search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Centennial celebration"

    • வேலூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது
    • கூடுதல் தலைமை செயலர் ஆலோசனை

    வேலூர்:

    வேலூரில் சுருணா நிதி நூற்றாண்டு விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த விழா முன்னேற்பாடுகள் குறித்து நீர்வளத் துறை அரசு கூடு தல் தலைமைச் செயலர் சந்தீப் சக் சேனா தலைமையில் ஆலோசனை நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 'பகுத் தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர்' என்ற தலைப்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொள்கிறார்.

    இது தொடர்பாக லெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத் தில் நீர்வளத் துறை கூடுதல் செய லர் மலர்விழி, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் மிகச் சிறப்பாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூரில் கொண்டாடப்பட உள்ளது. இதைச் சிறப்பாகக் கொண்டாட நீர்வளத் துறை அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த விழா சிறப்பு மலரும், ஒரு குறும்படமும் வெளி யிடப்பட உள்ளது என்றார். முன்னதாக விழா நடைபெறும் நகர அரங்கம், தனியார் மஹாலை சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

    அப்போது, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், நீர்வளத் துறை சிறப்பு செயலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க சார்பில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று இரவு முத்துக்கடை பஸ் நிலையத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

    கருணாநிதியின் நிலைத்த புகழுக்கு காரணம் இலக்கிய பணியே, மக்கள் பணியே என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் இலக்கிய பணியே என்ற தலைப்பில் ராஜ்குமார், கவிதா ஜவகர், மக்கள் பணியே என்ற தலைப்பில் ரேவதி சுப்புலட்சுமி, கருணாநிதி ஆகியோர் பேசினர்.

    புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக பங்கேற்று கருணாநிதியின் மக்கள் பணிகள் நினைவில் இருக்கும், இலக்கிய பணி நிலைத்து இருக்கும் எனவே நிலைத்து நிற்கும் இலக்கிய பணியே சிறந்தது என தீர்ப்பு வழங்கினார்.

    இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, எம்.எல்.ஏ, ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர செயலாளர் பூங்காவனம் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமையில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் அணி சார்பில் பொதுமக்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் பழச்செடிகள் மற்றும் விதைகளை மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ர மணன், ஜி.கே.உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, மாவட்ட துணை செயலாளர் அமுதா, நகர செயலாளர் பூங்காவனம், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வாலாஜா நகர செயலாளர் தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் வேதா சீனிவாசன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து முத்துக்க டையில் நகர திமுக சார்பில் அல ங்கரிக்கப்பட்ட அன்பழகன் உருவபடத்திற்கு வினோத் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

    • அரக்கோணம் நகர தி.மு.க. சார்பில் நடந்தது
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டை பகுதி பிள்ளையார் கோயில் அருகே பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம நகர செயலாளர் வி.எல்.ஜோதி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பங்கேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி, தலைமை கழக பேச்சாளர் சேப்பாக்கம் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு கண்ணையன், முன்னாள் மாவட்ட துணைத் செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், சௌந்தர், வடிவேலு பசுபதி, பெருமாள், நாகராஜன், ஜனார்த்தனன், என் ஆர் சீனிவாசன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×