search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைக்க"

    • மேச்சேரி அருகே கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 பேர் கைது செய்தனர்.
    • திருட முயன்ற மர்ம நபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வசக்தி. இவர் இந்த கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகே ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது,

    இக்கோவில் நுழைவு வாயில் கேட்டினை 2 நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டனர். இதை கண்ட செல்ல சக்தி உடனே சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு அங்கு வந்து திருட முயன்ற மர்ம நபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இவர்கள் இருவரும் சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் தீபன்ராஜ் ( வயது 23) மற்றொருவர் தீபக் (23) என்பதும், இவர்கள் இருவரும் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து 2 பேரையும் பொதுமக்கள் மேச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    ×