search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி"

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    ஊரக உள்ளாட்சி பதவிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கு 7 உறுப்பினர்களை குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி யில் உள்ள 98 வார்டு உறுப்பினர்கள், 51 பேரூராட்சியில் உள்ள 826 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்வார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங் கத்திலும், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலக கட்டிட முதல் மாடியில் அமைந்து உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவல கத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் 51 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் 3 பேர் வாக்களிக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது.

    வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், குளச்சல், பத்ம நாபபுரம், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி மற்றும் 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் நாஞ்சில் கூட்டரங்கத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர்.

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் 5 வாக்குகளும், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 7 வாக்குகளையும் செலுத்தினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடக்கிறது.வாக்கு பதிவு மையத்திற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    வாக்கு பதிவு முடிந்ததும் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்தின் முதல் மாடியில் அமைந் துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் விபரம் தெரியவரும். திட்டக்குழு தேர்தல் நடைபெற்றதை யடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • 6 ஆயிரத்து 598 வாக்காளர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். இங்கு பதிவான வாக்குகள் சேலம் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் சேலம் ஒன்றிய அலுவலகம், காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் மற்றும் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    6 பதவிகள்

    மீதம் உள்ள சேலம் ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சிகளில் காடையாம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி 7-வது வார்டு, தலைவாசல் ஒன்றியம் தேவியாக்குறிச்சி 2-வது வார்டு, கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டு, மேச்சேரி ஒன்றியம் கூணான்டியூர் 7-வது வார்டு, பொட்டனேரி 6-வது வார்டு ஆகிய–வற்றிற்கு நேற்று முன்தினம் வாக்கப்பதிவு நடந்தது.

    சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியில் உள்ளார். அ.தி.மு.க.ைவ சேர்ந்த வெங்கடேஷ் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினையால் இரட்டை இலை சின்னம்

    கிடைக்காதால் சுயேட்சை–யாக போட்டியிட்டு உள்ளார். இங்கு 6 ஆயிரத்து 598 வாக்காளர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். இங்கு பதிவான வாக்குகள் சேலம் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    நடுப்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் 346வ ாக்குகளும், தேவியாக்குறிச்சி 2-வது வார்டில் 202 வாக்குகளும், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் 198 வாக்குகளும், கூணான்டியூர் 7-வது வார்டில் 370 வாக்குகளும் , பொட்ட னேரி 6-வது வார்டில் 275 வாக்குகளும் பதிவானது. இந்த வாக்கு சீட்டுகள் அந்தந்த ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .

    நாளை வாக்கு எண்ணிக்கை

    இதையடுத்து நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் சேலம் ஒன்றிய அலுவலகம், காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் மற்றும் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள்ஈடுபட்டு உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முடிவு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில், அனைத்து நிலை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலர்களுக்கு, ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சி வழங்கப்படுகிறது.
    • 12-ந்தேதி முதல், 14ந் தேதி வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செல்வதற்கான முயற்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது பெரும் சவாலாக மாறிவரும் நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள அரசு ஊக்குவித்து வருகிறது.

    சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில், அனைத்து நிலை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலர்களுக்கு, ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சி வழங்கப்படுகிறது.அதன்படி பேரூராட்சி அலுவலர்களுக்கு நாளை , 12-ந்தேதி முதல், 14ந் தேதி வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செல்வதற்கான முயற்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறிப்பிட்ட அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இப்பயிற்சியில் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட இருக்கிறது.

    உள்ளாட்சிகளில் மாசுபாடு குறைத்தல் தொடர்பான திட்டங்களை வகுப்பது, இயற்கை வளங்கள், காடுகளை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை வகுப்பது, அனைத்து உயிரினங்களும் அவற்றின் இயற்கையான வழித்தடங்களில் பயணிக்கவும், வாழவும் வழிகாட்டும் வகையிலான திட்டங்களை தீட்டுவது ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.தவிர இயற்கை உரம் தயாரிப்பு, மாடித்தோட்டம், இயற்கை முறையில் சோப்பு தயாரிப்பது, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணி சார்ந்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 36-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
    • அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    செங்கல்பட்டு:

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 14 ஊரக உள்ளாட்சி பதவிகளும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் பதவியும் காலியாக உள்ளன. இந்த 15 பதவிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடந்தது.

    3 மாவட்டங்களிலும் இன்று காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்லச்செல்ல வாக்குப் பதிவு விறுவிறுப்பு அடைந்தது.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 36-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம. மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, ஒரு சுயேட்சை என 6 பேர் போட்டி போடுகிறார்கள். இதில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த வார்டில் 2,154 ஆண் வாக்காளர்கள், 2,356 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4,510 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள தியாகி நடுநிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுளன.

    ஓட்டுபோட வந்த வாக்காளர்கள் முககவசம் அணிந்து வந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தனர். இன்று மாலை 5 மணிமுதல் மாலை 6 மணி வரை கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து வாக்களித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிவபுரம் ஊராட்சியில் 5-வது வார்டில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. இங்கு 2 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காலை முதல் பொதுமக்கள் வந்து வாக்களித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான 15-வது வார்டில் பாக்கம் மற்றும் சிலாவட்டம் ஊராட்சி ஆகியவை உள்ளன. இந்த வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என 6 பேர் போட்டியிடுகின்றனர்.

    இங்கு 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் ரூ.3,800 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு காலையில் இருந்தே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திம்மாவரம் ஊராட்சியில் உள்ள 4-வது வார்டுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேட்சையாக 2 பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். இங்கு அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியிலும் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடைபெற்றது.

    நன்மங்கலம் ஊராட்சியில் 2,850 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு தி.மு.க., பா.ஜனதா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 4 பேர் போட்டியிட்டனர். இங்கு வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டு வருகிறார்கள். இதேபோல் திரிசூலம் 1-வது வார்டுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர் 10-வது வார்டு பதவிக்கும், பொன்பதிர் கூடம் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் மேல் ஊராட்சியில் 3-வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை என 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

    காலை 7 மணிக்கு அகரம் மேல் சன்னதி தெருவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள்.

    மீஞ்சூர் ஒன்றியம் மெதுர் ஊராட்சியில் காலியாக உள்ள 3-வது வார்டில் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு 328 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள அரசு பள்ளியில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 8 மணி வரை ஓட்டுபோட யாரும் வரவில்லை. அதன்பிறகு ஒருசில வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர்.

    சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இங்கு 1014 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 4 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காந்திநகர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிகரம் 1-வது வார்டில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் இன்று இடைத்தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் விதி மீறல்களை தடுக்க பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் இணையவழி, கண்காணிப்பும், மற்ற வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.சி. கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுகின்றன. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 12-ந்தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 6 பதவிக்கு 29 பேர் போட்டி, 9-ந் தேதி வாக்குப்பதிவு

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்தது.

    இந்த நிலையில் சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி நடக்கிறது.

    • ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் சேலம் மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில் காலி பதவி இடங்களுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் சேலம் ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஊராட்சி பதவிகளில் பூவனூர் 3-வது வார்டுக்கு ஒருவர், நடுப்பட்டி 7-வது வார்டு, கூனாண்டியூர் 7-வது வார்டு, கீரிப்பட்டி 6-வது வார்டு ஆகியவற்றிற்கு தலா 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.புல்லா கவுண்டம்பட்டி 7-வது வார்டு ஒருவர், தேவியாக்குறிச்சி 2-வது வார்டுக்கு ஒருவர், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் ஒருவர், இளவம்பட்டி 5-வது வார்டு ஒருவர், நீர்முள்ளிகுட்டை 6-வது வார்டு ஒருவர் என 12 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    மின்னாம்பள்ளி 3-வது வார்டு பொட்டனேரி, 6-வது வார்டு ஒருவர் கூட இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.A

    • பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
    • .விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    தமிழக அரசு 2016ம் ஆண்டுக்கு முன் கிரயம் செய்த வீட்டுமனைகளை அங்கீகாரம் செய்து கொள்ள அவகாசம் வழங்கியது. விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டுமனை வரன்முறை செய்யப்படுகிறது. இருப்பினும் கிராமப்புறத்தில் உள்ள வீட்டுமனைகளைவரன்முறை செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. மனை உரிமையாளர்கள் எவ்வித அங்கீகாரம் செய்வது குறித்து விழிப்புணர்வு இல்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் நகரையொட்டியுள்ள ஊராட்சிகளில் வீட்டுமனை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இதனால் சற்று தொலைவில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்கு வீட்டுமனை வாங்கினர்.கடந்த 2016க்கு பின் அங்கீகாரம் பெற்ற மனைகள் மட்டுமே விற்கப்படுகிறது. முறையான அங்கீகாரம் பெறாமல் இருக்கும் மனைகளை, மனை உரிமையாளர்கள் வரன்முறை செய்து கொள்ளலாம் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    வீட்டுமனை உரிமையாளர், மனை ஒன்றுக்கு பரிசீலனை கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். வளர்ச்சி கட்டணமாக சதுர மீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கணக்கிட்டு, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அரசுக்கு சேர வேண்டிய வரன்முறை கட்டணமாக சதுர மீட்டருக்கு, 45 ரூபாய் வீதம் கணக்கிட்டுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

    இதுகுறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அங்கீகாரமற்ற வீட்டுமனையை வரன்முறை செய்துகொள்ளலாம். ஊராட்சிகளில் அதற்கான சலான்களை பெற்றுபூர்த்தி செய்து அந்தந்த வங்கிகளில் செலுத்த வேண்டும்.விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு நடைமுறைகள் எளிதாக மாற்றப்பட்டுள்ளன. மனை உரிமையாளர்இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×