search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union"

    • சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

    சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.

    இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

    எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    • மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற் சங்கத்தினர் அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப போனஸ் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்தல், காலி பணி யிடங்களை நிரப்புதல் உள் ளிட்ட 6 அம்ச கோரிக் கையை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    மதுரை கோட்ட பொரு ளாளர் சரவணன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். அதைதொடர்ந்து, நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.

    இதில் தலைவராக அய்யப்பன், செயலாளராக முனியாண்டி, பொருளாள ராக கேசவன்துரை, உதவி செயலாளராக செல்லத் துரை உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உடுமலை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் , பொதுமக்கள் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது.அதைத்தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 839 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பால சுப்பிரமணியம், துணைத்தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராகல்பாவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமை வகித்தார். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ) கலந்து கொண்டார்.

    இதே போன்று சின்னவீரன் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையிலும் பூலாங்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவை சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
    • சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் சலவை படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நெடுஞ்சாலை துறையிலே பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநில நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரபோஸ், மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி ஒன்றியத்திற்கு பொறுப்பு சேர்மன் பதவியேற்றார்.
    • கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

    இதுகுறித்து விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்ப ட்டது. அதனை ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார்.

    அந்த அறிக்கையை பரிசீலனை செய்த ஊரக தழிலும் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து சேர்மன் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் இல்லாததால் பல மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய நிர்வாக நலன் கருதி துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை சேர்மனாக (பொறுப்பு) செயல்பட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மனாக அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், வாசுகி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் அம்மன்பட்டி, அரசு அலுவலர்கள்,கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நரிக்குடி ஒன்றிய புதிய சேர்மனான அம்மன்பட்டி ரவிச்சந்திரனுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    அம்மன்பட்டி மற்றும் உடைய சேர்வைக் கார் பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொறுப்பு சேர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டிட அலங்கார பொருட்கள் கண்காட்சி வருகிற 7 ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்திரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் சிவசுப்ரமணி, திருமலைசாமி, குணசேகரன், செந்தில்குமார், ஆலோசகர் ஹேமந்த்ராம் உட்பட பலர் கூறியதாவது:

    திருப்பூரில் முதன் முறையாக கட்டடங்களுக்கான எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் கட்டுமானப் பொருட்களுக்கான கண்காட்சி வரும், 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடக்கவுள்ளது.

    காலை 10 முதல் இரவு 8 மணி வரை இக்கண்காட்சியை பார்வையிடலாம். திருப்பூர் மேயர் தினேஷ்குமார், முன்னணி கட்டட கலை நிபுணர் பிரசன்னா பர்வதிகர் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். தேசிய வர்த்தக வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம், 'ஆர்ம்ஸ்ட்ராங்' பழனிசாமி, 'சக்தி பிலிம்ஸ்' சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

    இந்த கண்காட்சியில் தமிழகம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொருள், கட்டட உள் மற்றும் வெளி அலங்கார பொருள் விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் அமையவுள்ளது. ஸ்மார்ட் ஹோம், ஹோம் தியேட்டர், கிச்சன் வேர்ஸ், 'ஏசி', அலங்கார விளக்குகள், மார்பிள் மற்றும் டைல்ஸ், பசுமை தொழில் நுட்பம் சார்ந்த பொருட்கள், அனைத்து அறைகளுக்கான அலங்கார பொருட்கள், மெத்தைகள் என அரங்குகள் பல வகையிலும் அமைகிறது.

    விரிவான பார்க்கிங், குழந்தைகள் விளையாட்டு பகுதி, குலுக்கல் அதிர்ஷ்டப்பரிசு ஆகியவற்றுடன், தினமும் மாலை நேரம் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வாடிப்பட்டி யூனியன் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார்.

    துணை சேர்மன் தனலட்சுமி கண்ணன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) வனஜா வரவேற்றார். கணக்கர் சங்கர் தீர்மான அறிக்கை வாசித்தார்.

    இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். 15-வது நிதி குழு வளர்ச்சி திட்ட பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை, தோட்டக்கலை, போக்கு வரத்து உள்ளிட்ட பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் ராதா நன்றி கூறினார்.

    • 11 யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினர்.
    • பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கூடுதல் தலைமை செயலர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, மேலாண்மை இயக்குநர்(குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா,

    எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜ பாளையம் தங்கப் பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களை் சேர்ந்த 1,286 குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சேர்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    ரூ.48.39 கோடியில் சாத்தூர் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்க டைத் திட்டம், ரூ.251.20 கோடியில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டங்களையும் அமைச் சர்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் ராஜபா ளையம், ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சா த்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகள் பயன்பெற உள்ளன. இதற்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகில் தாமிரபரணி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட உள்ளது. நீர் சேகரிப்பு கிணற்றின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக வடக்கு குருவிக்குளம் நகர் கிராமத்தில் அமையவுள்ள 17.90 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள உயர்மட்ட மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து 2 பொது தரைமட்ட நீர் உந்து நிலையம் மற்றும் 163 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி களுக்கு 2519.29 கி.மீ நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதில் சாத்தூர் நகராட்சி 3 மண்டலங்கலாக பிரிக்கப்பட்டு, நகரத்தில் உற்பத்தியாகும் கழிவு நீரை பாதாள சாக்கடை திட்ட த்தின் மூலம் சேகரிக்கப்பட உள்ளது. இதில் 6 ஆயிரத்து 500 வீடுகளின் மூலம் உருவாக கூடிய கழிவுநீர் 26.958 கி.மீ. நீளமுள்ள கழிவு நீர் குழாய்கள், 1102 எந்திரங்களை இறக்கும் குழிகள் மற்றும் 3 கழிவு நீரேற்று நிலையங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, இருக்கன்குடி ரோட்டில், நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

    ராஜபாளையம் பாதாள சாக்கடை திட்டத்தில் 38,586 வீட்டு இணைப்புகள் மூலம், 5,865 எந்திரத்தை இறக்கும் குழிகளில் இருந்து, கழிவு நீர் உந்து குழாய்கள் மூலம் பெறப்படும் கழிவு நீர், 3 நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 4 கழிவு நீர் உந்து எந்திரத்தை இறக்கும் குழிகள் மூலமாக உந்தப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், குழாய்கள் மூலம் கொத்தன்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப் பணித்துறை குளத்தில் சேர்க்கப்படும்.

    இந்த பாதாளச் சாக்கடைத்திட்டம் மூலம் நகராட்சியில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நிலங்கள் அசுத்தம் அடை யாமல் பாதுகாப்பான தாகவும், தூய்மையாகவும் அமையும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தலைமைப் பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், மதுரை) ரகுபதி, மேற்பார்வை பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், கோவில்பட்டி) செந்தூர்பாண்டி, நகர்மன்றத் தலைவர்கள் குருசாமி(சாத்தூர்), பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமிற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், சரஸ்வதி, நெல்கட்டும்செவல் ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டியராஜா, விஸ்வ நாதபேரி ஊராட்சிமன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சரவணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய அலுவலர்கள், வேளா ண்மைத்துறை, வனத்துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிளை செயலாளர்கள், மகேந்திரன், ஸ்டாலின், மணிகண்டன், விக்கி, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மதுரை

    உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுமக்களுக்கு படிப்பகம் மற்றும் தொழிற்சங்க கொடி ஏற்றி பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சொக்கர், பேரவை மண்டல அமைப்பாளர் சரவணன், 62-வது வட்டச் செயலாளர் ஆரான் ஆகியோர் செய்திருந்தனர்.

    மாவட்டச் செயலாளர்கள் முனியசாமி, மணி, பிச்சைமணி தொழிலாளர் அணி மண்டல அமைப் பாளர்-தொழிலாளர்கள் அணி மாவட்ட அமைப் பாளர்கள் பாண்டியன், மயில்ராஜ், ரமேஷ் மற்றும் அணியின் மண்டல அமைப் பாளர்கள் செல்லப்பாண்டி, சிவபாலகுரு, கிருஷ்ண குமார், பத்மா, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், கொடிக்குளம், உரத்தூர்,கோரை குளம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீரை முறையாக விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றார். துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகையில், அரியக்குடி, முத்துச்செல்லாபுரம், அ.புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டுக் குழு நீர் வரவில்லை என்றார்.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர்: சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. கோடையை காலம் என்பதால் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி போகலூர் யனியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு மழை காலத்திற்குள் அனைத்து சாலைகளும் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பழுதடைந்த சாலைகள் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழை காலத்திற்கு முன்பாக அனைத்து அத்தியாவாசிய தேவைகளுக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதில் கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேசுவரி, காளீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    • ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை உடன் அமல் படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை மத்தியஅரசு வழங்கிய நாளிலிருந்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடன் வழங்க வேண்டும், ஓய்வூதியர் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்கர் விருதாளர் பாண்டுரங்கன், மாவட்ட நிர்வாகிகள் மகாராஜன், வை.சிற்றரசு, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனி, வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். ஜெயபாலு நன்றி கூறினார்.

    ×