என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bill"
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.80 லட்சத்து 79 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
- தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.இங்கு ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த வருடம் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடந்தது. விழா நேற்று முடிந்த நிலையில் ேகாவிலில் வைக்கப்பட்டிருந்த 4 தற்காலிக உண்டியல், 10 நிரந்தர உண்டியல், ஒரு கால்நடை உண்டியல், ஒரு அன்னதானம் உண்டியல் ஆகியவை கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.80 லட்சது 79 ஆயிரத்தி 888 பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.
இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர், இந்து அறநிலைய துறை கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் கோவில் அறங்காவலர் குழு தலை வர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு வினர், ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வை யிட்டனர்.
- குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது.
- பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்களை எண்ணப்பட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி மற்றும் காசி விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்கள் எண்ணப்பட்டது. தக்கார் நவீன்ராஜா, ஆய்வர் வடிவுக்கரசி, செயல் அலுவலர் சின்னசாமி, கோவில் எழுத்தர் ஸ்ரீ சைல வெங்கடேச முருகன், அர்ச்சகர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ரொக்கம் மற்றும் நாணயங்கள் சேர்த்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 995 ரூபாய் இருந்தது. இந்த தொகையை முறைப்படி அரசிடம் சேர்க்கப்பட்டது.
- மேச்சேரி அருகே கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 பேர் கைது செய்தனர்.
- திருட முயன்ற மர்ம நபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வசக்தி. இவர் இந்த கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகே ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது,
இக்கோவில் நுழைவு வாயில் கேட்டினை 2 நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டனர். இதை கண்ட செல்ல சக்தி உடனே சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு அங்கு வந்து திருட முயன்ற மர்ம நபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இவர்கள் இருவரும் சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் தீபன்ராஜ் ( வயது 23) மற்றொருவர் தீபக் (23) என்பதும், இவர்கள் இருவரும் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து 2 பேரையும் பொதுமக்கள் மேச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
- உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. திருச்செ–ங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையில், கோவில் தக்கார் பிரதிநிதி குகன், கோவில் செயல் அலுவலர் அருள்குமார், பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
இதில், நிரந்தர உண்டியலில் 20 லட்சத்து 72 ஆயிரத்து 546 ரூபாய் பணமும், 34 கிராம் தங்கம் மற்றும் ஆயிரத்து 953 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
அதேபோல் திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 627 ரூபாய் பணம் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல் களிலும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 173 ரூபாயினை பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.
- கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது.
- அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் தாலுகா சித்திரங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. உலக நாயகி அம்மன் கோவில். இங்கு சில தினங்களுக்கு முன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் உண்டியலில் அதிக அளவில் காணிக்கை செலுத்தினர்.
இந்த நிலையில் திருவிழா முடிந்த மறுநாள் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற போவதாக அறிவித்தார் ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை மறுநாள் (29-ந் தேதி) பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதன் முதல் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... ஜெயலலிதா வீட்டு சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்- கலெக்டரிடம் தீபா, தீபக் மனு
பத்ராவதி அருகே நள்ளிரவில் கோவில் மணியை பசுமாடு அடித்த வீ்டியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ளது, டி.பி.ஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரபத்ரேஸ்வரா சுவாமி மற்றும் முக்தே சங்கமேஷ்வரா சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் ஒரு பசுமாடு கோவிலை நோக்கி வருகிறது. பின்னர் அந்த பசுமாடு கோவில் முன்பு கட்டியுள்ள மணியை தனது தலையால் முட்டி அடித்துவிட்டு, சில வினாடிக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது.
அந்த பசு மாடு, அதே பகுதியை சேர்ந்த மஞ்சப்பா என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:-
12-ம் நூற்றாண்டில் நலத்திட்ட புரட்சி நடந்த போது சரண தொம்பர சென்னம்மா என்பவர் எங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனால் எங்கள் கிராமத்திற்கு தொம்பர பைரனஹள்ளி என பெயர் வந்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இத்தகைய பெயர் பெற்ற எங்கள் ஊரில் வீரபத்ரேஸ்வரா சாமி ேகாவில் உள்ளது. இந்த கோவிலில் குறி கேட்டால் சரியாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் அவ்வப்போது கோவிலில் அதிசயங்களும் நடந்து வருகிறது. அதன்படி தான் தற்போது கோவில் மணியை பசுமாடு அடித்துள்ளது. இது தெய்வீக சக்தியால் மட்டுமே நடந்துள்ளது. இதனால் வீரபத்ரேஸ்வரா சாமி மீது இருந்த தெய்வீக பக்தி எங்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து டிசம்பர் 30-ந் தேதி அவர்களது பதவி காலத்தை 6 மாதம் நீட்டிக்க கவர்னர் அவசர சட்டம் பிறப்பித்தார்.
இந்த நிலையில் தனி அதிகாரிகளின் 6 மாத பதவி காலத்தை ஜூன் 30-ந் தேதி வரை நீடிப்பதற்கான சட்டதிருத்த மசோதாவை சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். #TNAssembly
இஸ்லாமியர்களிடையே நிலவும் ‘உடனடி முத்தலாக்’ மூலம் விவாகரத்து செய்யும் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் மசோதா, கடந்த 17-ந் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, சில எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கிடையே, கடந்த 27-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையிலும் நிறைவேறினால்தான், மசோதா சட்ட வடிவம் பெறும். எனவே, முத்தலாக் தடை மசோதாவை, மாநிலங்களவையில் இன்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார்.
மாநிலங்களவையில், ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. 245 உறுப்பினர்களை கொண்ட சபையில், பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பா.ஜனதா கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள்தான் இருப்பதாக தெரிகிறது. எனவே, எந்த அணியையும் சேராத கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்து மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது.
மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார். சபையில் இன்று தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மாநிலங்களவையில் மசோதாவை தோற்கடிப்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை தோற்கடிப்பதில் மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுவோம். மக்களவையில் 10 கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அரசுக்கு ஆதரவான அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தற்போதைய வடிவத்தில் மசோதாவை நிறைவேற்ற விட மாட்டோம்” என்றார்.
முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறாமல் சபைக்கு வருமாறு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, முத்தலாக் மசோதாவுக்கு அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவி சாயிஸ்டா அம்பர் கூறியதாவது:-
முத்தலாக் சட்டம், குரான் சொன்னபடி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதில், உடன்பாட்டுக்கான வாய்ப்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக, ஆண்களை தண்டிப்பதற்கே முக்கியத்துவம் அளித்தால், நாங்கள் போராட்டம் நடத்துவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடும்பங்கள் அழிந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மலைப்பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 11 மணி நேரமும் ரூ.300 டிக்கெட் எடுத்த பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று ஏழுமலையானை 70,713 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். #Tirupati
தொழுநோயால் பாதிக்கப்படவர்களை அவர்களது உறவினர்கள் உட்பட ஏறத்தாழ அனைவருமே ஒதுக்கி வைக்கும் ஒரு சூழல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு ஐ.நா ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில் இதுபோன்ற தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்க கூடாது என தெரிவித்திருந்தது.
அதேபோல், சமீபத்தில் உச்சநீதிமன்றமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை சீர்செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய சட்டமசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய சட்டத்துறை மந்திரி பி.பி சவுத்ரி தாக்கல் செய்த இந்த மசோதாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநிலங்களவை மனு சீராய்வுக்குழு, தேசிய சட்ட ஆணையம், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் பரிந்துரையின் அடிப்படையில், தனிநபர் சட்டத்தில் இருந்து தொழுநோயாளிகள் பிரிவை நீக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabha
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்