search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் திருப்பூரில் கட்டிட அலங்கார பொருட்கள் கண்காட்சி 7-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது
    X

    கண்காட்சி கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களின் காட்சி.

    கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் திருப்பூரில் கட்டிட அலங்கார பொருட்கள் கண்காட்சி 7-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டிட அலங்கார பொருட்கள் கண்காட்சி வருகிற 7 ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்திரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் சிவசுப்ரமணி, திருமலைசாமி, குணசேகரன், செந்தில்குமார், ஆலோசகர் ஹேமந்த்ராம் உட்பட பலர் கூறியதாவது:

    திருப்பூரில் முதன் முறையாக கட்டடங்களுக்கான எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் கட்டுமானப் பொருட்களுக்கான கண்காட்சி வரும், 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடக்கவுள்ளது.

    காலை 10 முதல் இரவு 8 மணி வரை இக்கண்காட்சியை பார்வையிடலாம். திருப்பூர் மேயர் தினேஷ்குமார், முன்னணி கட்டட கலை நிபுணர் பிரசன்னா பர்வதிகர் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். தேசிய வர்த்தக வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம், 'ஆர்ம்ஸ்ட்ராங்' பழனிசாமி, 'சக்தி பிலிம்ஸ்' சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

    இந்த கண்காட்சியில் தமிழகம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொருள், கட்டட உள் மற்றும் வெளி அலங்கார பொருள் விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் அமையவுள்ளது. ஸ்மார்ட் ஹோம், ஹோம் தியேட்டர், கிச்சன் வேர்ஸ், 'ஏசி', அலங்கார விளக்குகள், மார்பிள் மற்றும் டைல்ஸ், பசுமை தொழில் நுட்பம் சார்ந்த பொருட்கள், அனைத்து அறைகளுக்கான அலங்கார பொருட்கள், மெத்தைகள் என அரங்குகள் பல வகையிலும் அமைகிறது.

    விரிவான பார்க்கிங், குழந்தைகள் விளையாட்டு பகுதி, குலுக்கல் அதிர்ஷ்டப்பரிசு ஆகியவற்றுடன், தினமும் மாலை நேரம் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×