search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டா
    X

    நிகழ்ச்சியில் 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கிய காட்சி. அருகில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ராம.கருமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டா

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,028 பயனாளிகளுக்கு இ-பட்டாவை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.
    • பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி ஊராட்சி, அண்ணா பல்க லைக்கழக பொறியியல் கல் லூரி கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை துறை யின் மூலம் டாக்டர் கலை ஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எம்.எல்.ஏ.க்கள் ராமநாத புரம் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி செ. முருகேசன், திருவா டானை ராம.கருமாணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    டாக்டர் கலைஞரின் நூற் றாண்டு விழாவையொட்டி பல்வேறு கட்டங்களாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநா தபுரம் வருவாய் கோட்டத் திற்கு உட்பட்ட ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்க லம், திருவாடனை, ராமேசுவ ரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 1028 பயனாளிக ளுக்கு இ-பட்டா வழங்கப்ப டுகிறது.

    இதில் பயன்பெறும் பய னாளிகளில் ஒரு பகுதியினர் தங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு இதுவரை பட்டா கிடைக்காமல் இருந்து இன்று கிடைக்கப் பெற்று இருப்பீர்கள். மேலும் இதுவரை பட்டா கிடைக்காமல் வாடகை குடி யிருப்பில் இருந்தவர்க ளுக்கு இன்று பட்டா கிடைக் கப்பெற்று இருக்கும். இப்படி பல்வேறு நிலைக ளில் பட்டா பெறாமல் இருந்த பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் முதலமைச்சர் மீனவர் மாநாட்டிற்கு வருகை தந்த பொழுது சுமார் 4,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 5,375 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் 1,808 பேருக்கும் பட்டா வழங்கப் பட்டுள்ளது. நத்த பட்டா 1,086 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் இதுவரை வீட்டுமனை பட்டா வேண்டி சுமார் 4000 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அவர்களுக் கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    சட்டமன்ற உறுப்பினர் கள் வேண்டுகோளுக்கி ணங்க பொதுமக்களின் கோரிக்கைகளை தங்கள் பகுதிக்கு சென்று சிறப்பு முகாம் நடத்தி கோரிக்கை களை நிறைவேற்றிட கேட் டுக்கொண்டுள்ளார். அதே போல் ஊராட்சி பகுதிக ளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்க ளின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து 1,028 பயனா ளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராம நாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், புல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள் மற்றும் வட் டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×