search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    11 யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம்
    X

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களை சேர்ந்த 1,286 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்துக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அடிக்கல் நாட்டினர். அருகில் கலெக்டர் ஜெயசீலன் மற்றும் பலர் உள்ளனர். 

    11 யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம்

    • 11 யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினர்.
    • பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கூடுதல் தலைமை செயலர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, மேலாண்மை இயக்குநர்(குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா,

    எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜ பாளையம் தங்கப் பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களை் சேர்ந்த 1,286 குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சேர்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    ரூ.48.39 கோடியில் சாத்தூர் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்க டைத் திட்டம், ரூ.251.20 கோடியில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டங்களையும் அமைச் சர்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் ராஜபா ளையம், ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சா த்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகள் பயன்பெற உள்ளன. இதற்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகில் தாமிரபரணி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட உள்ளது. நீர் சேகரிப்பு கிணற்றின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக வடக்கு குருவிக்குளம் நகர் கிராமத்தில் அமையவுள்ள 17.90 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள உயர்மட்ட மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து 2 பொது தரைமட்ட நீர் உந்து நிலையம் மற்றும் 163 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி களுக்கு 2519.29 கி.மீ நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதில் சாத்தூர் நகராட்சி 3 மண்டலங்கலாக பிரிக்கப்பட்டு, நகரத்தில் உற்பத்தியாகும் கழிவு நீரை பாதாள சாக்கடை திட்ட த்தின் மூலம் சேகரிக்கப்பட உள்ளது. இதில் 6 ஆயிரத்து 500 வீடுகளின் மூலம் உருவாக கூடிய கழிவுநீர் 26.958 கி.மீ. நீளமுள்ள கழிவு நீர் குழாய்கள், 1102 எந்திரங்களை இறக்கும் குழிகள் மற்றும் 3 கழிவு நீரேற்று நிலையங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, இருக்கன்குடி ரோட்டில், நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

    ராஜபாளையம் பாதாள சாக்கடை திட்டத்தில் 38,586 வீட்டு இணைப்புகள் மூலம், 5,865 எந்திரத்தை இறக்கும் குழிகளில் இருந்து, கழிவு நீர் உந்து குழாய்கள் மூலம் பெறப்படும் கழிவு நீர், 3 நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 4 கழிவு நீர் உந்து எந்திரத்தை இறக்கும் குழிகள் மூலமாக உந்தப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், குழாய்கள் மூலம் கொத்தன்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப் பணித்துறை குளத்தில் சேர்க்கப்படும்.

    இந்த பாதாளச் சாக்கடைத்திட்டம் மூலம் நகராட்சியில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நிலங்கள் அசுத்தம் அடை யாமல் பாதுகாப்பான தாகவும், தூய்மையாகவும் அமையும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தலைமைப் பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், மதுரை) ரகுபதி, மேற்பார்வை பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், கோவில்பட்டி) செந்தூர்பாண்டி, நகர்மன்றத் தலைவர்கள் குருசாமி(சாத்தூர்), பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×