்கு அழகுசுந்தரம், தென்காசி மேற்கு வல்லம் திவான் ஒலி, சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் குற்றாலம் பேச்சிமுத்து, பண்மொழி ஜபருல்லாகான், தென்காசி கோமதிநாயகம், கொட்டாகுளம் இசக்கி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×